Tuesday 24 January 2012

இரத்த கொதிப்புள்ள கழக உடன்பிறப்புகள் கவணத்திற்கு,,,

               என்னடா இவன் எப்ப பார்த்தாலும் யாரையாவது குறைசொல்லி திட்டிக்கிட்டு பதிவு எழுதுவதே இவனுக்கு வழக்கமாய் போச்சுனு நினைக்க வேண்டாம் என்ன செய்வது...

மதியம் ஆட்டுக்கறி பிரியாணி சாப்பிடுவதற்காக ஜெயலலிதா மாட்டுக்கறி சாப்பிடவில்லை என

            கொடிபிடித்து ஆர்ப்பாட்டம் செய்யுமளவுக்கு தமிழனை கேனக்கிருக்கனாய் மாற்றி மதியம் பிரியாணி பொட்டலத்திற்காக கொடிபிடித்து ஆர்பாட்டத்தில் செய்வதை பார்க்கும் போது எல்லோரையும் திட்டி எழுதிட மனம் வருகிறது

இந்த கட்சிக்காரன் திருடன் என்றால்
அந்த கட்சிக்காரன் கலவானி

          ஆக மொத்தம் இரண்டு கட்சிகளும் செய்ற வேலை ஒன்னு  இதில் யாரை திட்டி என்ன ஆகப்போகுது போங்க,,,,,

எங்கள் தமிழ் உயர்வென சொல்லிச்சொல்லி நாம் வளர்ந்தோமைதவிர
குறைகளை களைந்தோமில்லை தமிழன் வளர்சிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும்.

அன்று...    

புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழ்பெண் வழிவந்த வீரம் செரிந்த நம் தமிழ் பரம்பரை வாழ்ந்தது

இன்று.... 

                சென்னையில் பல கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் நடைபெற்றது அது எப்படித் தெரியுமா? அவசியம் தெரிஞ்சுங்க இணையத்திலும் செய்தித்தாள்களிலும் தன் கல்லூரி சுய விளம்பரம் தேடுவதற்காக சமத்துவ பொங்கல் என்ற பெயரில் நிஜ அடுப்பு நிஜ அடுப்பு  மண் பானை வைத்தும் சேவிங் கிரீமை பானையில் பொங்கி வழிவதை வழிவதைப்போல் தடவியும்  ஊர் மப்புக்கு  விளம்பரம் தேடிட அனைத்து மாணவிகளும் குலவை சத்தம் என்ற பெயரில் ஒப்பாரி வைத்தும் சிறப்பாக கேவலப்படுத்தினார்கள் நம் தமிழ் பாரம்பரியத்தை  வளர்த்தெடுக்கும் அறிவுஜீவிகள் வாழுகின்ற புனித பூமியில் அனைவருக்குக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்,,,,

இணைய உறவுகளே!

                 கணினியில் எனக்குத்தெரிந்த போட்டாசாப், கோரல்டிரா, பேச்மேக்கர், அடோப் பிரீமியர், இவையனைத்தையும்  மிகவும் வித்தியாசமாகவும், விளக்கமாகவும் பல விசயங்களை  உங்களிடம் பகிர்ந்துகொள்வதற்கு முன்பாக,,,


                  பல அயோக்கிய அரசியல்வாதிகளைப்பற்றியும், சமுதாயத்தில் எனக்குத் தெரிந்து நடக்கின்ற அவலங்களைப்பற்றியும் ஒளிவு மறைவின்றி  துணிவுடன், ஆதாரத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் தன் தவறுகளை திருத்திக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன்  நாகரிகத்தோடு, படுகேவலமாக விமர்சித்து பதிவு எழுதவுள்ளேன்.


தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் 
  காட்சி மாறாத நிலையாய் தற்போது கவர்மென்ட் கக்கூஸ் கட்டுறதுமுதல் இப்போது வெகு ஜோராக ஊர் பள்ளிக்கூடங்களுக்கு சமைப்பதற்கு விறகு தள்ளுகிற ஆயாம்மா வேலைக்குகூட 2 லட்சம் வரை கூச்சமில்லாமல் கமிசன் வாங்கிகிட்டு சிறப்பாக அரசியில் கொள்ளையடித்துக்கொண்டிருக்கின்ற இங்குள்ள சில அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நிறைந்து வாழுகின்ற பரந்து விரிந்த நம் பாரத தேசத்தில்

கொக்கே கொக்கே இறகு போடு
என்ற கதையாய்

        நம் நாடு நிச்சயம் வல்லரசாகப் போகிறது என பகலில் மட்டுமே கனவுகானச் சொன்ன ஒரு நேரத்தில் தமிழர்கள் தலையில் தூக்கி வைத்து அழகு பார்த்த, தற்போது கொலைகாரன் ராசபக்சேவுடன் சம்மந்தி விருந்து சாப்பிடப்போன நம்ம கூடங்குளம் அரசியல் தரகர் அப்துல்கலாம் அவர்களிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டாம். யார் எப்பொழுது மின்னஞ்சல் அனுப்பினாலும் உடன் பதில் அனுப்பிவிடுவாராம்  கூடங்குளத்திற்கு ஆதரவாக செயல்படும் திரு,கலாம் அவர்கள்மீது நான் எழுப்பிய குற்றச்சாட்டும் ஒரு வேளை உணவுக்காக உணவகத்தின் பின்புறத்தில் எச்சில் இலைச்சோற்றுக்காக காத்திருக்கின்ற நம் பெருமை மிக்க பாரத தேசத்தைப்பற்றியும் கேள்விகளாக தொகுத்து சுமார் 40 கேள்விகளாக தயாரித்து அனுப்பிவைத்தேன் மின்னஞ்சலில், இவண் உண்மையில் கேனக்கிருக்கன் என நினைத்துவிட்டாரோ என்னவோ எவ்வித பதிலையும் காணோம். விரைவில் உங்களிடமும் எனது கேள்வி வந்தடையும் இந்த கேனக்கிருக்கனுக்கு உங்களிடம் உரிய பதில் கிடைக்குமென எதிர்பார்கின்றேன்,



எனது அடுத்த பதிவை படிக்குமுன்,,,

இட்ட உறவு எட்டு நாளைக்கு
நக்குன உறவு நாளு நாளைக்கு ன்னு 
திரியிற வெறு (திரு) மாவளவனின் வீராப்பு மிக்கவர்களும்



வெந்து கெட்டது முருங்கை
வேகாமல் கெட்டது அகத்தி
என்ற கதையாய் 50 சீட்டு கொடுத்திருந்தால் அன்புச் சகோதரியிடம் தன்மானத்தை அடகு வைக்கத் துணிந்த வை கோ /வை போற்றும் போர்படை தளபதிகளும்

அருமையற்ற வீட்டில்
எருமைகூட குடியிருக்காதாம் என்ற

பழமொழியை மெய்ப்பிக்கும் தன் கட்சிக்கு இத்துடன் ராமம் சாத்திக்கொண்ட ராமதாசைப் போற்றும் விசுவாசிகளும்



   தமிழர்களுக்கு என்றால் கடிதம் எழுதுவதும்
தன் குடும்பத்திற்கு பதவி என்றால் டில்லி விரைவதும்

      என்ற சாதனையை நிகழ்த்திய நம் பெருமை மிக்க தன் கண் எதிரே 1 லட்சம் தமிழர்களை கொன்றபோது அதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த பாக்கியத்தை பெற முடிந்த தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் (கொ) கலைஞரின் உடன்பிறப்புகள் யாவரும் இனி என் பதிவுகளை படிக்குமுன் இரத்த கொதிப்பு மாத்திரை வாங்கி வைத்துக்கொண்டு படிக்க முயற்சி செய்ய எனது தாழ்மையான வேண்டுகோள்,,,, 

கோபத்தோடு என்னை  திட்டுவதற்கு தொடர்பு கொள்ள சிகா, லெனின் கீரமங்கலம் 9047357920

Friday 6 January 2012

இன்னைக்கு நம்ம சீமான் நாளைக்கு நம்ம வை,கோவை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

         3 வருடத்தில் நான்காவது முறையாக சிறை செல்லுவதற்கு முன்பு கேரளா முத்தூட் பைனான்ஸ் கம்பெனியை உடைத்த வழக்கில் முன்ஜாமின் பெற முடியாமல் என்னை வரவேற்க சிறை காத்திருக்கின்ற இந்த வேளையில் தலைமறைவு வாழ்க்கையோடு என்மேல் தவறு இருக்குமானால் உங்களின் விவாதத்தின் வழியாக என்னை திருத்திக்கொள்ளவும், சம்பந்தபட்ட திரு, வை,கோ திரு, சீமான் போன்றவர்கள் தவறை புரிந்துகொண்டு எதிர்காலத்தில் ஒரு வளமான அரசியல் செய்வார்கள் என்ற புதிய நம்பிக்கையோடு இணையத்தில் இந்த பதிவு

