Sunday 6 May 2012

வை,கோ,அவர்களுக்கு கேனக்கிருக்கன் எழுதும் மனம் திறந்த மடல், பாகம் 1,,

 வை,கோ,அவர்களுக்கு கேனக்கிருக்கன் எழுதும் மனம் திறந்த மடல்,,, பாகம் 1

      இந்த தமிழ்ச் சமுதாயமும், தமிழினம் தலைநிமிர, இழந்து நிற்கிற மாண்பைப் பெற்றிட தலைவர்கள் பல இருந்து தமிழ் மக்களை சரியான முறையில் வழிநடத்திட உருப்படியான  ஆள் யார் என்று பலரும் குழம்பி ஓர் தெளிவில்லாமல் இருக்கின்ற  இந்த இந்த வேளையில்,

            நாம் ஒருவரை ஒருவர் குறைகூறி, வசை பாடி, பழமை பாடி, பழி கூறி, நம்பிக்கை துரோகம் செய்து, பழிதீர்த்தது போதும் இனிமேலாவது மாற்றுவழிச் சிந்தனைகளோடு நாம்  என்ன வேண்டும், தமிழினம் இனி அடுத்து ஆற்றவேண்டிய ஆக்கப் பணிகளைப் பட்டியலிட்டு சிறப்பான முறையில் சரியாக செய்திடவும், தமிழின உயர்வுக்கு வழி காட்டிடக்கூடிய திறைமயான அரசியல்வாதி யார் என தமிழகத்தில் கேடுகெட்ட அரசியல்வாதிகளால் இலவசம் என்ற பெயரில் அடுத்த வேளை கஞ்சிக்கு கையேந்தி நிற்பவர்கள் முதல் அடுக்கு மாடி கட்டித்தில் சொகுசாக வாழ்கின்றவர் வரை பலரிடம் கலந்து கருத்துகேட்டபோது
    
     ஆரம்பத்தில் மிக பல தவறுகள் செய்தாலும் இன்று அரசியல் பாதைகளில் சரியாக சிந்தனைகளுடன் தெளிவான ஓர் முடிவுடன் இருப்பவர் வைகோ என்றும், வைகோவுடன்  தலைமை ஒருங்கிணைப்பளராக தமிழருவி மணியன் அவர்களையும், திரு,பழ,நெடுமாறன் கொளத்தூர்மணி, சீமான் போன்றவர்களை உள்ளடக்கிய ஒரு களம் அமைத்தால் மட்டுமே ஈழத்தில் தமிழ் உறவுகள் சிந்திய குருதிக்கு விடிவுகாலம் கிடைக்கும் எனவும், கொலைகாரனுக்கு தூக்குதண்டனை கிடைக்க வழிவகை செய்ய முடியும் எனவும், தமிழர்கள் உலகில் தலைநிமிர்ந்து வலம் வரமுடியும் எனவும் சொல்ல கண்டதினால் திரு, வைகோ   அவர்களுக்கு கேனக்கிருக்கன் எழுதும் மனம் திறந்த மடல்

        உலகில் தமிழர் என்ற ஒற்றைசொல்லுக்காக கை கோர்த்து  பூத்து குழுங்கி பூச்செரிந்து நடந்த உங்கள் அரசியல் தடம் இன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பாதை எங்கே மலராமல் ஒரு வழி பாதையாக மாறிவுடுமோ என்ற அச்சம் கலந்த ஆதங்கத்தோடு உங்களிடம் உரிமையாய் சில கேள்விகனைகளோடு எனது பதிவு

      ஆண்ட தமிழினம் இன்று அடிமை கொட்டகைக்குள் தீக்கிரையாக்கி தீண்டிய  பட்டினி பசி தாண்டவத்தோடு தவிக்கின்றதை பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல்
 
