Tuesday 24 July 2012

திரு, கருணாநிதிக்கு நான் எழுதும் கடுதாசி

            இந்த தமிழனித்தின் தலைவர் என சொல்லிக்கொண்டு நீங்கள் எதயோ தேடி எதையோ பெற்று இன்று இதைத்தான் செய்ய முடிந்ததென்று நெஞ்சினிக்க இன்றுவரை பொய்கள் பல சொல்லி இன்றும் தமிழனை நம்ப வைத்து டெசோ மாநாடு நடத்துகின்ற உங்களின் கபட நாடகத்தை உலக தமிழினமே மிகவும் ரசனையோடு ரசித்துக்கொண்டிருக்கின்ற இத்தருணத்தில்

ஆட்டுகின்ற நாய் வால் போல்....தானாகவே உங்கள் இசைவுக்கு வால் ஆட்டுகின்ற வெறுமாவளவனுக்கு ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருக்கையில்

இனி கொஞ்சமும், வெட்கப்பட்டவோ, பயப்படவோ தேவையில்லை என்
பயணப்பாதைகளில் என்ற தீர்க்கமான முடிவுடன் தான் உடன் ஓடிப்போய் கடுதாசி வாங்கி உங்களுக்கு எழுதிட வேண்டுமெ தோன்றியது மனதில்,,,

     ஒரு தனிமனிதனுடைய வளர்ச்சியில் அக்கரை கொண்டு வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டிய ஆட்சியாளர்கள், இன்று வெறும் 10 ஆயிரம் அரசு வேலைக்கு 11 லட்சம்பேர் எழுதுகின்ற சூழ்நிலைக்கு நம்மை தள்ளிவிட்டு வேலையற்று வெட்டியாய் வேலை கொடுக்க துப்புகெட்ட பெருமைமிக்க ஆட்சியாளர்கள் ஆட்சி செய்கின்ற வேதனைப்படுகின்ற இத்தருணத்தில் மிக மிக அவசரமாக உங்களுக்கு கடுதாசி எழுதிட அவசியமாயிற்று

       வேதனையின் விழும்பில் இருந்து இருந்துகொண்டு  இங்கு தமிழர்கள் பலர் மார்வாடி கடைகளில் கந்துவட்டி, கெந்துவட்டி என வரண்டுபோன  வாழ்க்கையாய் தன் அம்மாவின் தாலியை அடகு வைத்துவிட்டு படித்தால்  அரசு மதுபான கடைகளில் எச்சி கிளாஸ் கழுவுகின்ற வேலைதான் கிடைத்தது உங்கள் ஆட்சி காலத்தில்

வேர்களைப் பற்றிய
விபரங்கள் புரியாமல்
விழுதுகள் வெட்டியது நீங்கள் தான் என்பதை உணர வயதில் பெரியவரான உங்களுக்கு இன்னும்  புரிந்துகொள்ள பக்ககுவம் இல்லை என்பதுதான் கொடுமை,,,

காரணம்
 

வீட்டு விளக்கு வெளிச்சத்தின் விளிம்புகளில் சிக்கி தவிக்கும் விட்டில் பூச்சில்களைப்போல் காலம் முழுவதும் தமிழரின் வாழ்வுமட்டும் இன்றுவரை வெளிநாட்டில் ஆயிரமாயிரம் உறவுகள் அடிமைபோல் கொத்தடிமையாக வேலை பார்ப்பது ஐந்துமுறை ஆட்சி கட்டிலில் அமர்ந்திருந்து தமிழனை மறந்து தன் குடும்பத்தை அறியனை ஏற்றிவதில் குறியாக கொண்ட உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லையென நினைக்கின்றேன் நான்



        உலகில் ஒட்டடுமொத்த மனித இனமும் சுற்றி நின்று,இனப்படுகொலையைப் பற்றிய அக்கறையே இல்லாமல் நிதானமாக வேடிக்கை பார்த்திட்டாலும் கூடவே தமிழின தலைவர் என சொல்லிக்கொள்ளும் நீங்களும் ராமதாசும் வெறுமாவளவன் செயலலிதா காங்கிரஸ் கைத்தடி கலாம் இன்னும் பிற கேடுகெட்ட அரசியல்வாதிகள் வாழுகின்ற கொடூரத்தின் மொத்த உருவமாய் இருக்கிற சிங்கள அரசை வெட்கமின்றி ஆதரிக்கின்ற ஊழலால் உலக அரங்கில் முதன்மை இடம்பெற்ற கேடுகெட்ட உங்கள் இந்தியாவில் அதிலும் நீங்கள் வாழுகின்ற தமிழகத்தில் நானும் வாழ்வதை எண்ணி மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற நாட்கள் ஏராளம் ஏராளம்

       உங்களை வாழும் வள்ளுவர், வாழ்ந்த அண்ணாவின் வாரிசு, தமிழினத்தின் முதல் எழுத்தே என நெஞ்சில் மாசுபடர்ந்து செழுமையடைந்த கர்வம் கொண்ட கெட்ட எண்ணத்தோடு துதிபாடும் செம்பு தூக்கி வைரமுத்து போன்றோர்களால் உங்களை உள்ளத்தில் இன்றுவரை உயர்த்தி புகழப்பட்டாலும் கூட