தலைநகரம் சினிமா பட காமெடியில்

வடிவேலிடம் அவர் அப்பா சொல்லுவார் டேய்.. நீ.... எங்கே போனாலும் சிக்கி, சீரழிஞ்சு, சின்னா பின்னாமாகித்தான்டா வீட்டுக்கு வருவே,,, நிச்சயம் நீ வந்துதான்டா ஆவே,,, அப்படி வெளியூர் போய் சிக்கி, சின்னா பின்னமாகி, உயிருக்கு பயப்படும்போது இது உனக்கு உதவுமுடானு ஒரு பெட்டியை கொடுப்பார்

அதுபோல் என்னையும் என் அப்பா பொழைக்கிறதுக்காக ஒரு கம்ப்யூட்டர் பெட்டி வாங்கி கொடுத்துவிட்டு நீ....நாம் தமிழர்ன்னு, வை,கோ ன்னு, தமிழ், தமிழர்ன்னு போரே ஆனா.... நான் சொல்லுரேன்டா நீ..... சிக்கி சின்னபின்னமாகி கையில் சல்லி காசு இல்லாம நடுத்தெருவில் நாய்போல் நக்கிகிட்டுத்தான்டா இருப்பே, இருக்கனும் இதுதான் உன் தலையெழுத்து அப்ப தெரியுமுடா உன்னை காப்பாற்ற எந்த சீமான் வருவானு இந்த தென்டச்சோறு போடுற அப்பனோட அருமை அப்ப தெரியுமுனு பிரபல ஜோதிராக இருப்பதாலே என்னவோ சரியாக சொல்லிச் சொல்லி அளுத்துப்போய்,,,கடைசியில்


மாடு கெட்டால் தேடலாம்
மனிதர் கெட்டா தேடலாமானு அப்படியே விட்டுட்டாரு


தமிழகத்தின் அரசியல் என்பது பொதுவாக அ,இ,அ,தி,மு,க,     தி,மு,க, இரண்டுமே 5 வருடங்களுக்கு ஒரு முறை மாறி மாறி தன் குடும்பமும், தன்னை சுற்றியுள்ள உறவுகளும் ஊழல் மற்றும் அபகரித்தோ அல்லது அராஜகத்தின் மூலமாகவோ பணம் அறுவடை செய்வதற்கும் கட்சியை ஒரு மிசினாகவும், தன்னை முன்னிலைப்படுத்த பயன்படும் ஓர் தொழில்கலைதான் அரசியல், மற்றபடி எவ்வித மண்ணாங்கட்டி சேவையும் கிடையாது,

வடக்கு பார்த்த மச்சு வீட்டைவிட
தெற்கு பார்த்த குச்சு வீடே மேல்
என்பதைப்போல்

நானும் பல கட்சியில் இருந்து பார்த்துவிட்டேன் ஒன்னும் சரிப்படல எங்க அப்பா திட்டுற மாதிரி நானும் இன்னும் உருப்படல
தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் எனும் ஊரில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தை பலமுறை சொல்லியும் மூடாமல் இருந்தபோது தமிழ் உணர்வாளர்கள், நாம் தமிழர் பேரியக்கத்தை சேர்ந்தவர்களும் ஒன்று கூடி 2/12/2011 அன்று பொதுக்கூட்டம் நடத்தினர் அதில் பேசிய மாநில பேச்சாளர்கள் மற்றும் பல பேச்சாளர்கள் பேசிய போது நீ அனையில் கை வைத்துப்பார் நாங்கள் உன் குரல்வளையில் கை வைப்போம் என பேசியும் நீ காலையில் முத்தூட் பைனான் -ஸை திறந்துபார்  சுக்கு நூறாக உடைத்தெரிவோம் என வீர வசனம் பேசினர் மறுநாள் வழக்கம்போல் முத்தூட் பைனான்ஸ் திறந்திருக்கும்போது முதல்நாள் மேடையில் வீரவசனம் பேசியவர்கள் யாரையுமே காணவில்லை,

ஒருவேளை குறைக்கிற நா.... கடிக்காதோ என்னவோ  எனக்குத்தெரியவில்லை.

முயலை கிளப்பிவிட்டுட்டு
 நாய் ஒன்னுக்கு போன கதையாய்

ஏனோ நான் மட்டுமே மூடச்சொல்லப்போய் அவரும் திமிராய் பேச நானும் கண்ணாடியை உடைத்திட.  நான் மட்டும் பிரச்னையில் சிக்கியபோது உணர்ந்துகொண்டேன் அங்கே கேரளாவில் எதிர்கட்சி ,ஆளும் கட்சி உச்சநீதிமன்ற நீதிபதிகள் உட்பட பலரும் ஒன்றாக கைகோர்த்து அனையை உடைக்க வேண்டும் என ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பும் வேலையில் நான் முழுமையாக உணர்ந்துகொண்டேன் ஆளுக்கொரு பாதையில் போகின்ற நம் தமிழக அரசியல்வாதிகளை நம்பி போவது மிகப்பெரிய குற்றமென......

செந்தமிழன் சீமானிடம் எனது கேள்வி

தமிழகத்தில் இருக்கின்ற எல்லா கட்சியைப்போல் நீங்கள் தலைமையேற்றுள்ள நாம் தமிழர் கட்சியில் சீமான், பிரபாகரன் என்ற மாஸ் -யை பயன்படுத்திக்கொண்டு, சுய விளம்பரத்திற்காக ஊருக்கு ஊர் மிகப்பெரிய கோஸ்டி பூசலோடு இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
நான் பெரியார் பேரன் என மூச்சுக்கு 300 முறை சொல்லும் நீங்கள் பசும்பொன் நினைவிடத்தில் முத்துராமலி்ங்கம் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றது ஏன்?


    நாம் தமிழர் பேரியக்கத்தில் ஊருக்கு ஊர் பல கோஸ்டிகளை அமைத்துக்கொண்டு இருக்கும்போது என்னைப்போன்றோர்களை ஜாமீன் எடுப்பதற்கு கூட வக்கற்ற நாம் தமிழர் பேரியக்கம் இனி ஈழத்தைப்பற்றி பேசி என்ன செய்ய உத்தேசம்

    மாவட்டத்தில் கலந்தாய்வு அல்லது ஒரு பொதுக்கூட்டம் என்றால் நிகழ்ச்சியெல்லாம் முடிந்த பின்பு மறுநாள் செய்தித்தாளை பார்த்து தெரிந்துகொள்ளவேண்டிய நிலையில் இருக்கும் நான் நாம் தமிழர் பேரியக்கத்திற்கு உண்மையாய் உணர்வாய் பணியாற்றும் என்னைப்போன்ற கேனக்கிருக்கனை வைத்துக்கொண்டு எப்படி கடல் கடந்த தமிழ் தேசத்தை உருவாக்க முடியும்

     தற்போது நீங்கள் வழி நடத்துகின்ற நாம் தமிழர் பேரியக்கத்தில் சரியான அனுகுமுறை இல்லாததினால் நீங்கள் முதன்முதலில் இயக்கம் தொடங்கியபோது  இருந்த பல பேர் இப்ப இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா?

உயிரோடு வாழுகின்ற எந்த ஒரு அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக கூசா தூக்கிகிட்டு ஜால்ரா அடித்தால் மிகவும் கேவலமாக போய்விடுவோம் என்ற உண்மை தத்துவத்தை அவ்வப்போது நடைமுறையில் உணர்த்திய வை,கோ,  ராமதாஸ் போன்றவர்களிடம் அரசியல் அல்பாமெத்தேடு பாடம் படிக்கவில்லையா திரு, சீமான் அவர்களே


க(கொலைஞர் ஆட்சியில் போஸ்டர் அடித்து ஒட்டினேன்

விழிகள் இரண்டும் இழந்தபின்பு புருவத்தில் பூசிக்கொள்ள மை எதற்கு
தமிழினம் செத்து மடிந்த பின் செம்மொழி மாநாடு யாருக்கு



     என போஸ்டர் அடித்து ஒட்டிய வழக்கில் 25 நாள் சிறையில் இருந்தபோது இப்போது இருக்கின்ற மாவட்ட, மாநில வழக்கறிஞர்கள் பலரும் எனக்கு தெரிந்திருந்த போதும் யாரும் உதவிக்கு வராதபோது என் அப்பாவின் முயற்சியின் ஜாமினில் வெளியே வந்தேன் ஒரு வழக்கறி்ஞர்கூட முன் வராத ஓர் கட்சியை வழிநடத்துகின்ற லட்சனமா?

