Wednesday 22 February 2012

அனுக்கழிவும் அப்துல்கலாமும் பாகம் 2

அனுக்கழிவும் அப்துல்கலாமும் பாகம் 2


ஓட்டை வாளியில் நீரைச் சேமிப்பது"
எப்படி என்ற புதுவழிமுறையை அறிமுகப்படுத்தி அவ்வப்போது கூடங்குளம் திறக்க வேண்டுமென கொடிபிடித்து  ஆர்பாட்டம் செய்கின்ற இத்தருனத்தில்
 
அற நனைந்தவனுக்குக் குளிரென்ன
 கூதலென்ன என்ற கதையாய்

   கூடங்குளம் அணு உலையை கட்டி முடித்துவிட்டார்கள், தடுத்து நிறுத்தமுடியாது என்று கைகட்டி நிற்காமல் இப்போது முனைந்தாலும் கூடங்குளம் அணு உலையை இயங்காமல் நிறுத்த முடியும் என்ற எனது நம்பிக்கை வீன் போகாது என  தைரியத்தில்  திரு, கலாம் அவர்கள் மின்னஞ்சல் முவரிக்கு அனுப்பினேன் பல கேள்விகள் இன்றுவரை எவ்வித பதிலையும் காணவில்லை

அத்தொகுப்பிலிருந்து சில இங்கே

      அனு உலைக்கு எதிரானவர்கள் அறிவியல் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என நீங்கள் சொன்ன கருத்திற்கு நான் எதிரானவன் என்றாலும்
 
உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
என்பதால்

     இந்தியாவில் அதிலும் உயர்ந்த இடத்தில் இருந்த இந்தியாவின் மூத்த குடிமகன் என்ற முறையில் நீங்கள் எனக்கு பதில் கண்டிப்பாக சொல்வீர்கள் என்ற நம்பிக்கையில்,,,
 
  நடுவர்மன்றத் தீர்ப்புக்குப் பிறகும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் ஒரு சொட்டுத் தண்ணீரும் காவிரியில் தர முடியது என்று அடாவடி செய்யும் கன்னடத்தானுக்கு எதிராகவோ 

      உச்சநீதிமன்றம் மீண்டும் மீண்டும் தீர்ப்புரைத்த பிறகும் அதைக் காலில் போட்டு மிதித்து முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவது என்ற முயற்சியில் இறங்கியிருக்கிற மலையாள அரசுக்கு எதிராகவோ

      ஓரத்தில் கசிந்து வருகின்ற பாலாற்றைக் கூட வழிமறித்து தடுப்பணை கட்டும் ஆந்திராவிற்கு எதிராக நீங்கள் எப்போதாவது எத்தனை முறை தனது திருவாயை திறந்துள்ளீர்கள் என உங்கள் மனச்சாட்சியை தொட்டு சொல்லியிருந்தால்  நிச்சயம் துளி அளவாவது உங்கள்மீது எனக்கு அன்பும் பாசமும் இருந்திருக்கும்.

   போர் வெற்றி எனும் போதையில் ஆடுகின்ற இலங்கை அரசுக்கு தன் கோவணத்தைக்கூட உருகிக்கொடுக்கும் இந்தியா இலங்கைக்கு சென்று கொலைகாரனுடன் விருந்து சாப்பிட்ட நீங்கள் இங்கிருந்து சிலவருடங்களித்து மின்சாரம் கொடுக்கமாட்டோம் என்பதற்கு ஏதேனும்  உத்திரவாதம் அளிக்க முன் வருவீர்களா? இந்தியாவின் மூத்த குடிமகன் திரு, கலாம் அவர்களே  சொல்லுங்கள் பார்ப்போம்
 
என்னசெய்வது
ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம்
இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.



கூடங்குளத்தில் இதுவரை 90 நபருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது அதில் எத்தனை பேர் தமிழர்கள் என்பதை உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா?

விபத்தே ஏற்படாது 100 சதவிகிதம் பாதுகாப்பானது  தரமானது உயர்தரமானது என ஆணு,,,, விற்பதை போல் திரும்ம திரும்ம சொல்லும்  நீங்கள்   விபத்து ஏற்பட்டால்
    முதல் மணியோசை கேட்டால்  பாதுகாப்பான உறைவிடத்திற்கு செல்ல வேண்டும்  எனவும்

    இரண்டாவது மணியோசை கேட்டால் அயோடின் மாத்திரை சாப்பிட வேண்டும் எனவும்  சொல்வது ஏன்?