அதைவிட இன்னும் உங்களை உயர்வாய் ஒரு காலத்தில்
சித்தர்களில் சிறந்த யோகியாகவும்,
சிந்தனையில் பெரிய ஞானியாகவும்,
புத்தரோடு உத்தமர் காந்தியும் என புகழாரம் சூட்டி மற்றவரிடம் உங்களை புகழ்ந்து பெருமை பேசிய நாட்களும், நேரமும் மிக மிக அதிகம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள் முதியரே


   இருப்பினும் கண்ணீர் துளிகளை முற்றிலுமாக புறக்கணித்து விட்டு அச்சுறுத்தல், மிரட்டல், அவமானம், புறக்கணிப்பு, தோல்வி என எல்லாம் ஒன்றாய் துரத்திய உங்கள் 5 வருட ஆட்சி காலத்தில்


தற்கொலை தகுதியற்றவர்கள் தஞ்சம்புகும் இடமென தெரிந்தும் நான்
மலை விளிம்பில் நின்றோ
இரயில் தண்டவாளத்திலோ
விஷ புட்டிகளையோ குடித்துவிட்டோ
அல்லது சுருக்குக் கயிற்றையோ நாடுவது சாலச் சிறந்தது என
தீர்க்கமாக முடிவு செய்து தற்கொலைவரை சென்றுவந்த நாட்கள் அதிகம் என்பதையும்
எம் இனமே எழும்புக் கூடானபோது அமைதியாய் மருத்துவமனையில் மல்லாக்கா படுத்திருந்துவிட்டு இன்று டெசோ மாநாடு நடத்துகின்ற உங்களுக்கு இந்த பதிவின் மூலம் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றேன் என்றும் நான்,,


இன்றும் நீங்கள்
ஓலைப்பாயில் ஒன்னுக்கு போன கதையாய்

தினசரி எதோ எதோ தட தடவென இந்த நாதியற்ற தமிழினத்திற்காக உளரிக்கொண்டிருப்பதால்

          என்னை போன்ற பல தமிழ்மக்களும், இளைஞர்கள் மனசுல பெருவெள்ளமாய் உங்கள் மீதான வெறுப்பு இன்னும் அதிகமாக இனி ஓடுமே தவிர சற்றும் குறையப்போவதில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள் இலவசம் என்ற பெயரில் தமிழகத்தை தள்ளாடச்செய்த பெரியவரே,,,,,


      கட்டுக்குள் அடங்காமல் குவிந்திடும் எண்ணங்கள் கருத்தாக்கும் முயற்சியில் மிக தீவிரமாக இறங்கிவிட்டேன் நான்  இத்தருணத்தில் என் பதிவுகளுக்கு ஆக்கப் பூர்வமாக பதில் அளிப்பதை தவிர்த்துவிட்டு தொலைபேசியில் மிரட்டுவதோ அல்லது எச்சரிக்கை செய்வதோ விடுத்து நேரிலோ அல்லது எனது பதிவிற்கு ஆக்கபூர்வமான பதில் தரச்சொல்ல வாய்மொழி உத்தரவு விடுங்கள் உங்கள்  துதிபாடி கழக கைத்தடிகளுக்கு எம் இனத்தை கருவருத்தவனுடன் கைகுலுக்கி பல் காட்டி சிரித்த தமிழகத்தின்  நக்கியவாதி வெறுமாவளவனின் வெற்று கூட்டத்திற்கும்  அல்லது

    காவல் நிலையத்தில் புகார் செய்யச் சொல்லுங்கள்
காரணம் சிறை என்பது குறவான இடத்தில் அறிவு எனும் வெளிச்சத்தை வைத்துக்கொண்டு இதயத்தை தீட்டி எடுக்கின்ற  பயிற்சிகூடம் என்பது உங்களுக்கு வாய்ப்பு இல்லை காரணம் சிறைக்கு நீங்கள் சென்றதில்லை கைது செய்ய வந்தால் ஐயோ குய்யோ என கத்தமட்டுமே தெரிந்த உங்களுக்கு


தமிழகத்தில் பல்வளம் பெருக
நல்லுளம் கொண்டோர் வாழ்த்த நல்லன யாவும் நாளும் நிறைவாக கிடைத்திட
நல்லறங் காப்பீர் நயந்துதான் என நம்பி கடைசியில்

கடற்கரை கிளிஞ்சல்கள் குழந்தையின் கண்களுக்கு  வைரங்களாக தெரிவதைப்போல்

காண்பவர்  கண்களுக்கு நீங்கள் உயர்வாக நினைத்து பகல் கனவு கண்டுதான் அறியணையில் ஏற்றினார்கள் தமிழர்கள்

   ஆனால் நீங்களோ தமிழரின் வறுமையின் கொடுமையான ஏழ்மை மனங்களை நன்றாக அறிந்துகொண்டு தமிழன் சிந்திக்க மறந்த காரணத்தால்  இலவசத்தை கண்டு மதி மயங்கிவிடுவார்கள் என்ற உங்கள் தந்திர எண்ணத்தினால் நீங்கள் தொடங்கிவைத்த இலவச டீவி இன்று உருமாறி ஆடு மாடுவரை வந்துள்ளது தமிழகத்தில் இலவசம்,,,