     நான் உங்களை வேலுர் சிறையில் சந்தித்து எனது கேள்விகளை உங்களோடு பகிர்ந்தபோது யார் எப்படி இருந்தாலும் நீ இந்த சமூகத்திற்கு  என்ன பங்களிப்போ அதை செய்துகொண்டே இரு அதன் அர்த்தங்களை இப்போது புரிந்துகொண்டேன்,


     பட்டுக்கோட்டைக்குவழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலைசொல்லும் வழக்கறிஞர்களை வைத்துக்கொண்டு கடைசிவரை எப்படி இயக்கத்தை வளர்த்தெடுக்கப்பேகிரீர்கள்


        கடந்த 5 வடருடங்களாக அ.இ.அ.தி.மு.காவின் கொள்கைபரப்புச் செயலாளர் போல் செயல்பட்ட வை,கோ-வை தூக்கி வீசிய மனிதாபிமானமற்ற ஜெயலலிதாவை புகழ்ந்து பாராட்டுவிழா நடத்தினீர்கள் நானும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் நானும் என் இணையத்தளத்திற்கு கேனக்கிருக்கன் என பேர் வைத்ததன் ஒற்றுமையை

     பல முஸ்லிம்களை கொடுமைப்படுத்தி வாழ்வை நாசப்படுத்தியதால் எந்த வெளிநாட்டிற்கும் போக முடியாத குஜராத்தில் ஆட்சி செய்கின்ற இந்தியாவின் ராஜபக்சே நரேந்திர மோடியை புகழந்து பேசியது சரியா?


     வளமான தமிழகத்திற்கு சிறப்பாக குஜராத்  மாநிலத்தைப்போல் மிகவும் சிறப்பாக ஆட்சி செய்கிறார் என ஜெயலலிதாவிற்கு புகழ்மாலை சூட்டிய  சீமான் அவர்களே!

      நான் தற்போது சிக்கியுள்ள இந்த வழக்கிற்காக இயக்கத்திலிருந்து யாரும் வராமல் இருந்தபோது

            வீட்டு ரசீது வாங்கப்போய் 5 வருடம் தண்ணிவரியையும்
         சேர்த்துகட்டி கிளார்க்கு லஞ்சம் உட்பட 735 ரூபாய் செலவு

       இரண்டு நபருக்கு வீ,ஏ,ஓ, கையெழுத்து வாங்கப் போய் 
      கையெழுத்து போடுவதற்கு லஞ்சம் கொடுத்தது 300 ரூபாய் செலவு

      இயக்க தோழர்கள் ஜாமின்தாரராக வராதபோது 
      வெளியில் இருந்து ஆள்பிடித்து ஜாமின்தாரர் செலவு 1750

    அவர்களுக்கு சாப்பாடு இதர போக்குவரத்து செலவு உட்பட 625 ரூபாய் செலவு
     வழக்கறிஞர் மற்றும் தஞ்சை கோர்ட்டுக்கு அலைந்த செலவு 1450 ரூபாய்

    வழக்கை முடித்திட காவல்துறைக்கு லஞ்சமாக 8 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கின்றனர்.


     திரு, சீமான் அவர்களே! தெரிந்துகொள்ளுங்கள் நீங்கள் தினசரி புகழ்மாலை சூடிடும் அம்மாவின் பொற்கால ஆட்சியில் லஞ்சம் இல்லாமல் எதுவும் இல்லையென.

முகட்டேரி கோழி பிடிக்கத்தெரியாதவன் வானத்தை கிழித்து வைகுண்டம் காட்டுறேனு சொன்னானாம்

உள்ளூரில் ஓணான் பிடிக்கத்தெரியாதவன்
அடுத்த ஊரில் போய் ஆட்டையா பிடிக்கப்போறான்


இவர்களை நம்பி இயக்கத்தில் இணைந்த எனக்கு எந்த பழமொழி பொருந்தும் என நீங்கள் முடிவு செய்துகொள்ளுங்கள்,

தமிழகத்தில் கொடுங்கோல் ஆட்சி
நெடுநாள் நீடிக்காது
என்பதை

     நீங்கள் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை திரு, சீமான் அவர்களே!
மன முறிவுக்கு மருந்தில்லை என்பதை உணர்ந்துகொண்டு இனிமேலாவது இயக்கத்தில் இருக்கின்ற உண்மை தொண்டனை உணர்ந்து வளர்ச்சி பாதைக்கு வழிவகுத்தால் மட்டுமே அரசியல் செய்யமுடியும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள் திரு சீமான் அவர்களே! 

    இல்லையெனில் ஆளே இல்லாத ஊரில் யாருக்கு டீ ஆத்துர என வடிவேல் கதைக்கு நீங்கள் பொருத்தமாகிவிடுவீர்கள்

 நன்றி! உங்களின் மேலான கருத்துக்களும், வசையை எதிர்பார்ப்புடன் 
சிகா, லெனின் கீரமங்கலம் 9047357920

Tuesday 3 January 2012

நீங்களும் தெரிஞ்சுக்கனும்

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு புதிய தலைமுறை செய்தி தொகுப்பில் முதன்மைச்செய்தியாக மத்திய அமைச்சர் திரு. கபில்சிவ் அவர்களின் கோரிக்கையை ஏற்று வருகின்ற பிப்ரவரி 6 ம் தேதிமுதல் பேஸ்புக், டுவிட்டர் போன்ற இணையத்தள சேவையை தணிக்கை செய்த பின்பே வெளியிட வேண்டும் என்றும் அதில் அரசுக்கு எதிராகவோ அல்லது வன்முறையைத் தூண்டும் விதத்தில் கருத்து இருந்தால் தடைசெய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது,


 ஏதோ ஒரு சிலர் வேண்டுமனால் சில அரசியல்வாதிகளோடு பெண்களை இணைத்து வெளியிட்டு இருக்கலாம், ஆனால் ஒட்டுமொத்தமாக கருத்து சுதந்திரமிக்க உலகின் மிகப்பெரிய சனநாயக நாடு என்று சொல்லிக்கொண்டு (ஓட்டுக்குப் பணம் கொடுத்து ஜெயிக்க்கூடிய ஒரு கேவலமாக உள்ள இந்திய நாட்டில் திரு, கபில்சிவ் அவர்களின் கருத்தை நாம் ஒட்டுமொத்தமாக எதிர்க்க வேண்டும்.

தனக்கெதிராக டில்லி இளைஞர்கள் தான் செய்த கோல்மால் வேலைகளை இணையத்தில் ஆதாரத்துடன் வெளியிட்டதினால் திரு, கபில்சிவ் இவ்வாறு தனது திருவாய்யை மலர்ந்துள்ளார். அதில் இந்தியாவில் பல இளைஞர்களும், பல குடும்ப பெண்களும் சமுதாயத்தில் சீர்கெட்டுபோனதர்கு காரணம் டுவிட்டர், பேஸ்புக் போன்ற இணையத்தளம் என்றும்  இதனால் எதிர்கால இந்தியாவின் நலன் கருதி தடைசெய் வேண்டுமென மத்திய அரசுக்கு பரந்துரை செய்துள்ளார்,

எனது கேள்வி

அன்றாடம் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் சாலையின் ஒரத்தில் பல ஆபாச போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது இதைப் பார்த்து மாணவ, மாணவிகள் கெட்டுவிடமாட்டார்களா என்ன?

பல படங்களில் பருவ பெண்களை தோளில் சுமந்து உப்பு மூட்டை சுமப்பதும், இரவு நேர விடுதியில் (நைட் கிளப்பில்) அரைகுறை ஆடையுடன் போதையில் மதுவுடன், மாதுவும் சேர்ந்து ஆடுவது உங்களுக்கு தெரியாதா மிஸ்டர் கபில்சிவ் அவர்களே?

உண்மையில் மந்திரி கபில்சிவ்க்கு   அக்கரை இருக்குமானல் ஒரே ஒரு முறைமட்டும் இந்தியாவில் அதுவும் இலவசம் என்ற பெயரில் ஆடு, மாடு, கோழி, தாலி எனகொடுத்து மனித மூளையை மழுங்கடித்து வைத்திருக்கும் எங்கள் தமிழ்நாட்டில் ஓடிக்குகொண்டிருக்கும் தமிழ் படங்களை மொழிமாற்றம் செய்து உங்கள் குடும்பத்தோடு ஒரு முறை படத்தை பாருங்கள் எங்கள் தமிழ் சமுதாயம் எவ்வளவு மோசமாக போகிறது என்று உங்களுக்குத் தெரியும் இதை உங்களால் தடை செய்ய முடியுமா?