   அரசியல்வாதிகள் பலர் இன்றுவரை தில்லாலங்கடி  வேலைகள் பல செய்வதோடு மட்டுமல்லாமல் சூளுரை பல சுழலச்செய்து உங்களையும் உங்கள்  புகழையும் மண்ணோடு மண்ணாக மதிமுகாவை மக்கிபோகச்செய்கின்ற மாய வேலைகளை  கொலைகார திமுகாவும், நாசக்கார நம்பிக்கை துரோகி நயவஞ்சககாரி தமிழக அழிக்க வந்தா  சாத்தான் என உங்களால் பட்டம் கொடுக்கப்பட்ட செயலலிதாவும் சிறப்பான பணியாக செய்துவருகின்ற இந்தவேளையில்.
  
    தமிழே, தமிழினமே உயிராகவும், உறவாகவும், உணர்வாகவும், உயிர் மூச்சாகவும்,  கொண்டதினால் இன்று ஆயிரமாயிரம் போராளிகள் வீரச்சமர் அடைந்ததினால் ஈழத்தில் தொண்ணூறாயிரம் அக்கா தங்கைகள் இலையுதிர்ந்து  விலாசமற்ற  விதவைகளாகி வாழும் வாழ்கைக்கு என்ன அர்த்தம்  நீங்கள் என்ன செய்யபோகிறீர்கள்  இந்த தமிழினத்திற்கு எனக்கொன்றும் புரியவில்லை
 
    தொடையோடு துண்டாகிப் போன கால்களோடு……… தோளோடு பிய்த்தெறியப்பட்ட கைகளோடு……… மரண வேதனையில்  ஈழத்தில் இழந்த உயிர்கள் கணக்கில்லாமல் எல்லைதாண்டி போனபோது  முத்தமிழ் வித்தகர் கொலைஞர்போல் மருத்தவமனையில் மல்லாக்க வைத்து படுத்துகொண்டிருக்காமல் தமிழினம்  தழைத்திட வேண்டுமென இனிமேலும் நான் தமிழினமாக  வாழ்வதில் சிறப்பில்லை என  தன்னுடலை தமிழினத்திற்காக தாரை வார்த்து நமக்குள் அணையா நெருப்பை கொட்டிவிட்டுசென்றானே  முத்துகுமார் அவனுடைய கனவு எப்படி மெய்பிக்க போகின்றீ்கள் சொல்லுங்கள்  புரட்சிபுயலே!


இனி கெஞ்சி வாங்கி கோவணம் கட்டுவதைவிட
அம்மணமாகவே போராடுவது மேல்
   என்பதுபோல்
 
    இனி அமைதியாய்க்  நிராயுதபாணியாய் நீதியும் உரிமையும் கேட்டால் கிடைக்கபோவதில்லை என்பதை தெளிவாக உணர்ந்தகொண்டு ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்க காத்திருக்கின்றார்கள் அதற்கு முன்னால் உங்கள் கட்சியிலும், உங்கள் செயல்பாடுகளிலும், சில மாற்றத்தை மாற்றினால் மட்டுமே மீண்டும் மறுமலர்ச்சி மொட்டுவிட்டு மலரும் என்பதில் ஐயமில்லை,

     ஆளை பணத்தால் மதியமக்கி எழுதுகோலில் பொய் பரப்பி பொய் பேச்சை வைத்தும் ஆட்சியை பிடித்து கோடி கோடியாய் திருடி சம்பாதித்து  செல்வ செலிப்புடன் வாழுகின்ற நடிப்புகார கொலைஞரின் தமிழின பற்று எங்கே!
    