   எம் இனம் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்திட்ட  நான் கையாலாகாதவனாகி போய் இருக்காலம் என் இனம் தோற்றுப் போன இனமல்ல
ஒரு நாதியற்ற பிணமல்ல என்பதை நிரூபிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை

 யுகங்கள் பல கடந்தும் குரங்கின் வழித்தோன்றி
இன்னும் அதன் புத்திமட்டும் மாறவில்லை என்பதற்கு சான்றாக நீங்கள் எம் உறவுகள் கத்தி கதறி அழுதபோது தான் பதவியில் இருக்கும்போது தன் குடும்பத்திற்கு பதவிவேண்டும் என்பதற்காக டில்லியில் சோனியாவின் காலடியில் மண்டியிட்டுக்கிடந்துவிட்டு தற்போது டெசோ மாநாடு நடத்துகின்ற  உங்களின் பெருமைகளை நான் ஊரறியசெய்வது என் கடமையாக எடுத்துகொள்வேன் என் எதிர்காலத்தில் நான்

என்னைபோன்ற ஆயிரமாயிரம் இளைஞர்களின்  கொள்கை என்னவோ சற்று காலம் கருதி உறைந்து போயிருக்கலாம்


   உலகில் எங்கிருந்தும் எம் இனத்திற்கு எதிராக நாலாபக்கமும் ஆயிரம் அநீதிகள்  சூழ்ச்சிகள் பல செய்து  கோபக்கனல் மூட்டப்படலும், எரிவது என்னவோ நீங்கள்  தமிழினத்திற்கு இன்றும் செய்கின்ற துரோகம்தான்  இன்னும்  நீங்கள் செய்கின்ற துரோகம் எங்களைபோன்ற இளைஞர்களின் நெஞ்சில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருப்பதை காலம் உங்களுக்கு உணர்த்தும் 

தன் வாரிசுகளின் வாயிலாக
உங்கள் தந்திர அரசியலில் மீண்டும் கையிலெடுத்து  இலவச மந்திர வேலைகள் செய்து  தமிழர்களின் அறிவுச்சுடரை  அலைக்கழித்து அந்த இலவசம் என்ற புயலில் நனைய வைத்து குளிர்காய்ந்து மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என ஒருபோதும் இனி பகல் கனவு காணவேண்டாம் நீங்கள்

    இனி பிறக்கின்ற தமிழ்சாதி ஆயிரமாயிரம் பிறப்புகள்களிலும்   நிங்கள் எப்படி எம் இனத்திற்கு துரோகம் செய்தீர்கள் என்பதை பட்டியலிட்டுவிட்டு உயிரின் கடைசி பணயம்வரை  எதிர்காலத்தில் தூய எண்ணங்களோடு வாழப்போகின்ற எதிர்கால சந்ததிக்கு  உங்களின் உண்மை தமிழின துரோக அடையாளங்களை சொல்லி 

  என் உடல் சாம்பலாய்ப் போகும் வரை  சுட்டிகாட்டிவிட்டுத்தான்  நான் மடிவேன் என்பதை நீங்கள் ஒருபோதும் மறவவேண்டாம் சோனியாவுக்கு பாத்தியபட்டவரான நீங்கள்

இது  பதுங்கு குழிகளுக்குள் புதைந்துபோன எம் உயிர்கள் மீது 

 சத்தியம் சத்தியம் சத்தியம்

இக்கடிதத்தில் இடமில்லாத காரணத்தால் எனது அடுத்த கடிதம்  இன்னும் சில தினங்களில் உங்களை வந்து சேரும்

நன்றி உங்கள் மேலான வசைபாடுகளை ஆவலோடு எதிர்பார்க்கும்
சிகா,லெனின் கீரமங்கலம்
9047357920

21 comments:

  1. கடுதாசியை மறக்காமல்
    கனிமொழி ஆத்தா விலாசத்துக்கு
    அனுப்பி வைக்குமாறு
    அன்புடன் வேண்டும் ஏமாந்த தமிழன்

    ReplyDelete
    Replies
    1. நம்ம ஸ்பெக்ட்ரம் ராஜா முகவரிக்கு அனுப்பினால் போதுமா சின்னா ஆயி கனிமொழிக்கு கிடைத்திடுமா அண்ணா என் கடுதாசி,,

      Delete
  2. லட்சக்கணக்கான தமிழ் உள்ளங்களின் கொதிப்பை நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள் .....வாழ்த்துக்கள் ............

    ReplyDelete
    Replies
    1. என் பதிவு எப்பொழுதும் வேதனையின் வெளிப்பாடுதான் அண்ணா பாராட்டுதலுக்கு உரியது அல்ல,,,

      நான் இறந்து மண்ணோடு மண்ணாக மக்கி போகும்வரை கண்டிப்பாக தமிழ் தமிழர் என்று சொல்லி வயிறு மட்டுமல்ல தன்குடும்பத்தையும் வளர்க்கின்ற கேடுகெட்ட அரசியல்வாதிகளின் மீதான கொதிப்பு அடங்கவே அடங்காது நண்பரே

      Delete
  3. தமிழகம் மறந்துவிடாத மிகப்பெரிய வேதனைகளை, வெறும் அரசியல் ஆதாயத்திற்காகவும், குடும்ப நலத்திற்காகவும் மட்டுமே ஆட்சியில் இருந்தவர்களின் மனதுக்கு ஒருசாமனிய மக்களின் குரல் அவ்வளவு சீக்கிறத்தில் கேட்டு விடாது...