திரு, கபில்சிவ் அவர்களே
உண்மையில் சமுதாய சீர்கேட்டை தடுப்பவராக நீங்கள் இருந்தால் இன்று செல்போனில் இளசுமுதல் பெரிசுவரை எந்தளவுக்கு கெட்டு குட்டிச்சுவரா போச்சுனு தெரிந்திட நீங்களும் ஒவ்வொருவரின் சிம்கார்டை பார்த்தால் தெரியும் உண்மை வெளிச்சம்

முல்லை பெரியார் அனை விசயத்தில் உருப்படியாக ஒரு முடிவு எடுக்க வக்கற்ற  மன்மேகான் சிங்  கொலைவெறி பாடலை பாடிய தனுசுக்கு விருந்து கொடுத்ததை பாராட்டியும்  டில்லிவரை சென்று  ஊழல் எதிர்ப்பு  பெரிசுக்கு ஆதரவு தெரிவித்த  நடிகர் விஜய் முல்லை பெரியார் அனை விவகாரத்தில் வாய்மூடி  மவுனிப்பதையும் பாராட்டியோ அல்லது புத்தாண்டு தினத்தன்று நடிகர் விஜய் நடித்த நண்பன் படம் வெற்றிபெற வேண்டி  நடிகர் விஜயின் கட்டவுட்டுக்கு பால் அபிசேகம் செய்ததை போற்றியும் ,  ரஜினி குணமாக வேண்டி கையில் அக்னி சட்டியுடன் டிரஸ் இல்லாமல் உடம்பில் வேப்பிழையுடன் வீதி சுற்றியதையும் புகழந்துகொண்டு இணையத்தில் வெளியிட்டால் பேஸ்புக்கை தடைசெய்ய மாட்டார்கள் என நினைக்கிறேன் நானும் மடத்தனமாய்

 ஒன்றைமட்டும் புரிந்து கொள்ளுங்கள் வெள்ளத்தை அனைபோட்டு தடுத்திட முடியாது எங்களுக்கும் சூடு சொரணை உள்ளது. நாங்களும் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் பல அரசியல்வாதிகளை நம்பி எங்கள் வாழ்வை தொலைத்தது போதும். ஊழலின் உறைவிடமாக மாறிப்போன இந்தியாவின் பல அரசியல்வாதிகளின் அந்தரங்கத்தை இணையத்தின் வாயிலாக பாமரனுக்கும் அதிலும் தமிழனுக்கு ஒரு நவீன கருவியாக இருப்பது டுவிட்டர் மற்றும் பேஸ் புக் போன்றவை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்


நன்றி° உங்களின் மேலான கருத்தினை எதிர்பார்ப்புடன் சிகா,லெனின்

Monday 2 January 2012

கம்ப்யூட்டர்மற்றும் இன்டர்நெட் பற்றி உங்க பெற்றோருக்கு கற்றுக்கொடுக்க

கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பற்றி உங்க பெற்றோருக்கு கற்றுக்கொடுக்க நினைக்கறீர்களா?டைம் இல்லையா!!! கவலை பட வேண்டாம்.ரொம்ப ஈஸி.இதோ போங்க இந்த தளத்திற்கு.உங்க உதவி இல்லாமல் அவங்கலாகவே கற்றுகொள்ள முடியும்.கீழே கொடுக்கபட்டது போல் ஒரு சில option தட்டுதல் மூலம் கணினிஅடிப்படை,உலகளாவிய வலை,ஊடகங்கள்,தகவல் கண்டுபிடிப்பு மற்றும் அதன் சம்மந்தபட்ட கேள்விகளுக்கு வீடியோ செய்முறை விளக்கம் பார்த்து கற்றுக்கொள்ளலாம்.
Teachparent

பல்லக்கு தூக்குவது பாவமா?)

அறத்தாறு எது? (பல்லக்கு தூக்குவது பாவமா?)


 
 
 
 
 
 
 
 
 
 
 
குறள்:

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகைப்
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.  - 37

 
தற்போதைய விளக்க உரைகள்:

கலைஞர் உரை: அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்.

மு.வ உரை: பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

சாலமன் பாப்பையா உரை: அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.

உரைத்தவறுகள்:

மேற்காணும் மூன்று உரைகளிலும் பொருள் தவறுகள் உள்ளன. வழக்கம்போல எழுத்துப் பிழைகளால் தான் தவறான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இப் பிழைகள் எதேச்சையாய் உண்டானவையா அல்லது வேண்டுமென்றே திருத்தப்பட்டு திசைமாற்றப் பட்டவையா தெரியவில்லை. ஆனால் இவ் உரைகள் இக் குறளுக்கு சற்றும் பொருந்தாமல் இருப்பதை மட்டும் நன்கு உணர முடிகிறது.

முதலில் கலைஞர் உரையைப் பார்ப்போம். குறளில் கூறப்பட்டுள்ள சொற்களுக்கும் அதற்கு அவர் கூறியுள்ள பொருட்களுக்கும் தொடர்பே இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இது இவ் உரையானது முழுக்க முழுக்க அவரது சொந்தக் கற்பனையே என்பதைத் தெளிவாகக் கூறுகிறது. மு.வ.வும் பாப்பையாவும் பல்லக்கில் பயணம் செய்வதற்கு ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்றும் பல்லக்குத் தூக்குபவன் பாவம் செய்திருக்க வேண்டும் என்றும் பொருள்பட உரை எழுதியிருக்கிறார்கள். இதற்குக் காரணம் அறத்தாறு என்ற சொல்லுக்கு அறத்தின் பயன் என்று இவர்கள் பொருள் விரித்துக் கொண்டமையே ஆகும். இப் பொருள் இச் சொல்லுக்குப் பொருந்தாது. இது எவ்வாறு என்று காண்போம்.

இக் குறளில் வரும் அறத்தாறு (அறத்து+ஆறு) என்பது அறநெறி, அறவழி என்பதைப் போல அறச்செயலை மட்டுமே இங்கு குறிக்கும்; அதன் பயனைக் குறிக்காது. ஏனென்றால் அறத்தாறு என்னும் சொல்லுக்கு அறச்செயல் என்பதே நேரடிப் பொருளாகும். அறத்தால் வரும் பயன் என்னும் விளக்கமானது இரண்டாம்நிலைப் பொருளே ஆகும்.  பொதுவாக பல்லக்கில் பயணம் செய்பவர் உயர்நிலையில் உள்ளோராக அதாவது செல்வந்தராக இருப்பர். அவருக்கு தான் விரும்பிய இடத்திற்கு வசதியாகச் செல்ல விருப்பம். பல்லக்கு தூக்கிக்கு பல்லக்கு தூக்குவது வேலை ஆகும். பணத்திற்காக அவர் பல்லக்கைத் தூக்குகிறார். இதில் அறத்தின் பயன் எங்கே வருகிறது?. பணத்திற்காக ஒருவர் பல்லக்கு தூக்கினால் அது எப்படி துன்பமாகும்? பல்லக்குத் தூக்குவது என்பது எப்படி பாவச்செயலால் விளைந்த பயனாகும்?. அது மட்டுமின்றி பல்லக்கைத் தூக்கும் வேலையில் மட்டும் தான் துன்பம் என்றில்லை; எல்லா வேலைகளிலும் தான் இன்ப துன்பங்கள் உள்ளன. எனவே பணத்திற்காகப் பல்லக்கைத் தூக்குபவரைப் பாவி (பாவம் செய்தவன்) என்றும் செல்வம் இருப்பதால் பல்லக்கில் பயணம் செய்பவரைப் புண்ணியவான் (புண்ணியம் செய்தவன்) என்றும் கூறுவது எவ்வகையிலும் பொருத்தமற்ற கருத்தாகும்.

அதுமட்டுமின்றி, பல்லக்கில் ஒருவர் பயணம் செய்துகொண்டு இருக்கும்போது அதைப் பார்ப்பவர்களில் யாரேனும் அங்கு சென்று  'அறத்தின் பயனால் விளைந்தது இது' என்று கூறுவார்களா என்ன?. 'பல்லக்கில் செல்லும் செல்வந்தர் யார்?' என்று வேடிக்கை பார்ப்பார்களே ஒழிய தேவையின்றி தலையிட்டு கருத்து கூற மாட்டார்கள். அப்படிக் கூறுவதற்கு மிகப் பெரிய துணிச்சல் தேவை. அவ்வாறு கூறுவது அறிவுக்குப் புறம்பானதும் ஆகும். ஏனென்றால் பல்லக்கில் பயணம் செய்வதோ பல்லக்கைத் தூக்குவதோ அவரவர் விருப்பத்தால் விளையும் செயல். யாரும் இங்கே கட்டாயப் படுத்தப் படவில்லை. அறத்தின் பயனாய் அச் செயல் நிகழவில்லை. எனவே 'பல்லக்கு தூக்குதல் என்பது அறத்தின் பயனாய் விளைந்த செயல்' என்று மு.வ.வும் பாப்பையாவும் உரை கூறி இருப்பது ஏற்புடையதன்று என்பது தெளிவுபடுத்தப் படுகிறது.

மேலும் இன்னொரு கோணத்திலும் நாம் சிந்திக்க வேண்டும். வள்ளுவர் காலத்தில் பல்லக்கு தூக்கிகள் இருந்தார்களா? அதாவது மனிதனை மனிதனே சுமக்கும் நிலைமை இருந்ததா? என்பதும் இங்கே ஆய்வுக்குரியதாகும். ஏனென்றால் 'சிவிகை' என்ற சொல் திருக்குறளில் வேறெங்கும் காணப்படவில்லை. இக் குறளில் கூட சிவிகை என்ற சொல் உருமாறியுள்ளது. இச்சொல்லே மேற்காணும் தவறான பொருள் விளக்கங்களுக்கு காரணமாக அமைந்து விட்டது. அதைப் பற்றிக் கீழே காணலாம்.


