இந்த தமிழனித்தின் தலைவர் என சொல்லிக்கொண்டு நீங்கள் எதயோ தேடி எதையோ பெற்று இன்று இதைத்தான் செய்ய முடிந்ததென்று நெஞ்சினிக்க இன்றுவரை பொய்கள் பல சொல்லி இன்றும் தமிழனை நம்ப வைத்து டெசோ மாநாடு நடத்துகின்ற உங்களின் கபட நாடகத்தை உலக தமிழினமே மிகவும் ரசனையோடு ரசித்துக்கொண்டிருக்கின்ற இத்தருணத்தில்
ஆட்டுகின்ற நாய் வால் போல்....தானாகவே உங்கள் இசைவுக்கு வால் ஆட்டுகின்ற வெறுமாவளவனுக்கு ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருக்கையில்
இனி கொஞ்சமும், வெட்கப்பட்டவோ, பயப்படவோ தேவையில்லை என்
பயணப்பாதைகளில் என்ற தீர்க்கமான முடிவுடன் தான் உடன் ஓடிப்போய் கடுதாசி வாங்கி உங்களுக்கு எழுதிட வேண்டுமெ தோன்றியது மனதில்,,,
ஒரு தனிமனிதனுடைய வளர்ச்சியில் அக்கரை கொண்டு வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டிய ஆட்சியாளர்கள், இன்று வெறும் 10 ஆயிரம் அரசு வேலைக்கு 11 லட்சம்பேர் எழுதுகின்ற சூழ்நிலைக்கு நம்மை தள்ளிவிட்டு வேலையற்று வெட்டியாய் வேலை கொடுக்க துப்புகெட்ட பெருமைமிக்க ஆட்சியாளர்கள் ஆட்சி செய்கின்ற வேதனைப்படுகின்ற இத்தருணத்தில் மிக மிக அவசரமாக உங்களுக்கு கடுதாசி எழுதிட அவசியமாயிற்று
வேதனையின் விழும்பில் இருந்து இருந்துகொண்டு இங்கு தமிழர்கள் பலர் மார்வாடி கடைகளில் கந்துவட்டி, கெந்துவட்டி என வரண்டுபோன வாழ்க்கையாய் தன் அம்மாவின் தாலியை அடகு வைத்துவிட்டு படித்தால் அரசு மதுபான கடைகளில் எச்சி கிளாஸ் கழுவுகின்ற வேலைதான் கிடைத்தது உங்கள் ஆட்சி காலத்தில்
வேர்களைப் பற்றிய
விபரங்கள் புரியாமல்
விழுதுகள் வெட்டியது நீங்கள் தான் என்பதை உணர வயதில் பெரியவரான உங்களுக்கு இன்னும் புரிந்துகொள்ள பக்ககுவம் இல்லை என்பதுதான் கொடுமை,,,
காரணம்
வீட்டு விளக்கு வெளிச்சத்தின் விளிம்புகளில் சிக்கி தவிக்கும் விட்டில் பூச்சில்களைப்போல் காலம் முழுவதும் தமிழரின் வாழ்வுமட்டும் இன்றுவரை வெளிநாட்டில் ஆயிரமாயிரம் உறவுகள் அடிமைபோல் கொத்தடிமையாக வேலை பார்ப்பது ஐந்துமுறை ஆட்சி கட்டிலில் அமர்ந்திருந்து தமிழனை மறந்து தன் குடும்பத்தை அறியனை ஏற்றிவதில் குறியாக கொண்ட உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லையென நினைக்கின்றேன் நான்
உலகில் ஒட்டடுமொத்த மனித இனமும் சுற்றி நின்று,இனப்படுகொலையைப் பற்றிய அக்கறையே இல்லாமல் நிதானமாக வேடிக்கை பார்த்திட்டாலும் கூடவே தமிழின தலைவர் என சொல்லிக்கொள்ளும் நீங்களும் ராமதாசும் வெறுமாவளவன் செயலலிதா காங்கிரஸ் கைத்தடி கலாம் இன்னும் பிற கேடுகெட்ட அரசியல்வாதிகள் வாழுகின்ற கொடூரத்தின் மொத்த உருவமாய் இருக்கிற சிங்கள அரசை வெட்கமின்றி ஆதரிக்கின்ற ஊழலால் உலக அரங்கில் முதன்மை இடம்பெற்ற கேடுகெட்ட உங்கள் இந்தியாவில் அதிலும் நீங்கள் வாழுகின்ற தமிழகத்தில் நானும் வாழ்வதை எண்ணி மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற நாட்கள் ஏராளம் ஏராளம்