    வயது தளர்ந்து அனைத்து அடங்கி ஓடிங்கியப்பின்னும் வார்த்தைகளால் மக்களை ஏமாற்றும் பக்குவம் கலைஞரைத்தவிர வேறுயாருக்கும் வந்துவிடாது...

    அறிக்கைகளை பேட்டிகளை விட்டுவிட்டு நிம்மதியாக ஓய்வு எடுத்தாலே போதும்அதை ஏன் செய்யமறு்கிறார் என்று தெரியவில்லை...

    தங்களின் வேதனை எனக்கு புரிகிறது... ஆனால் அவர்களுக்கு..?

    ReplyDelete
  4. திடீரென காற்றடித்தது.. மேகம் கூடியது..மின்னல் மின்னியது..இடி இடித்தது.. மழை பெய்தது.. எல்லாம் உங்கள் பதிவில்தான் லெனின் சார்.. ... மழை என்றால் அப்படி ஒரு கோடை மழை... !

    ReplyDelete
  5. தம்பி உனக்கு என்ன வயது என்பது எனக்கு தெரியாது நம் தமிழ் இனம் வாழ கலைஞ்சரின் அர்ப்பணிப்பு என்பது 64 வருடங்கள் தமிழர்களுக்காக வாழும் தலைவர் அவர் நேற்று வந்த சீமான் சைகோ போன்ற மடிபிச்சை காரர்களின் கைபிடியாக நீ இருக்கும் போது ltte உருவாக கலைஞர் ஒரு கரணம் என்பதை நீ மறுக்கமுடியாது அவர்களுக்குள் சகோதர யுத்தம் வந்த போது அதை தட்டிகேட்க தயங்கவில்லை முதல்வராக இருந்த போது எத்தனையோ தரம் சட்டபேரவையில் தீர்மானம் போட்ட போதெலாம் எந்த மயிரண்டியும் ஆதரவு தரவில்லை அப்போது நீ ஜெயலிதா சுத்து கழுவ போயிருந்தியா?

    ReplyDelete
    Replies
    1. அட விடுங்க தலைவா இவனுங்க எல்லாம் முதுகில் குத்தும் கயவர்கள். கலைஞர் பற்றி இவனுக்கு என்ன தெரியும். இலங்கை தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சி அதிகாரத்தை இழந்தவர். இழந்த பின்பு யாரு அவருக்கு உதவினர்ந்னு கேளுங்க

      Delete
    2. அண்ணா நீ்ங்கள் வேண்டுமானால் எம் இனதுரோகி கருணாநிதியின் பற்றாளராக இருக்கலாம் அதற்காக நாகரீகமற்று பேசுவது முறையல்ல எப்பொழுதும் யாரிடமும் எந்த கருத்தாக நாகரீகமாக சொல்ல கற்றுகொள்ளுங்கள் அதுவே நல்ல பழக்கம்

      Delete
  6. அண்ணா முதலில் எந்த ஒரு விசயத்தையும் மிகவும் நாகரிகத்தோடு எழுதிட கற்றுக்கொள்ளுங்கள் முதலில் நான் செயலிலிதா வைகோ சீமான் போன்ற ஆதரவாளரும்இல்லை கருணாநிதியை வேண்டுமென்ற திட்டி பதிவு எழுத வேண்டிய அவசியம் எனக்கு இல்லை கருணாநிதிக்கு நான் எழுதும் கடுதாசி முத்தமிழ் வித்தகருக்கு நான் எழுதும் கடிதம் ஐந்தமிழ் அறிஞருக்கு நான் எழுதும் கடிதம் இவைகளை முழுமையாக படித்துவிட்டு முடிந்தால் ஆக்கபூர்மான பதில் சொல்லுங்கள் இல்லையெனில் கருணாநிதிக்கு பல்லக்கு மட்டும் தூக்குங்கள் இப்படி அநாகரிகமாக பதில் சொல்லாதிர்கள் அண்ணா
    உங்களுக்கு திருட்டு ரயில் ஏரி வந்து தமிழ் தமிழர் என ஏச்சு பிழைக்கின்ற கேடுகெட்ட கருணாநிதி உயர்வாக தெரிந்தால் எம் உறவுகள் மாண்டபோது காங்கிரஸ் காலை பதவிக்காக நக்கி பிழைத்த கருணாநிதி உயர்வாக தெரிந்தால் எம் ஆயிரம் ஆயிரம் தொப்புள்கொடி மாண்டுபோய் விலாசமற்ற விவதைகளாக இலைஉதிர்ந்து நாதியற்று கிடக்கின்ற எம் உறவுகளின் வேதனை உங்களுக்கு தெரியுமா உங்கள் கருணாநிக்கு தெரிந்ததெல்லாம் கற்புக்கு புது இலக்கணமிட்ட குஸ்புதான் ஏன் நான் இறப்பதற்கு தனி ஈழம் பெற்றுதருவேன் என போன மாதம் வீராப்பு வெட்டி அறிக்கை கொடுத்துவிட்டு இப்போது தனி ஈழத்தை பற்றி பேசினால் சோனியா செருப்பால் அடிக்குமென்றா இப்போது நா பிரண்டு பேசுகிறார்