திருந்திய குறள்:

மேற்காணும் பொருட்பிழைகளுக்குக் காரணம் இக் குறளின் முதல் அடியில் உள்ள சொற்பிழையே ஆகும். இக் குறளின் உண்மையான வடிவம் கீழ்க்காணுமாறு இருந்திருக்க வேண்டும்.

அறத்தாறு இதுவென வேண்டா செவிகைப்பப் 
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

இதன் பொருளானது: " காதுகள் கசக்கும்படியான கடுஞ்சொற்களைக் கேட்டுப் பொறுத்திருப்பவனுக்கும் அவன் மேல்சென்ற (வன்சொற்களால் அடக்குமுறை புரிந்த) வனுக்கும் இடையே சென்று 'அறச்செயலே இது' எனக் கூறவேண்டா. (எவ்வகையானும் இது அறச்செயல் ஆகாது.)"

நிறுவுதல்:

வள்ளுவர் இக் குறளில் 'சிவிகை' என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் 'செவிகைப்ப' என்றே எழுதியிருப்பார் என்பதை எவ்வாறு உறுதிசெய்வது? இதைப்பற்றி இங்கே காணலாம்.

சிவிகை என்ற சொல் இக் குறளில் பொருந்தவில்லை என்பதை மேலே ஆதாரங்களுடன் கண்டோம். அதே சமயம் 'செவிகைப்ப' என்ற சொல்லே அதற்குப் பதிலாக வந்திருக்க வேண்டும் என்பதற்குக் கீழ்க்காணும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

1)  'சிவிகை' யும் 'செவிகைப்ப' வும் ஓசை ஒத்த சொற்கள்.

2)  ' செவிகைப்ப' என்ற சொல் குறள் எண் 389 ல் வருகிறது.

      ' செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
    கவிகைக்கீழ் தங்கும் உலகு.'
 
இக் குறளில் 'செவிகைப்ப' என்னும் சொல்லும் 'பொறுத்தல்' என்னும் சொல்லும் குறள் எண் 37 ல் வருவதைப் போலவே இணையாக வந்துள்ளது.

3) கொடிய சொற்கள் (இன்னாச்சொல்) கேட்போரின் காதுகளை கசக்கச் செய்யும்.

மேற்சொன்ன கருத்துக்களின் அடிப்படையில் 'செவிகைப்ப' என்ற சொல்லே பொருத்தமானதாகத் தெரிகின்றது. இச் சொல்லே இக் குறளுடன்  நன்கு பொருந்தி 'அறன் வலியுறுத்தல்' என்ற இந்த அதிகாரத்திற்கேற்ற நல்லதொரு விளக்கத்தையும் தந்து நிற்கிறது. இதைப் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

அறத்தின் தன்மை இதுவெனக் கூற விரும்பிய வள்ளுவர் எவை எவை அறம் ஆகாது என்று 35 ஆம் குறளில் கூறுகிறார்.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

இக் குறளில் வரும் இன்னாச்சொல் என்பது மனதைப் புண்படுத்தக் கூடிய கொடிய சொற்களைக் குறிக்கும். கொடிய சொற்களால் பிறர் மனதை ஒருபோதும் காயப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்வது எந்த சூழ்நிலையிலும் அறச்செயலாகாது என்பதே வள்ளுவரின் கொள்கை ஆகும். ஏனென்றால் தீயினால் சுட்டபுண் என்றேனும் ஒருநாள் உள்ளாறும். ஆனால் நாவினால் சுட்ட வடு ஒருபோதும் ஆறாது. இக் கருத்தை இன்னும் தெளிவாக விளக்கவே வள்ளுவர் இக் குறளை இயற்றினார் என்று கூறலாம். இக் குறளில் ஒரு கதை மூலம் தாம் சொல்லவரும் கருத்தை விளக்குகிறார். அக் கதை என்னவென்று காணலாம்.

" ஓரிடத்தில் பயங்கரமான ஓசை தொடர்ந்து கேட்டது. என்னவென்று அறிந்துகொள்ள பலர் அங்கே ஓடினார்கள். அங்கே ஒருவர் இன்னொருவரை கொடிய சொற்களால் பலமாகத் திட்டிக் கொண்டிருந்தார். காதுகள் கசக்கும்படியான அச் சொற்களைக் கேட்டுப் பொறுத்துக்கொண்டு அமைதியாக இருந்தார் அவர். இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் ஆர்வம் தாங்காமல் " ஏன் அவரை இப்படித் திட்டுகிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு திட்டியவர் ஏதோ ஒரு காரணம் கூறினார். அதைக் கேட்ட வேடிக்கை கூட்டம் " ஓ, அப்படியா?. அப்படி என்றால் நீங்கள் திட்டுவது நியாயம் தான் (அறச்செயல் தான்)" என்று ஏற்றுக் கொண்டு கலைந்து செல்கிறது."

வேடிக்கை மனிதர்களின் இக் கருத்தினை வன்மையாகக் கண்டிக்கிறார் வள்ளுவர். மனிதரை மனிதர் கொடிய சொற்களால் ஏசுவது மனிதநேயமற்ற செயல் மட்டுமன்று அறச்செயலுமாகாது என்கிறார். ஒருவர் தவறே செய்திருந்தாலும் அவரைத் தண்டிப்பதற்கு பிற உகந்த வழிமுறைகளைக் கையாளலாமே ஒழிய கொடிய சொற்களால் மனதைக் கிழித்துக் காயப்படுத்தக் கூடாது. அப்படி யாரேனும் கொடிய சொற்களால் ஏசினால் அதை எந்த சூழ்நிலையிலும் ஆதரித்துப் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார். ஆம், தவறு செய்தவருக்கும் நன்மை செய்வதே அவர் செய்த தவறுக்கான சரியான தண்டனை என்று கூறிய மனிதநேயம் மிக்க மாமேதை அல்லவா அவர்!.

மேலே நாம் கண்ட கருத்துடன் 'செவிகைப்ப' என்ற சொல் எவ்வளவு சரியாகப் பொருந்தி வருகின்றது பாருங்கள். அதுமட்டுமல்ல, இக் குறளில் வரும் ஊர்தல் என்ற சொல்லுக்கு 'ஏறுதல், மேற்செல்லுதல்' என்ற பொருட்களை அகராதிகள் கூறுகின்றன. விரிவாக்கமாக இங்கே இச்சொல் 'வன்முறையால் ஆளுதலை' அதாவது வன்சொற்களால் அடக்குமுறை செய்வதைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஏனென்றால் பிறர் மேல்செல்லுதல் என்பது பிறரை வன்முறையால் ஆளுதல் அதாவது அடக்குதலைக் குறிப்பதாகும். இதே கருத்தில் குறள் எண்: 250 அமைந்திருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.

இக் குறளிலும் 'மேற்செல்லுதல்' என்னும் சொல் வன்முறையால் ஆளுவதையே குறிக்கிறது. இன்று நாம் கூட 'ஏறுதல்' என்னும் சொல்லை ' திட்டுதல்' என்ற பொருளில் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.

' இன்று என் முதலாளி என்னை ஒரேயடியாக ஏறிவிட்டார் (திட்டிவிட்டார்).'

இனி இக் கட்டுரையைப் படித்தபின்னர் முதலாளிகள் தொழிலாளிகளை ஏற (திட்ட) மாட்டார்கள் என்று நம்புவோமாக! :))

Sunday 1 January 2012

நினைத்தாலே பற்றி எரிகிறது வயிறு.

)


நிதி அமைச்சரோ, உள்துறை
அமைச்சரோ, பாதுகாப்பு அமைச்சரோ
அறியாத இந்த விவரங்கள் ?

பணமும்,செல்வாக்கும்,  பதவி சுகமும்
தங்களுக்கு தொடர்ந்தால் போதும்.
இந்த நாடோ, மக்களோ எக்கேடு கெட்டாலும்
அவர்களுக்கு கவலை இல்லை.

இன்றும் 3 வேளை வயிராற சோறு
உண்ண முடியாமல்,
கந்தல் ஆடைகளுக்கு மாற்று இல்லாமல்,
குழந்தைகளை ரோட்டோர மரத்தில் தூளியில்
தொங்க விட்டு விட்டு ரோடு போடும் வேலையில்
ஈடுபட்டிருக்கும் பெண்கள்
-
பள்ளி செல்லும் வயதில் டீக்கடையிலும்,
மளிகைக்கடையிலும் வேலை செய்து கொண்டிருக்கும்
சிறுவர்கள் -

நோய்வாய்ப்பட்டு, சீண்டுவாரற்று,
ரெயில்வே ஸ்டேஷன்களில், பாலங்களில்
படுத்துக் கிடக்கும் ஆதரவற்ற  முதியவர்கள்-
கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகள் வாயில்களில்
கண் தெரியாமல், கை கால் விளங்காமல்
முடங்கிப்போய் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்
இந்த தேசத்தின் அனாதை மக்கள்-

தெருக்களில் சுற்றித்திரியும் மனநிலை
குன்றிய நோயாளிகள் -
இவர்கள் யாரின் நிலையும் -அவர்கள் மனதை
உறுத்தவில்லை.மனசாட்சியைத் தொடவில்லை.