    தான் வைத்திருந்து சுமார் 170 ஏக்கர் நிலங்களையெல்லம் விற்று தமிழினத்திற்காக இன்றுவரை பம்பரமாக சுழழும் நிங்கள் எங்கே என நினைக்கும்போது எனக்குள் என்றும் புதுமையாய் தெரிகிறது உங்கள் முகம் 
 
 கிழிஞ்ச சேலையும் 
 புழுங்கரிசி திண்ண வாயும் சும்மா இருக்காது
          என்ற கதையாய்
 
    அரசியல்னா என்னனு தெரியாத, எப்போதும் ஒரு கோட்டர் பாட்டிலுடன் அலைந்து திருகின்ற ஒரு நடிகன் விசயகாந்துக்கு உள்ள மரியாதை  உங்களுக்கு இல்லாமல் போனதற்கு காரணம் கண்டுபிடித்தீர்களா?  அல்லது எப்போதாவது நீங்கள் வைத்திருக்கும்,, மாவாட்ட செயலாளர் எப்போதாவது எதாவது உருப்படியாய் யோசனை  சொன்னார்களா?

      பொதுவாழ்வில் நேர்மை இலட்சியத்தில் உறுதி என கடந்த 15 வருடங்களகா எந்த அரசியல் தலைவரிடமும் பார்க்கமுடியாத அதிசயமாய்,  தோளில் தொங்கியபடி  விழாத துண்டை எடுத்து எடுத்து போட்டு பேசுகின்ற   நல்ல உணர்ச்சி பேச்சாளன்,  சூளுரைப்பதில் வேகம், தமிழர் விரோதிகள் மீது  நீங்கள் காட்டுகின்ற  கோபம் பல இருந்தும் வளரவில்லை காரணம்  என்ன என்பதை ஒரு குழு அமைத்து ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே ஒரு தெளிவான முடிவு கிடைக்கும்
 
      கழுத்து நரம்பு புடைக்க கத்தி கத்தி கலைஞர் துரோகம் செய்து விட்டார் கலைஞர் துரோகம் செய்து விட்டார் என  அதனால் இத்தனை தீக்குளிப்பு என உரக்கமிட்டதினால் அன்று மதிமுக பிறந்தது என்று என சொல்லிவிட்டு மீண்டும் தாய்கழகமான தி,மு,காவில் இணைந்தீர்கள்.  உங்களுக்காக தன் உயிரை மாய்த்துகொண்ட வீரவேங்கையின் குடும்பத்தைபற்றி யோசனை செய்தீர்களா? ,,,,,,

       உங்கள் பேச்சு என்பது பல தமிழக இளைஞர்கள்  இதயத்துள் உண்டாகும் உணர்ச்சி மட்டுமன்று, ஆற்றலைக் கிளப்பி மனதிற்குள் எதிர்கேள்விகளை கேட்கும் ஒரு தூண்டுகோளாக இருந்தாலும் இப்போது தமிழர், தமிழ்மொழி, தமிழினம் வாழ்வா !சாவா! என இறுதி சடங்கிற்காக சவக்குழிக்கு அருகே இருக்கின்ற இந்த வேளையில் எனக்கு மட்டுமல்ல என் தமிழ்சாதிக்கும் தெளிவான ஒரு முடிவு எடுக்காவிட்டால்  எதிர்கால என் தமிழின சந்ததிக்கும் கிடைக்காமலே போய்விடும்  தமிழினமும் நீங்கள் இந்த தமிழினத்திற்கு பம்பரமாய் உழைத்த பயன் வீன்போய்விடும் 
  ஆதலால்
   
எதிரி  சிங்களவன் நரம்பை அறுத்து
வீரத்துடன் புலிக்கொடி கொடியேற்றிட
   உறுதியான வழிமுறைகளுக்கு வகுக்ககூடிய பொறுப்புணர்வு தமிழக்தில் உங்களுக்க மட்டுமே உள்ளது என்பதை நீங்கள் மறக்க வேண்டாம்
 
    அதற்காக பணமும், பொருளும் செவிடவேண்டியதில்லை உங்களுக்கு
எதிரியை  கொல்ல வாள் வேண்டாம் நாளெரு பொழுதும்  ஒரு மணிநேரம் இடிபோன்ற உங்கள் பேச்சு மட்டுமே இருந்தால் போதும்