    வேண்டாம் இத்தோடு முடித்துக்கொள்ளுங்கள் முடிந்தால் ஆக்கபூர்வமான பதிலை சொல்லுங்கள் அல்லது படித்தோ படிக்காமலே செல்லுங்கள் அதற்காக கருணாநிதியை உயர்த்தி பேசவேண்டாம் என்னை 15நாள் ஈழத்திற்கு ஆதரவாக போஸ்டர் அடித்த ஒரே காரணத்திற்காக சிறையில் தள்ளிய இந்த கிழவனா ஈழம் பெற்று தரபோகிறார்

    எங்களுக்கான பாதையை நாங்களே அமைத்துகொள்வோம் எங்கோ தேசம் கடந்து எங்கள் தமிழின ஒரே தலைவர் வாழ்கிறார் என்ற சந்தோசம் மட்டும் எங்களுக்கு போதும்

    ReplyDelete
    Replies
    1. தம்பி ஒரு விஷத்தை தெளிவாக புரிந்துகொள் மும்பாயில் திவிரவாதி கசாப் 100 பேரை கொன்றான் அவனை தூக்கில் போடுங்கள் என்று சொல்லும் நீங்கள் தமிழ் சகோதரர்களையே கொன்று சகோதர யுத்தம் உண்டாகியது யார்? ராஜீவ் கொலையான போது எத்தனை தமிழ் சகோதர்கள் சிதறி பலியானார்கள் அவர்கள் தமிழர்கள் இல்லையா? ராஜீவை கொலை நடந்திருக்கா விட்டால் இந்தியாவில் விடுதலை புலிகளின் நிலை உச்சத்தில் இருந்திருக்கும் ஆனால்?????? சட்டபேரவை வில் தளபதியை இந்தியாவிற்கு கொண்டுவந்து தூக்கில் இடவேண்டும் என்று தீர்மானம் போட்ட முதல்வர் தற்போதைய முதல்வர் சைகோ தொடுமாரன் ஆகியோர்களை பொட சட்டத்தில் தள்ளியதும் அவர்களே. போர் என்றால் அப்பாவி மக்கள் கொலபடுவது சகஜம் என்று பெட்டி கொடுத்தது அவர்கள் எல்லாம் நல்வர்கள். உன் தந்தையை ஒருவன் கொன்றால் அவன் தமிழன் என்பதால் நீ தமிழன் என் தந்தையை கொன்றாய் என்று தொல் மீது கை போட்டுகொண்டு செல்வாயா? நீங்கள் எது சொன்ழலும் நங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. பல தியாகங்கள் செய்த கலைஞர் எங்களுக்கு உயர்வனவரே. சகோதர யுத்தம் நடந்திராவிட்டால் ஈழம் இன்று சாத்தியமே எங்கள் கலைஞர் இல்லாவிட்டால் தமிழன் என்ற இனமே அழிந்து போயிருக்கும் அதை முதலில் புரிந்து கொள் உங்களை சிறை வைத்தார் என்பதற்காக கலைஞர் அவர்களை துற்ற கூடாது நீ மட்டும் ஒரு வயதானவரை அவன் இவன் என்று எழுதுவது நாகரிகமா?

      Delete
    2. அண்ணா இதில் நான் எழுதிய பதிவிற்கு தாங்கள் சொல்ல வந்த கருத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது அண்ணா முதலில் நான் செயலலிதா கட்சியோ மற்றும் இன்ன பிற இயக்கத்தை சேர்ந்தவனோ இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள், என்னை பொறுத்தவரை நாணயத்தின் இரு செல்லா பக்கம்தான் செயலலிதா, கருணாநிதி

      மேலும் என்னை சிறையில் அடைத்ததால் நான் கருணாநிதி மீது ஆத்திரபட்டு எழுதுவதாக நீங்கள் சொல்வது தவறு காரணம் புதுக்கோட்டை சிறை திருச்சி மத்திய சிறை என் தமிழ்சாதிக்காக நான் எத்தனைமுறை சிறை சென்றேன் இனியும் என்ன செய்ய போகிறேன்எ என்பதை சொல்லி நான் பெருமை தேட விரும்பவில்லை அண்ணா


      உங்கள் கருத்துப்படி பிரபாகரனே ராசிவ்காந்தியை கொன்றதாக இருக்கட்டும் அதற்கு முன் அமைதிப்படை அனுப்பி எம் ஆயிரம் ஆயிரம் உறவுகளை கற்பளித்து படுகொலை செய்ய காரணமாக இருந்த ராசிவ் உயிர் ஒன்றும் பெரிதல்ல

      அவர் மரணம் ஒரு வருத்தபடும் செயலாக இருந்தாலும் அதற்காக எம் உறவுகளின் ஆயிரமாயிரம் பெண்களின் தாலி அறுக்க சோனியா ஆசைப்பட்டதை இந்த முதியவர் தடுத்தாரா என்ன தாலி அறுக்க காரணமாக இருக்கின்ற காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கின்ற கருணாநி ஒரு இன துரோகியான் என்னை பொருத்தவரை