நினைத்தாலே பற்றி எரிகிறது வயிறு.
கண்டாலே காரித் துப்பத் தோன்றுகிறது !








விண்டோஸ் 7 : திருட்டு நகல் அமோகமாய் கிடைக்கிறது

விண்டோஸ் 7 : திருட்டு நகல் அமோகமாய் கிடைக்கிறது



         இந்தியாவில் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் முறையாகச் சந்தைக்கு விற்பனைக்கு வரும் முன்னரே, அதன் திருட்டு நகல்கள் இந்தியப் பெரும் நகரங்களில் கிடைக்கத் தொடங்கிவிட்டன. ஒரு சிலர் இணையத் தளங்களில் இருந்து இதுபோன்ற திருட்டு நகல்களை டவுண்லோட் செய்தும், அதிலிருந்து சிடிக்களைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டனர். பொதுவாக மைக்ரோசாப்ட் தன் ஒரிஜினல் சிடிக்களுக்கு ப்ராடக்ட் கீ ஒன்றை, 16 எண் மற்றும் எழுத்துக்கள் கொண்டதாக, வழங்கும். அதனைச் சரியாக அமைத்தால் தான், இந்த புரோகிராம்கள் இயங்கத் தொடங்கும். ஆனால் தற்போது விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொகுப்புகளுக்கு அது போன்ற ப்ராடக்ட் கீ எதுவும் இல்லாமலே இயங்கும்படி இந்த திருட்டு நகல்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.

         இது போன்ற திருட்டு நகல்கள் தயாரிக்கப்படுவது, சாப்ட்வேர் தொழிலில் உள்ள நிறுவனங்களுக்குப் பெரும் தலைவலி யாய் இருந்து வருகிறது. குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவில் தான் இது போன்ற முயற்சிகள் பெருமளவில் நடந்தேறி வருகின்றன. இந்தியாவில் 208 கோடி டாலர் அளவிற்கு இந்த திருட்டு முயற்சிகளினால் இந்நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. இத்தகைய விற்பனையில் வரி ஏய்ப்பும் ஏற்படுவதால் அரசுக்கு 20 கோடி டாலர் மதிப்பில் இழப்பு உண்டாகிறது.

      டில்லியின் ரிச்சி ஸ்ட்ரீட் என அழைக்கப்படும், டிஜிட்டல் சாதனங்கள் விற்பனைக்குப் பெயர் பெற்ற, நேரு பிளேஸ் என்ற இடத்தில் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிடிக்கள் ஒன்று ரூ.50 விலையில் தரத் தயாராய் இருப்பதாகத் தன் அடையாளம் சொல்லவிரும்பாத ஒருவர் கூறினார். இந்த விண்டோஸ் பிரிமியம் தொகுப்பு, அதிகார பூர்வமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களிடம் ரூ.6,799க்குக் கிடைக்கிறது.

    இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவன உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, திருட்டு சாப்ட்வேர் சிடிக்களை வாங்கிப் பயன்படுத்து பவர்கள் பல ஆபத்துக்களுக்கு உள்ளாவார் கள். முதலாவதாக இது சட்டப்படி தவறு. காவல்துறையின் மூலம் நடவடிக்கை எடுத்தால் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், பயன்படுத்து பவரைக் கைது செய்து சிறைத்தண்டனை வாங்கிக் கொடுக்கவும் முடியும் என்றார்.
மேலும் கூறுகையில் திருட்டு சாப்ட்வேர் சிடிக்களுடன் பல மால்வேர் புரோகிராம்களும் இணைந்தே தரப்பட்டு, பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டரில் உள்ள பெர்சனல் தகவல்கள் மற்றவருக்குச் செல்லும் அபாயமும் என்றார். மேலும் இது போன்ற திருட்டு புரோகிராம்களை விற்பனை செய்பவர்கள், மைக்ரோசாப்ட் வெளியிட்ட சோதனைப் பதிப்புகளைக் காப்பி எடுத்து விற்பனை செய்வதாகவும், அதனால் முழுமையான பாதுகாப்பினை அவை பெற்றிருக்காது எனவும் கூறினார். மேலும் இவை ஜூன்1, 2010க்குப் பின் இயங்காது என்றும் கருத்து தெரிவித்தார்.

    மேலும் தொழில் நுட்ப ரீதியாகவும் இவற்றின் இயக்கத்தில் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்றும் விளக்கினார். திருட்டு சிடிக்கள் மூலம் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தினால், அது 30 நிமிடங்களுக்கு ஒருமுறை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும் என்றும் தெளிவுபடுத்தினார்.

  திருட்டு சிடிக்களை வாங்கிப் பயன்படுத்து பவர் ஒருவரைச் சந்தித்துக் கேட்ட போது, இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்த அதிகப் பணம் செலவழித்து, ஹார்ட்வேரை மாற்றி அமைக்க வேண்டிய துள்ளது என்றும், இந்நிலையில் மேலும் அதிக பணம் கொடுக்காமல் சாப்ட்வேர் கிடைக்கிறது என்றால் யார் தான் வாங்க மாட்டார்கள் என்று கூறினார்.
கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி லாபம் ஈட்டும் நிறுவனங்கள் வேண்டுமானால் சிஸ்டம் சாப்ட்வேர் தொகுப்பினைப் பணம் கொடுத்து வாங்கட்டும்; நாங்கள் வாங்க மாட்டோம் என்று கூறினார். மைக்ரோசாப்ட் ஒவ்வொரு நாட்டின் வாங்கும் சக்திக்கேற்ப சாப்ட்வேர் தொகுப்பிற்கு விலை வைக்க வேண்டும் என அவருடைய ஆதங்கத்தினை வெளிப் படுத்தினார். இந்நிலையில் இன்னொரு பிரச்னையும் எழுந்துள்ளது. வெளிநாட்டி லிருந்து பேக்கேஜ்டு சாப்ட்வேராக இறக்குமதி செய்தால், இந்திய அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரி எவ்வளவு என்று யாராலும் தெளிவாகக் கூற முடியவில்லை. இதனால் அதிகார பூர்வமான விண்டோஸ் 7 சாப்ட்வேர் கிடைப்பது தாமதமாகிக் கொண்டு வருகிறது என்று கூறினார். திருட்டு சாப்ட்வேர் வாங்காதீர்கள். கம்ப்யூட்டரில் பிரச்னை ஏற்படும்.

2012ல் கம்ப்யூட்டரும் இணையமும்

2012ல் கம்ப்யூட்டரும் இணையமும்


எந்த ஆண்டிலும் இல்லாத வகையில், வரும் புத்தாண்டில், 2012ல், பல புதிய சாதனங்கள் தகவல் தொழில் நுட்ப சந்தையில் மாற்றங்களை ஏற்படுத்த இருக்கின்றன. இதனை இந்த ஆண்டில் அறிமுகமான, பேசப்படும் சாதனங்கள் உறுதி செய்கின்றன. நிச்சயமாய் மாற்றங் களை ஏற்படுத்தப்போகும் இவற்றைப் பற்றி இங்கு காணலாம்.

1. விண்டோஸ் 8: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் இதுவரை விண்டோஸ் இயக்கங்களில் இல்லாத பல புதுமை களைக் கொண்டு வர இருக்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களுக்கிடையே உள்ள வேறுபாட்டினை உறுதியிட்டுக் கூற முடியாத வகையில், இரண்டையும் ஒரே இயக்கத்தில் கொண்டு வர உள்ளது. இதனால் பெர்சனல் கம்ப்யூட்டர் சந்தையின் இயக்கம் குறைந்து நோட்புக் கம்ப்யூட்டர்களுக்கும் டேப்ளட் கம்ப்யூட்டர்களுக்கும் உள்ள வேறுபாடு மறைய உள்ளது. குறிப்பாக தொடுதிரை பயன்பாடு இரண்டிலும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் ஒரே மாதிரியாக பயன்படுத்தப்பட இருக்கிறது.