உங்களை வாழும் வள்ளுவர், வாழ்ந்த அண்ணாவின் வாரிசு, தமிழினத்தின் முதல் எழுத்தே என நெஞ்சில் மாசுபடர்ந்து செழுமையடைந்த கர்வம் கொண்ட கெட்ட எண்ணத்தோடு துதிபாடும் செம்பு தூக்கி வைரமுத்து போன்றோர்களால் உங்களை உள்ளத்தில் இன்றுவரை உயர்த்தி புகழப்பட்டாலும் கூட
அதைவிட இன்னும் உங்களை உயர்வாய் ஒரு காலத்தில்
சித்தர்களில் சிறந்த யோகியாகவும்,
சிந்தனையில் பெரிய ஞானியாகவும்,
புத்தரோடு உத்தமர் காந்தியும் என புகழாரம் சூட்டி மற்றவரிடம் உங்களை புகழ்ந்து பெருமை பேசிய நாட்களும், நேரமும் மிக மிக அதிகம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள் முதியரே
இருப்பினும் கண்ணீர் துளிகளை முற்றிலுமாக புறக்கணித்து விட்டு அச்சுறுத்தல், மிரட்டல், அவமானம், புறக்கணிப்பு, தோல்வி என எல்லாம் ஒன்றாய் துரத்திய உங்கள் 5 வருட ஆட்சி காலத்தில்
தற்கொலை தகுதியற்றவர்கள் தஞ்சம்புகும் இடமென தெரிந்தும் நான்
மலை விளிம்பில் நின்றோ
இரயில் தண்டவாளத்திலோ
விஷ புட்டிகளையோ குடித்துவிட்டோ
அல்லது சுருக்குக் கயிற்றையோ நாடுவது சாலச் சிறந்தது என
தீர்க்கமாக முடிவு செய்து தற்கொலைவரை சென்றுவந்த நாட்கள் அதிகம் என்பதையும்
எம் இனமே எழும்புக் கூடானபோது அமைதியாய் மருத்துவமனையில் மல்லாக்கா படுத்திருந்துவிட்டு இன்று டெசோ மாநாடு நடத்துகின்ற உங்களுக்கு இந்த பதிவின் மூலம் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றேன் என்றும் நான்,,
இன்றும் நீங்கள்
ஓலைப்பாயில் ஒன்னுக்கு போன கதையாய்
தினசரி எதோ எதோ தட தடவென இந்த நாதியற்ற தமிழினத்திற்காக உளரிக்கொண்டிருப்பதால்
என்னை போன்ற பல தமிழ்மக்களும், இளைஞர்கள் மனசுல பெருவெள்ளமாய் உங்கள் மீதான வெறுப்பு இன்னும் அதிகமாக இனி ஓடுமே தவிர சற்றும் குறையப்போவதில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள் இலவசம் என்ற பெயரில் தமிழகத்தை தள்ளாடச்செய்த பெரியவரே,,,,,
கட்டுக்குள் அடங்காமல் குவிந்திடும் எண்ணங்கள் கருத்தாக்கும் முயற்சியில் மிக தீவிரமாக இறங்கிவிட்டேன் நான் இத்தருணத்தில் என் பதிவுகளுக்கு ஆக்கப் பூர்வமாக பதில் அளிப்பதை தவிர்த்துவிட்டு தொலைபேசியில் மிரட்டுவதோ அல்லது எச்சரிக்கை செய்வதோ விடுத்து நேரிலோ அல்லது எனது பதிவிற்கு ஆக்கபூர்வமான பதில் தரச்சொல்ல வாய்மொழி உத்தரவு விடுங்கள் உங்கள் துதிபாடி கழக கைத்தடிகளுக்கு எம் இனத்தை கருவருத்தவனுடன் கைகுலுக்கி பல் காட்டி சிரித்த தமிழகத்தின் நக்கியவாதி வெறுமாவளவனின் வெற்று கூட்டத்திற்கும் அல்லது
காவல் நிலையத்தில் புகார் செய்யச் சொல்லுங்கள்
காரணம் சிறை என்பது குறவான இடத்தில் அறிவு எனும் வெளிச்சத்தை வைத்துக்கொண்டு இதயத்தை தீட்டி எடுக்கின்ற பயிற்சிகூடம் என்பது உங்களுக்கு வாய்ப்பு இல்லை காரணம் சிறைக்கு நீங்கள் சென்றதில்லை கைது செய்ய வந்தால் ஐயோ குய்யோ என கத்தமட்டுமே தெரிந்த உங்களுக்கு
தமிழகத்தில் பல்வளம் பெருக
நல்லுளம் கொண்டோர் வாழ்த்த நல்லன யாவும் நாளும் நிறைவாக கிடைத்திட
நல்லறங் காப்பீர் நயந்துதான் என நம்பி கடைசியில்