      கருணாநிதியின் தமிழ் பற்று

      தமிழனை மறந்து தன் குடும்பத்தை அறியனை ஏற்றிவதில் குறியாக கொண்டவர் இந்த கருணாநிதி என்பதை தமிழர்கள் அனைவரும் நன்கு அறிவார்கள் என்பது உணர்ந்துகொள்ளுங்கள் அண்ணா


      மிகப்பெரிய சாதனையாக இந்த தமிழினத்திற்காக செம்மொழி மாநாடு என்று ஏதோ ஒன்றை நடத்தி எதையோ பெற்றுவிட்டதைப்போல காட்டிக்கொள்ளும் உங்கள்
      மொழி காவலர் ஐந்து முறை ஆட்சி கட்டிலில் அமர்ந்து இருக்கிறார் அவரால் இந்த தமிழ்மொழி நகத்து அளவேனும் வளர்ச்சியடைந்தா அண்ணா எனக்கு அவசியம் என்பதை சுட்டிகாட்டவும்
      காரணம் தனியார் பள்ளியில் படிக்கின்ற எந்த ஒரு மாணவர்களுக்கும் தமிழில் எழுதுவதற்கு தடுமாற்றமாக இருக்கிறார்கள் தாய் தமிழை மறந்து இந்த லட்சனத்தில் கருணாநிதிக்கு மொழிக்காவலராம்

      செத்த எலிக்கு எதற்கு கூண்டு
      தமிழ் மொழி இறந்த காலத்திற்கு சுடுகாடு அருகே அமர்வதற்கு புதைகுழி வெட்டியவர் இந்த கருணாநிதி


      இந்த தமிழின தலைவரின் வாரிசுகள் சன் பிக்சர்ஸ் என்றும் ரெட்செயனட் என்று தனது படப்பிடிப்பு நிறுவனங்களுக்கு சீரும் சிறப்புமாக நடத்திக்கொண்டிருப்பதை உஙகளுக்கு சொன்னாரா இந்த மொழிக்காவலர்


      கருணநிதியின் இனப்பற்று

      ஆளை பணத்தால் மதியமக்கி எழுதுகோலில் பொய் பரப்பி பொய் பேச்சை வைத்தும் ஆட்சியை பிடித்து கோடி கோடியாய் திருடி சம்பாதித்து செல்வ செலிப்புடன் வாழுகின்ற நடிப்புகார கொலைஞரின் தமிழின பற்று சொல்லி தெரிய வேண்டியதில்லை தமிழர்களுக்கு அண்ணா


      கையேந்தி வந்தாரை கரமேந்தி காத்த இனத்தை

      தொடையோடு துண்டாகிப் போன கால்களோடு……… தோளோடு பிய்த்தெறியப்பட்ட கைகளோடு……… மரண வேதனையில் ஈழத்தில் இழந்த எம் உறவுகளை கொன்றுகுவித்திட மத்திய அரசு உதவியது என்பது உலகறிந்த உண்மை அனைவருக்கும் தெரியும் ஏன் இப்பவும் இன்னும் காங்கிரஸ் காலை நக்கி பிழைக்க வேண்டும் கேவலம் பதவிக்குதானே



      இன்று கால் வயிறு கஞ்சிக்கு வழியின்றி முள்வேளி முகாமில் கையேந்தி நிற்கிறது
      இதற்கு என்னதான் முடிவாய் இந்த கருணாநிதி செய்தார் சொல்லுங்கள் நீங்கள்

      தன்னை கடலிலே தூக்கிப்போட்டாலும் தமிழருக்காக கட்டுமரமாக மிதக்க வேண்டாம் உங்கள் கருணாநிதி
      இராசாய குண்டுகளையும் கொத்துகுண்டுகளையும் போட்டு மனித உயிர்களை கொத்துகொத்தாக கிட்டதட்ட 2 லட்சம் எம் உறவுகளை காவு வாங்க உதவிசெய்த காங்கிரஸ் நக்கி பிழைப்பதை தவிற்த்து கூட்டணியை விட்டு வெளிய வரச்சொல்லுங்கள்

      Delete
    3. ஈழத்திற்காக தன்னையே எரித்து எங்களுக்குள் அனையா நெருப்பை கொட்டிவிட்டு சென்ற முத்துக்குமாருக்காக அவனுக்காக சட்டமன்றத்திலேயோ ஒரு இறங்கள் தீரமானம் போடமுடிந்ததா இந்த தமிழின கருங்காளியால் சொல்லுங்கள்,,,,,,


      எம் இனம் கத்தி கதறி இன்னும் அழுதுகொண்டுள்ளபோது கொடூரத்தின் மொத்த உருவமாய் இருக்கிற சிங்கள அரசை வெட்கமின்றி ஆதரிக்கின்ற கருணாநிதி ஒரு ஈனப்பிறதான் என்பது அனைவருக்கும் தெரியும்

      தனி ஈழம் பெற்றால் தான் என் உயிர் பிரியும் என பொய் பேசிய கருணாநிதி தற்போது நடக்கவிருக்கும் டெசோ மாநாடு தனி ஈழத்தை பற்றி பேசினால் தன் மகள் கனிமொழி உள்ளே போய்விடுவார் என்பது கருணாநிதிக்கு தெரியும் பாவம் உங்களுக்கு தெரியாதுபோல்