     அடுத்து வாயில் வெள்ளை துணி அணிந்துகொண்டு ஊருக்கு வெளியே செல்ல வேண்டும் என ஒத்திகை நிகழ்வு நடத்தி காட்டியது ஏன்? இதை நாங்கள் எப்படி எடுத்துக்கொள்வது இதற்கு என்ன பதில் சொல்ல போகிரீர்கள்

   கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள விவிஇஆர் 1000 அணு உலையின் மையப் பகுதியில் தடித்த எஃகால் ஆன பெட்டகம் உள்ளது. மிகையான நியூட்ரான் மோதுதல் நடக்கும்போதும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சாதாரணமாக அன்றாடம் நடக்கிற நியூட்ரான் மோதலின்போதும் அந்த அணு உலைச் சுவர் மச்சுப்போய்  ஓட்டை விழுவதற்கான வாய்ப்பு  அதிகமாக உண்டு எனவும் அதுபோல் மெத்வதேவிடம் அளிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் குளிர்விக்கும் தண்ணீர் கருப்பகுதியைத் தாக்கி ஓட்டை போட்டு கதிர்வீச்சை வெளிப் படுத்தக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது   என்பது உண்மையா பொய்யா?


* கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்துவிட்டால் கொக்கைப் பிடித்துவிடலாம்
என்ற புதிய அத்தியாத்துடன் நிலநடுக்கம் ஏற்படாது என கூவி கூவி சொல்லும் திரு கலாம் அவர்களே
 
          கூடங்குளம் பகுதியில் 2003ல் இலேசான நிலநடுக்கம் பதிவாகியிருப்பதையும் 2006 மார்ச் 10 ஆம்நாள் கூடங்குளம் அருகிலுள்ள அஞ்சுகிராமம், அழகப்பபுரம், சாமித்தோப்பு ஆகியவற்றில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டு வீடுகளின் சுவர்களில் பிளவுகள் ஏற்பட்டதை இந்திய அரசின் ஆய்வுக் குறிப்புகளும் தமிழக அரசின் வருவாய்த் துறைக் குறிப்புகளும் பதிவு செய்துள்ளது உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?
 
    தற்போது 2011 ஆகஸ்ட்டில் தமிழ்நாட்டின் 7மாவட்டங்களில் நிலஅதிர்வு ஏற்பட்டதைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதற்கு முன்பு 1996லும் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதை இந்த பதிவின்மூலம் தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்
 
  கைகாவில், நரோராவில், தாராப்புரில், கல்பாக்கத்தில் அனைத்து இடங்களிலுமே தொழில் நுட்பக் கோளாறு காரணமாகவோ ஊழியர்களின் கவனக்குறைவின் காரணமாகவோ அடிக்கடி நிகழ்வுகள் ஏற்பட்டு கதிர்வீச்சு அதிக அளவில் வெளிப்பட்டுள்ளது என்றும் கதிர்வீச்சுக்கு உள்ளான கடினநீர் வெளியேறி சுற்றுச் சூழலில் கலந்துள்ளது என்றும் இந்திய அரசின் அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் முனைவர்ஏ. கோபாலகிருஷ்ணன் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்
 
     இதுவரை அணுசக்தி ஆணையத்திடமிருந்தோ ஆட்சியாளர்களிடமிருந்தோ  பகலில் மட்டுமே கணவுகானச்சொன்ன உங்களைப்போன்ற அனுவிஞ்ஞானிகளோ யாராவது உருப்படியாக எதாவது அவர்களுக்கு பதில் அளித்தது உண்டா?  இதுவரை

     அணு உலையின் ஆயுள்காலம் முடிந்தபின் அதிலிருந்து வருகிற கதிரியக்க கழிவுகளை மிகத் தடிப்பான சுவருள்ள ஈயப் பெட்டகங்களில் அடைத்து 3000 அடிக்குக் கீழே குறைந்தது 25000 ஆண்டுகள் பாதுகாப்பாக வைக்க வேண்டும். இவ்வளவு நீண்ட காலத் திற்கு எந்தக் கண்காணிப்புக்கும் உத்தரவாதம் அளித்திட மத்திய மாநில அரசிடமிருந்து எழுத்து பூர்வமாக விரிவான வெள்ளை அறிக்கை அளித்திட உங்களால் முடியுமா?
* சாமியே சைக்கிள்ல போகும்போது பூசாரி
கேட்டானாம் புல்லட் என்ற கதையாய்