2. குரல் வழி கட்டளை: தற்போது ஐ-போன் 4 எஸ், ஸ்மார்ட் போன்களில் இணைந்து கிடைக்கும் சிரி (Siri) இயக்க தொழில் நுட்பத்தின் வெற்றி, இன்று பலரை குரல் வழி கட்டளைக்கு தயார் படுத்தியுள்ளது. இந்த சாப்ட்வேர் தொழில் நுட்பத்தின் மூலம் குரல்வழி கட்டளைகளைக் கொடுத்து மெசேஜ் அனுப்பலாம்; அழைப்புகளை வரிசைப்படுத்தி ஏற்படுத்தலாம்; சந்திப்புகளை அமைக்கலாம். நீங்கள் சாதாரணமாகப் பேசி இதனைப் பக்குவப்படுத்தி, பின்னர் கட்டளைகளை போகிறபோக்கில் அளிக்கலாம். அவை அனைத்தும் நிறைவேற்றப்படும். போனில் மைக் ஐகான் ஒன்றைத் தட்டி, செய்தியை குரல் வழிச் செய்தியாகத் தரலாம். அனைத்தும் தந்து முடித்தவுடன், உங்கள் செய்தி டெக்ஸ்ட்டாக மாற்றப்பட்டு, பின்னர் உங்கள் அனுமதி பெற்று அனுப்பப்படும்.
பெர்சனல் கம்ப்யூட்டரில் இது பயன்படுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம். இந்த தொழில் நுட்பம் எங்கு இயங்காது என்று தற்போது எண்ணப்படுகிறதோ, அங்கு இது சோதனை செய்து பார்க்கப்பட்டு நிச்சயம் கம்ப்யூட்டரிலும் பிற சாதனங்களிலும் கிடைக்கும். இணைய தளங்களிலும் சிரி இயக்க இன்டர்பேஸ் போல அமைக்கப்படலாம். இதன் மூலம் நாம் அதில் சென்று வருவது எளிதாக்கப்படலாம். பெரும்பாலும் இது போன்ற சோதனைகள் சீனாவில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3.குறையும் மின் அஞ்சல் பயன்பாடு: இது பல ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிறது. இனி இமெயில் புரோகிராம்கள் தேவைப்படாது. 1992 ஆண்டுக்குப் பின் ஹாட்மெயில் அல்லது இமெயில் சேவை தரத் தொடங்கிய நிறுவனங்களில், இமெயில் அக்கவுண்ட் வைத்துக் கொண்டு, அதனைப் பெருமையாகப் பேசுவது ஒரு டிஜிட்டல் ஸ்டேட்டஸ் அடையாளமாக இருந்து வந்தது. ஆனால், இப்போது வளர்ந்து வரும் சிறுவர்கள், இமெயில் அக்கவுண்ட் எல்லாம் வைத்துக் கொள்வது இல்லை. சமுதாய இணைய தளங்களில் தங்களைப் பதிவு செய்து கொண்டு செயல்படுகின்றனர். தங்கள் குழுக்களோடு பதிவுகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.

4. தொலைக்காட்சிகளில் மாற்றம்: தொலைக்காட்சி பெட்டிகள் கம்ப்யூட்டர் பயன்பாட்டினை மேற்கொள்ளும் காலம் வந்துவிட்டது. இணைய பயன்பாடு கொண்ட டிவிக்கள் வரத் தொடங்கி விட்டன. திரைப்படங்களையும், தேவைப் படும் காட்சிகளையும், கேம்ஸ்களையும், விளையாட்டுப் போட்டிகளையும் கேட்டு வாங்கிப் பார்ப்பது, இந்த டிவிக்கள் மூலம் வளர்ச்சி அடையும். இத்தகைய சாதனங்கள், இனி கம்ப்யூட்டர் மற்றும் இணையப் பயன்பாட்டினையே முதன்மையாகக் கொண்டு இயங்கும். அவற்றுடன் டிவி சேனல்களையும் காட்டும்.

5. டிஜிட்டல் ஸ்டோர்கள்: இனி அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளையோ, வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களையோ நாம் வெளியே வாங்க வேண்டியதிருக்காது. அந்த அந்த நிறுவனங்களின் அப்ளிகேஷன் ஸ்டோர் களிலிருந்து இணையம வழியாக நம்பிக்கையுடன் வாங்கிக் கொள்ளலாம். ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இந்த வழியில் நிலையான தங்கள் வர்த்தகத்தை வளர்த்துக் கொண்டு வருகின்றன.

6. தடிமன் குறையும்: டிஜிட்டல் சாதனங்களின் தடிமனைக் குறைத்து பாக்கெட்களில் வைத்து இயக்கும் அளவிற்கு, ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் சாதனங்களின் தடிமனைக் குறைத்து வருகின்றன. இதற்கு முதலில் வழி வகுத்தது ஐ-பேட் மற்றும் அல்ட்ரா புக் கம்ப்யூட்டர்களே. கம்ப்யூட்டர் மட்டுமின்றி, மொபைல் போன்கள், ஸ்மார்ட்போன்கள், டேப்ளட் பிசிக்கள், டிவிக்களும் தங்கள் தடிமன் குறைந்த பதிப்புகளை வெளியிட்டு வருகின்றன. வரும் 2012ல் இவை மட்டுமே விற்பனையாகும்.

7. அனைத்திலும் டேப்ளட் பிசி: சாம்சங் நிறுவனம் டேப்ளட் பிசி இணைந்த ரெப்ரிஜிரேட்டர் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதனை மற்ற சாதனங்கள் வடிவமைக்கும் நிறுவனங்களும், ரெப்ரிஜிரேட்டர் தயாரிக்கும் நிறுவனங்களும் பின்பற்றலாம். கார்களின் டேஷ் போர்டில், டேப்ளட் பிசிக்கள் இணைந்து கிடைப்பது இனி கார் ஒன்றின் அம்சமாகக் கருதப்படும்.

            8. ஒருவரோடு ஒருவர்: இனி ஆன்லைன் கேம்ஸ் எல்லாம் தேவைப்படாது. ஸ்மார்ட் போன்கள் வழியாக இருவர் தனி நபர் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடலாம். இதற்கு நெட்வொர்க் தேவைப்படாது. இரண்டு போன்கள் தங்களுக்குள் நெட்வொர்க் உதவியின்றி பேசிக் கொள்ள முடியும். இந்த வசதி வலுப்படுத்தப்பட்டு, பல வகையான தொடர்புகளை ஏற்படுத்தித் தரும்.
எனவே வரும் ஆண்டில் டிஜிட்டல் சாதனங்களின் தடிமன் மிக மிகக் குறைவாக இருக்கும்; சமுதாய இணைப்பு தருவதாக இயங்கும்;ஒருவருக்கொருவர் இணைப்பு கொள்வது, பேசுவதும், விளையாடுவதும், தகவல்களைப் பரிமாறிக் கொள்வதும் மிக மிக எளிதாக அமையும்.

படங்களுக்கு மெருகூட்ட இமேஷ் டூல்ஸ்

படங்களுக்கு மெருகூட்ட இமேஷ் டூல்ஸ்

மார்ச் 16, 2010
     படங்களை நம் கற்பனைத்திறனுக்கேற்ற வகையில் அமைக்க, இமேஜ்களைக் கையாளும் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் உள்ளன. இருப்பினும் இவற்றை விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்துவது என்பது அனைவராலும் முடியாத ஒரு விஷயமாகும். தொழில் ரீதியாகவும், பயன்படுத்திப் பார்க்கும் ஆசையிலும் இலவச இமேஜ் டூல்ஸ்களை பலர் எதிர்பார்க்கின்றனர். இணையத்தில் இந்த நோக்கத்தில் தேடுகையில், ஒரு சில குறிப்பிட்ட வகையில் இமேஜ்களை எடிட் செய்திடும் வகையில் பல புரோகிராம்கள் இலவசமாகக் கிடைப்பது தெரிய வந்தது. அவை குறித்த பட்டியல் இங்கு தரப்படுகிறது. இவற்றை இயக்கிப் பார்த்துப் பயன் பெறுவது உங்களின் திறமையைப் பொறுத்தது.


         1. வாட்டர் மார்க் இமேஜ் (Water Mark Images): உங்கள் படங்களுக்கு வாட்டர் மார்க் அமைத்திட வேண்டுமா? மொத்தமாக 20 படங்கள் வரை இணைத்து அமைத்திட ஒரு புரோகிராம் உதவுகிறது. படங்களைத் தயார் செய்து, வரிசைப்படுத்தி, அவற்றுக்கான வாட்டர்மார்க்கில் இடம் பெற வேண்டிய எழுத்துக்களை ஒழுங்கு செய்து, அதன் இடத்தை வரையறை செய்து, அவற்றிற்கு விருப்பப்பட்டால், ஷேடோ எபக்ட் கொடுத்து அமைக்கலாம். இதன் பெயர் WatermarkImages. இதனை http://watermarkimages.com/என்ற முகவரியில் பெறலாம்.