      ஓட்டுக்கு பணம், ஆடு, மாடு, கோழி, டீவி, மிக்சி, கிரைண்டர், புடவை, ஜட்டி, ஜாக்கெட், இது எல்லாத்தையும் கொடுப்பதற்கு காலில் விழுந்து கெஞ்சிடும் பழக்கத்தை உருவாக்கிய பெருமைகள் கருணாநிதியைச்சேரும் என்பதை நீங்கள் மறக்க வேண்டாம் அண்ணா

      உலக சசாதனையாக ஸ்பெக்ரம் ஊழலில் தமிழனை உலகறியச்செய் தி,மு,க, கருணாநிதி சேரும் என்பது உங்களுக்கு தெரியுமா

      சட்டமன்ற தேர்தலின் போது திருச்சியில் ஆம்னி பஸ்ஸின் மேற்கூரையில் 5 கோடி ரூபாய் மூட்டை கட்டி போடப்பட்டிருப்பதை கண்டுபிடித்த தேர்தல் ஆணையம் அது கருணாநிதி ஓட்டுக்கு கொடுத்து அனுப்பிய பணம் என்பது உங்களுக்கு தெரியுமா


      தன் குடும்பத்திற்கு பதவிவேண்டும் என்பதற்காக டில்லியில் சோனியாவின் காலடியில் மண்டியிட்டுக்கிடக்கின்ற கருணாநிதி இன துரோகியா இல்லையா அண்ணா அதைப்பற்றி நீங்கள் ஒருவரிகூட சொல்லவில்லை காரணம் என்ன



      கடலில் மூழ்கினாலும்
      காக்கை அன்னமாகாது

      எம் இனத்தை கொன்றொழித்த வாழுகின்ற துரோகிகளை என்றைக்குமே மன்னிக்கப் போவதில்லை

      பகுத்தறிவை ஊர்க்குரைத்து
      பணத்தறிவை தனக்குவைத்து
      தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
      சோடனைகள் செய்து வைத்து
      நகத்து நுனி உண்மையின்றி
      நாள்முழுதும் வேடமிட்டு
      மடத்தில் உள்ள சாமிபோல்
      மாமாய‌ கதையுரைத்து
      கண்ணதாசன் கடந்த 30 வருடங்களுக்கு முன்பே சொல்லிவிட்டு இறந்துபோய்விட்டார் அவர் சொன்னது அத்தனையும் உண்மை கருணாநிதி தமிழின மன்னிக்கமுடியாத தமிழின துரோகி துரோகி துரோகி


      ஆதால் ஒரு வீரனை எவ்வாறு வாழ்த்த தெரியனுமோ அதைவிட
      ஒரு துரோகியை நூறு மடங்கு தூற்ற வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்

      நீங்கள் ஆயிரமாயிரம் காரணம் சொன்னாலும் நான் செத்து மண்ணணோடு மண்ணாகி போகும்வரை இந்த இனஒழிப்பு துரோகம் செய்த கருணாநிதியை விட மாட்டேன் அண்ணா

      வரலாறு எப்பொழுதும் நேர்கோட்டில் செல்வதில்லை என்பதை உணர்ந்து
      தேசம் கடந்து எம் தலைவர் வாழ்கிறார் என்ற பெருமையோடு நான்,