      போய் சேர்ந்ததும்,   பொடவில்  உங்களை 455 நாட்கள் சிறையில் அடைத்த பாசிச வெறி பிடித்த கொடுங்கேலச்சி ஜெயலலிதா  கூட்டனி வைத்துக்கொண்டதினால் இன்று நீங்களும் உங்களின் பின்னடைவுக்கு காரணம் என்பதை நீங்கள் தெளிவாக புரிந்தகொள்ளுங்கள்

      தியாகங்கள் பல செய்து  கடந்த 7வருடங்களாக  அதிமுகவுக்கு ஆதரவாக உங்கள் மதிமுக கட்சி தெருவிக்கு தெருவாக வீதிக்கு வீதியாக அதிமுக கட்சிக்கு பலம் சேர்த்தது . வஞ்சகத்தாலும், சூழ்ச்சியாலும்  நஞ்சு எண்ணம் கொண்ட செயலலிதாவால் நீங்கள் ஏமாற்றபட்டீர்கள் என்பதை சொல்லிதெரிய வேண்டியதில்லை.

   ஆளுங்கட்சி அடுத்த தேர்தலில் தோற்பதுதான் வழக்கம்! அந்த கணக்கு பாடத்தை தெளிவாக புரிந்துகொண்டு மாறி மாறி கூட்டணி வைத்து தனிப்பட்ட சமுதாய நலனுக்காகவே இன்றுவரை சோனியாவுக்கு சோப்பு போட்டு  கொண்டியிருக்கும்   வெருமாவளவன், ராமதாசு கொலைஞர் போன்றவர்களிடம் தந்திர அரசியல் படிக்கவில்லை என்பதை பார்க்கும் போது நீங்கள் ஒரு அப்பாவி அரசியல்வாதிதான் என தோன்றுகிறது 

இருட்டு வீட்டுக்குப் போனாளும்
திருட்டு கை நிக்காது  என்ற கதையாய்
 
    உலகத் தமிழர்கள் உள்ளங்களில் ஏற்பட்டுள்ள பழியில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காகவும், தடுமாறித் தத்தளிக்கும் தமிழனையும் நம்பவைத்து ஏமாற்றும் கலையை கற்ற தமிழ் தமிழர் என  தமிழர் தரணியில் இப்போது பவனி வந்துகொண்டிருக்கும் கொலைஞரும் மக்களுக்கு சேவை செய்கிறேன் என்று பணத்தை சுருட்டும் ஓட்டுப்பொறுக்கிகள் தான் அஇ அதிமுக, திமுக என்பதை மக்களுக்கு இன்னும் தெளிவாக புரியவையுங்கள்

நஞ்சு எண்ணம் கொண்டதன் வாழ்வில் குடும்பமே லஞ்சமாக  குறிக்கோலாக கொண்டு  இனிப்பு பேச்சு பேசி தம்பி தம்பி  என  மதி மயங்கி  உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் ஓர் கொடூர முகம் கொண்ட  முத்தமிழறிஞர்….. வாழும் வள்ளுவர்……. செம்மொழி தந்த செம்மல்….. வாழும் தொல்காப்பியர்….. அஞ்சுகச் செல்வர்……. அருந்தமிழ்க் காவலர்
இன்றுவரை தமிழ்நாட்டில் அனைவரையும்  ஒரு ஏமாளி எனவும்
சுய சிந்தனை அற்ற முட்டாள் ஆக்கிருக்கும்  கொலைஞரைபற்றி கடந்த 30 வருடங்களுக்கு முன்பே கண்ணதாசன் தான் இயற்றிய கவிதையை நீங்களும் பாருங்கள் மதிமுக தலைவரே!
 
அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து

தன்சாதி
தன்குடும்பம்
தான்வாழ‌ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.

பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய‌ கதையுரைத்து

வகுத்துண‌ரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.

இக்கடிதத்தில் இடமில்லாததினால் அடுத்த கடிதம் தொடரும் விரைவில்,,,