             2. பிக்ஸ் ரெட் ஐஸ் (Fix Red Eyes): டிஜிட்டல் போட்டோக்களை எடுக்கையில் நம் கண்களில் சிகப்பு புள்ளிகள் அமைவது தவிர்க்க முடியாததாக, சில டிஜிகேம்களில், அமைந்துவிடும். பல கேமராக்களில் இவற்றை நீக்குவதற்கான செட்டிங்ஸ் கொடுத்திருந்தாலும், சில வேளைகளில் கண்களில் சிகப்பு கோளங்கள் அமைந்துவிடுகின்றன. இந்த சிகப்பு வளையங்கள் அல்லது கோளங்களை நீக்கினால் தான் படங்கள் பார்க்கும் வகையில் அமையும். இதற்கான வசதியினை http://www.fixredeyes .com// என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம். இந்த தளத்திற்கு, இவ்வாறு சிகப்பு கோளங்கள் நீக்க வேண்டிய இமேஜ்களை அப்லோட் செய்திட வேண்டும். பின் அவற்றை சிகப்பு கோளங்களை அடையாளம் காட்டி, பிக்ஸ் (Fix) செய்திட கட்டளை கொடுத்தால், அவை நீக்கப்பட்டு போட்டோக்கள், நல்ல முகங்களுடன், சிறப்பாகக் கிடைக்கின்றன.

        3. இமேஜ் ஸ்பிளிட்டர் (Image Splitter): படங்களைப் பிரித்து பல நெட்டு மற்றும் குறுக்கு வரிசைகளில் அமைக்க விரும்புகிறீர்களா? கவலையே பட வேண்டாம். உங்கள் படத்தை http://www.htmlkit.com/ services/is/ என்னும் தளத்திற்கு அப்லோட் செய்திடுங்கள். பின் எத்தனை நெட்டு மற்றும் படுக்கை வரிசை என்று தேர்ந்தெடுங்கள். எந்த இமேஜ் பார்மட்டில் படம் தேவை என்பதனையும், அதன் ரெசல்யூசன் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதனையும் கொடுத்திட்டால், படம் நீங்கள் விரும்பிய வகையில் கிடைக்கும்.

     4. இமேஜ் மெர்ஜர் (Image Merger): இரண்டு படங்களில் ஒன்றைப் பின்னணியிலும், மற்றொன்றை முன்பகுதிப் படமாகவும் அமைக்க விரும்புகிறீர்களா! இதற்கென ஒரு ஆன்லைன் டூல் கிடைக்கிறது. http://www.imagemerger.net/என்ற முகவரி உள்ள தளத்திற்கு இரண்டு படங்களையும் அப்லோட் செய்திடுங்கள். முதல் படம் பின்னணியிலும், அடுத்த படம் முன் இடத்திலும் இருக்கும்படி அமைக்கப்படும்.

       5. மிரர் எபக்ட் (Mirror Effect): எந்தப் படத்திற்கும், அதன் வலது இடது பக்கங்களிலோ அல்லது மேல் கீழாகவோ, அச்சாக ஒரு கண்ணாடி பிம்பம் தோன்றும் வகையில் படத்தை மெருகூட்டி அமைக்கலாம் http://www.mirroreffect.net/ என்ற தளத்திற்கு படத்தை அப்லோட் செய்திடுங்கள். அடுத்து பிரதிபலிக்க வேண்டியதற்கான அளவைக் கொடுக்க வேண்டும். கீழ், மேல், இடது மற்றும் வலது என எந்த வகையில் பிரதிபலிக்க வேண்டும் என்பதனையும் அமைத்திட்டால், அழகான பிம்பத்துடன் கூடிய படமாக உங்கள் இமேஜ் அமைக்கப்பட்டுத் தரப்படும்.

          6. டெஸ்ட் இமேஜ் (Text Image): போட்டோ ஒன்றை டெக்ஸ்ட் இமேஜ் ஆக மாற்றுவதற்கு ஒரு தளம் உதவுகிறது. இதன் முகவரி http://www.textimage.com/index.html HTML, ASCII or Matrix என்ற வகைகளில் எந்த வகையில் உங்களுக்கு வேண்டும் என தேர்ந்தெடுத்து தந்தால், இந்த தளம் அவ்வாறே அமைத்துத் தருகிறது.

           7. ஸ்பீச் பப்பிள்ஸ் (Speech bubbles): சித்திரக் கதை பார்த்திருப்பீர்கள். குழந்தைகளாய் இருக்கும்போது இவற்றைப் படித்து ரசிக்காமல் இருந்திருக்க மாட்டோம். வளர்ந்த பின்னர் இந்த படங்களுக்குப் பதிலாக நம் போட்டோக்களை வைத்து ஏன் அமைக்கக்கூடாது என்ற ஆர்வம் வந்திருக்கும். நம் குழந்தைகளின் படங்களையே வைத்து அமைக்கலாமே என்று ஆசைப்பட்டிருக்கலாம். அப்படியானால் படங்களுக் கான வசனங்களை தயார் செய்து அவற்றை படங்களுக்கு மேலாகக் குமிழ்களை உருவாக்கி அமைக்க வேண்டுமே! உங்களின் இந்த ஆசைகளுக்காகவே ஒரு தளம் உள்ளது. http://speechable.com/ என்ற முகவரியில் உள்ள தளம் இந்த வசதியை அமைக்க உங்களுக்கு உதவுகிறது. அமைய இருக்கின்ற டெக்ஸ்ட் மற்றும் பப்பிள் சைஸ் ஆகியவற்றை வரையறை செய்து அமைத்தால் போதும். படம் மாற்றப்பட்டு கிடைக்கும்.

              8. வாட்டர் எபக்ட் (Water Effect): சில அழகான நீர்நிலைக் காட்சிகளைப் பார்த்திருப்பீர்கள். அருகே இருக்கும் மரங்கள், பறவைகள், வானத்தில் உள்ள நிலா ஆகிய எல்லாம் அப்படியே பிம்பங்களாக நீர் அலைகளில் உருவத்தை ஒட்டி தலைகீழாகக் காட்டப்பட்டு அழகாக இருக்கும். நம் உருவங்களை இப்படிப் பார்க்க வேண்டுமே என்ற ஆவல் உள்ளதா? இதற்காக நாம் நீர்நிலைகளைத் தேடி, ஒளி சரியாகப்பட்டு, பிம்பங்கள் அசையாத நிலைக்குக் காத்திருந்து பின் போட்டோ எடுப்பது என்பது நிச்சயம் அனைவருக்கும் கை கூடாது. ஏற்கனவே எடுத்த போட்டோக்களுக்கு இந்த எபக்ட் தருவதற்கென ஒரு தளம் உள்ளது. அதன் முகவரி http://www.watereffect.net/. இந்த இணைய தளம் சென்று, எந்த படத்திற்கு இந்த தலைகீழ் தண்ணீர் உருவம் வேண்டும் என எண்ணுகிறீர்களோ, அதனை அப்லோட் செய்திடவும். ஓரிரு நிமிடங்களில் நீர் அருகே படத்தில் உள்ளவர்கள் இருந்தால் எப்படி காட்சி இருக்குமோ, அந்த வகையில் போட்டோ கிடைக்கும். அந்த தளத்தில் போட்டோ இருக்கும் வரை, நீர் அசைவது போலவும், அதில் தெரியும் உருவப் பிம்பங்களும் அப்படியே அலை அலையாய் இருப்பது போலவும் காட்சி இருக்கும். அதை காப்பி செய்து நம் கம்ப்யூட்டரில் சேவ் செய்திட்டால் இந்த அனிமேஷன் இல்லாமல், பிம்பங்களுடன் போட்டோ இருக்கும்.

            9. வளைவுகள் அமைக்க (Round Pic): உங்கள் படங்களின் மூலைகளில் அழகான வளைவுகள் அமைக்க வேண்டுமா? நீங்கள் எந்தப் படத்தை அப்லோட் செய்தாலும், அதன் ஓரங்களை வளைவுகளுடன் அமைத்துத் தருகிறது இந்த தளம்.வளைவுகள் எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை செட் செய்து, படத்தை அப்லோட் செய்திட்டால், படத்தின் காட்சி பிரிவியூவாகக் கிடைக்கும். உங்களுக்குப் பிடித்திருந்தால் ஓகே கொடுத்து படத்தைப் பெறலாம். இந்த தளத்தின் முகவரி: http://www.roundpic.com/

             10. வேடிக்கையான படம் (Be Funky): உங்கள் படங்களுக்கு டிஜிட்டல் பெயிண்ட் அடிக்க வேண்டுமா! அல்லது அவற்றைக் கார்ட்டூன் படங்களைப் போல அமைக்க வேண்டுமா! http://www.befunky.com/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். படத்தைத் திறந்து, எந்த மூலையையும் இழுக்கவும். பலவகை பின்னணி மற்றும் துணை சாதன வசதிகளைப் பயன்படுத்தி கார்ட்டூன் வகையில் படத்தை மாற்றவும். உங்கள் படங்களை மை, பென்சில் போன்றவற்றில் வரைந்தது போலவும் மாற்றலாம். இந்த தளத்தில் வீடியோக்களுக்கும் கார்ட்டூன் எபக்ட் தர முடியும்.