கடற்கரை கிளிஞ்சல்கள் குழந்தையின் கண்களுக்கு வைரங்களாக தெரிவதைப்போல்
காண்பவர் கண்களுக்கு நீங்கள் உயர்வாக நினைத்து பகல் கனவு கண்டுதான் அறியணையில் ஏற்றினார்கள் தமிழர்கள்
ஆனால் நீங்களோ தமிழரின் வறுமையின் கொடுமையான ஏழ்மை மனங்களை நன்றாக அறிந்துகொண்டு தமிழன் சிந்திக்க மறந்த காரணத்தால் இலவசத்தை கண்டு மதி மயங்கிவிடுவார்கள் என்ற உங்கள் தந்திர எண்ணத்தினால் நீங்கள் தொடங்கிவைத்த இலவச டீவி இன்று உருமாறி ஆடு மாடுவரை வந்துள்ளது தமிழகத்தில் இலவசம்,,,
எம் இனம் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்திட்ட நான் கையாலாகாதவனாகி போய் இருக்காலம் என் இனம் தோற்றுப் போன இனமல்ல
ஒரு நாதியற்ற பிணமல்ல என்பதை நிரூபிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை
யுகங்கள் பல கடந்தும் குரங்கின் வழித்தோன்றி
இன்னும் அதன் புத்திமட்டும் மாறவில்லை என்பதற்கு சான்றாக நீங்கள் எம் உறவுகள் கத்தி கதறி அழுதபோது தான் பதவியில் இருக்கும்போது தன் குடும்பத்திற்கு பதவிவேண்டும் என்பதற்காக டில்லியில் சோனியாவின் காலடியில் மண்டியிட்டுக்கிடந்துவிட்டு தற்போது டெசோ மாநாடு நடத்துகின்ற உங்களின் பெருமைகளை நான் ஊரறியசெய்வது என் கடமையாக எடுத்துகொள்வேன் என் எதிர்காலத்தில் நான்
என்னைபோன்ற ஆயிரமாயிரம் இளைஞர்களின் கொள்கை என்னவோ சற்று காலம் கருதி உறைந்து போயிருக்கலாம்
உலகில் எங்கிருந்தும் எம் இனத்திற்கு எதிராக நாலாபக்கமும் ஆயிரம் அநீதிகள் சூழ்ச்சிகள் பல செய்து கோபக்கனல் மூட்டப்படலும், எரிவது என்னவோ நீங்கள் தமிழினத்திற்கு இன்றும் செய்கின்ற துரோகம்தான் இன்னும் நீங்கள் செய்கின்ற துரோகம் எங்களைபோன்ற இளைஞர்களின் நெஞ்சில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருப்பதை காலம் உங்களுக்கு உணர்த்தும்
தன் வாரிசுகளின் வாயிலாக
உங்கள் தந்திர அரசியலில் மீண்டும் கையிலெடுத்து இலவச மந்திர வேலைகள் செய்து தமிழர்களின் அறிவுச்சுடரை அலைக்கழித்து அந்த இலவசம் என்ற புயலில் நனைய வைத்து குளிர்காய்ந்து மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என ஒருபோதும் இனி பகல் கனவு காணவேண்டாம் நீங்கள்
இனி பிறக்கின்ற தமிழ்சாதி ஆயிரமாயிரம் பிறப்புகள்களிலும் நிங்கள் எப்படி எம் இனத்திற்கு துரோகம் செய்தீர்கள் என்பதை பட்டியலிட்டுவிட்டு உயிரின் கடைசி பணயம்வரை எதிர்காலத்தில் தூய எண்ணங்களோடு வாழப்போகின்ற எதிர்கால சந்ததிக்கு உங்களின் உண்மை தமிழின துரோக அடையாளங்களை சொல்லி
என் உடல் சாம்பலாய்ப் போகும் வரை சுட்டிகாட்டிவிட்டுத்தான் நான் மடிவேன் என்பதை நீங்கள் ஒருபோதும் மறவவேண்டாம் சோனியாவுக்கு பாத்தியபட்டவரான நீங்கள்
இது பதுங்கு குழிகளுக்குள் புதைந்துபோன எம் உயிர்கள் மீது
சத்தியம் சத்தியம் சத்தியம்
இக்கடிதத்தில் இடமில்லாத காரணத்தால் எனது அடுத்த கடிதம் இன்னும் சில தினங்களில் உங்களை வந்து சேரும்
நன்றி உங்கள் மேலான வசைபாடுகளை ஆவலோடு எதிர்பார்க்கும்
சிகா,லெனின் கீரமங்கலம்
9047357920