      Delete
  7. நல்ல பதிவு நண்பரே,

    ReplyDelete
  8. தம்பி எல்லாவற்றிக்கும் கலைஞர் மட்டும்தான் காரணம் என்ற உன் எண்ணம் சரிகிடையது இருந்தாலும் நமக்குள் சண்டை சச்சரவுகள் இருந்தாலும் ஒற்றுமை உடன் கேட்டால்தான் எதுவும் கிடைக்கும். கலைஞர் ராஜீவ் கொலை செய்யபட்ட்போது நடந்த தேர்தலில் கலைஞர் தான் கொலைக்கு காரணம் என்று பிரசாரம் செய்து அன்று கலைஞர் தவிர மற்ற தி.மு.க. வேட்பாளர்கள் தோற்றார்கள் என்ற வரலாறு தெரியுமா உனக்கு சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது விடுதலை புலி ஆதரவாளர் என்று சொல்லி ஆட்சியை பறிகொடுத்தார் அதெல்லாம் உனக்கு புரியாது ஏன் என்றால் நீ கலைஞர் அவர்களை திட்ட வேண்டும் என்ற எண்ணமே காரணம். ஸ்பெக்ட்ரம் என்பது சுப்ரீம் கோர்டில் வழக்கு நடந்துகொண்டிருகிறது அதன் தீர்ப்பு வந்த பிறகு தான் யார் குற்றவாளி என்பது தெரியும் தீர்ப்பு வருவதற்கு முன்பு ஒருவர் குற்றவாளி என்பதை குரமுடியது. தமிழுக்கு கலைஞர் எதுவும் செய்ய வில்லை என்றால் எப்படி 5 முறை முதல்வர் பதவியில் அமர்ந்தார் என்பதை கூறமுடியுமா? தேர்தலப்போ திருச்சி பிடிபட்ட பணம் கலைஞர் பணம் தான் என்று எப்படி கூறமுடியும் உங்கிட்ட கொடுத்துதான் பேருந்தில் ஏற்ற சொன்னார? இல்ல நீ துப்பறியும் நிபுணர? ஒரு உயிரை எடுபத்ற்கு யார் உரிமை கொடுத்தது படைத்வனுகே உரிமை இலாதபோது உனக்கு யார் அந்த உரிமையை கொடுத்த?. தமிழ் நாட்டை சேர்ந்த நீயே கலைஞர் அவர்களை ஆதரிக்காமல் சகோதர யுத்தம் செய்தால் என்ன ஆகும் என்பதை நீ புரிந்துகொள் கட்டபொம்மன் அழிவிற்கு ஒரு எட்டப்பன் காரணம் என்றால் விடுதலை புலிகளின் எதிரான தமிழ் அமைப்புகளும் கர்ணா என்ற எட்டப்பனும் தான் காரணம் நீ என்ன சொன்னாலும் என் போன்ற தமிழர்களுக்கு கலைஞர் தான் கடவுள். எபோளுதுமே ஒரு கை தட்டினால் ஓசை வாறது இரு கை சேர்ந்தால் தான் ஓசை வரும் அது போல் அனைவரும் சேர்த்து தமிழ் ஈழம் கிடைக்க பாடுபடுவோம் நீ கலைஞர் அவர்களை திட்டி பதிவு எழுதினால் மட்டும் தமிழ் ஈழம் கிடைத்து விடாது தமிழ் நாட்டில் உள்ள அணைத்து அரசியல் கட்சிகளை இணைத்து மத்திய அரசை வலியுறுத்துவோம் 1980 களில் தமிழீழ போராட்டம் நடைபெற்ற போது தமிழ் நாட்டில் எவ்வளவு ஆதரவு இருந்தது என்பது உனக்கு தெரியுமா? அதற்கு காரணம் தி.மு.க என்பது உனக்கு தெரியுமா? போன தடவை ஆட்சி இருந்தபோது கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் எத்தனை தடவை தீர்மானம் போட்டர் அவருக்கு எந்த நாய் அவது ஆதரவு கொடுத்துச்ச? நீ கலைஞர் அவர்களை திட்டி பதிவு எழுதுவதினால் ஈழத்திற்கு எந்த நன்மையையும் ஏற்படபோவதில்லை அதனால் தனி மனித தாக்குதலை விட்டு தமிழ் ஈழம் அமைவதற்கு தேவையான நல்ல ஆலோசனைகளை பதிவுகளாக எழுது அதுதான் நமக்கும் நல்லது தமிழ் ஈழத்துக்கும் நல்லது. எனக்கு பதில் எழுதுவதை விட்டு விட்டு ஈழம் அமைவதற்கான நல்ல வழிகளை ஆலோசனை பதிவுகளாக எழுது. வாழ்க கலைஞர் வளர்க தமிழ் அமையட்டும் தமிழ் ஈழம். வாழ்க வளமுடன்.......

    ReplyDelete
  9. அவரு தான் கடிதாம் எழுதினாருன்ன
    நீங்களுமா




    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)

    ReplyDelete
    Replies
    1. கடிதத்துக்கு கடிதம் தானே பதில் நண்பா

      Delete
  10. kalainar mattaumthan vaazhavar. vere yaraum vaazha vidanaattar.

    ReplyDelete
  11. அமைதியை நிலை நாட்ட அமைதிப்படை சென்றது அயல் நாட்டுக்கு ,ஆரவாரம் செய்து ஆவாரம் பூ தூவி புன்னகை புரிந்த மக்களுக்கு நிடிக்காத நி ட்டூரம் செய்தது அமைதிப்படை பூக்கள் சொரிந்த மக்களை கொன்று குவித்தது பாரத நாடு எங்கள் ஈழத்து பெண்களை கற்பழித்து புதைத்தார்கள் புனிதபூமிஎன்று பொய்யுரைக்கு பூச்சாண்டிகள்
    இது தான் ராஜீக்கந்தியின் அமைதிப்படையின் அட்டுழியங்கள்

    தமிழ் மக்களுக்கு தீர்வைத் தருகின்றோம் என்று அழைத்து வீட்டுக்காவலில் மிரட்டி எங்கள் புனிதைப்போரை மடக்க நினைத்தான் ரஜிக்காந்தி சோரம் போகாத பெரும் தலைவன் எதற்கும் அஞ்சாது நிக்கவே வியந்தான் அந்த பூச்சாண்டிப்பிரதமர் .பல்லாயிரம் மக்களையும் ,போராளிகளையும் வஞ்த்சித்துகொண்டவன் எப்படி எங்களுக்கு நல்ல தோர் தீர்வு தந்திருப்பன்

    பதிவிக்கு ஆசைப்படாத எங்கள் பெரும் தலைவன் மட்டுமே எங்கள் உண்மையான தலைவன்

    ராஜிக்கந்தியை கொள்ளும் பொது பல இளைஞர்கள் கொல்லபட்டார்கள் தான் ஒரு கேவலமானவை அழிக்கும் போது அதில் நல்லவைகள் இழக்க நேரிடும் அவை தவிக்க முடியாததது
    ராஜிக்காந்தியை கொன்றவர்கள் யார் என்பதை இன்று வரை கண்டுபுடிக்காத மத்திய அரசு

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..