 
       காவிரி நீரை தரமறுக்கின்ற கர்நாடக அரசுக்கு நாள்தோறும்
11 கோடி யூனிட் மின்சாரம் தமிழ்நாட்டிலிருந்து கொடுத்து வருகின்றோம்

     இங்கு வாழும் எங்கள்  தமிழக அரசியல்வாதிகளிடமும் பாமர தமிழ்சாதியினரிடமும் ஒற்றுமை இல்லாததினால் விரைவில் உடைபட போகும் முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத் துடிக்கும் கேரளத்திற்கு நாள் தோறும்
9 கோடி யூனிட் மின்சாரம்

    பாலாற்றை மறிக்கும் ஆந்திராவிற்கு  நாள்தோறும் 6 கோடி யூனிட்
 இப்படி தமிழனுக்கு எதிராக இருக்கின்ற மற்ற மாநிலங்களுக்கு
மீண்டும் கூடங்குளம் மின்சாரத்தை கொடுக்கமாட்டீர்கள் என உறுதி அளித்திட உங்களால் முடியுமா?

      கடலலை மின்சாரம், காற்றாலை மின்சாரம், கழிவிலிருந்து மின்சாரம், கதிரொளி மின்சாரம் இதன்மீது  இந்தியஅரசும் தமிழகஅரசும் கவனம் செலுத்தாமல் அழிவை ஏற்படுத்தும் அணு உலையை ஏன் அமைக்க வேண்டும்
  
       மக்களை விட கூடங்குளம் ராஜீவ் ஒப்பந்தமென்பதால்  மனித உயிர், எலிகளை விட அதிலும் தமிழன் உயிர் மிகவும்  மலிவானது என நினைத்தார்களோ என்னவோ ப,சிதம்பரமும் ஈ,வே,கே, எஸ் மற்றும் பல அரசியல்வாதிகள் அனைவரும் கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என போராட்டத்தை மிகவும் கொச்சைபடுத்துகின்ற பல அயோக்கிய அரசியல் வாதிகளே


 வெளிநாட்டில் பதுக்கியுள்ள கருப்பு பணம் எவ்வளது தெரியுமா? அதைபற்றி வாய் திறப்பாரா சிதம்பரம் அதைப்பற்றி நீங்களாவது எதாவது இதுநாள்வரையில் சொல்லியது உண்டா?

     ஜப்பான் சுனாமி மற்றும் அணு உலை விபத்தால் பாதிக்கப்பட்டபோது அந்நாட்டு பிரதமர் மக்களிடம் சென்று ‘நான் உங்களுடன் இருக்கிறேன்’ என்று பெருமையாக சொல்லி கூடவே இருந்து உதவிகள் பல செய்தார் ஆனால், இங்கு இந்தியாவில் போபால் விபத்து ஏற் பட்டபோது அப்போதைய முதல்வர் டெல்லி போய் பயந்து படுத்துக்கொண்டார் என்பது எங்கள் தமிழ்சாதிக்கு எத்தனைபேருக்குத்தெரியும்

    கூடங்குளம் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் பொதுநலன் வழக்குத் தொடுத்துள்ள முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன், முன்னாள் கப்பற் படைத் தலைவர் எல்.ராமதாஸ்,முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி, பிரதமரின் முன்னாள் செயலர் கே.ஆர்.வேணுகோபால்,அணு விஞ்ஞானி பி.எம்.பார்கவா  அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஏ.கோபாலகிருஷ்ணன்  வை,கோ சீமான் போன்றவர்கள் தேசத் துரோகியா? வெளிநாட்டில் பணம் வாங்கிக்கொண்டா கூடங்குளத்திற்கு எதிராக போராடுகிறார்கள் சொல்லுங்கள் ராஜிவ்  அனுமானிகளே?
 
  இத்தாலியில்  ஜூன் மாதம் 11 ஆம் தேதி  நடைபெற்ற ஒரு பொது வாக்கெடுப்பில் அணு உலைகள் அமைக்கக் கூடாது என்று தொண்ணூறு சதவிகித மக்கள் வாக்களித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கிறார்கள்.
அப்படியானால் அவர்களெல்லாம் முட்டாளா?
   அப்படி வாக்கெடுப்பு என்ற வாய்ப்பை எங்களுக்கு வழங்கிட முயற்சி செய்வீர்களா திரு, கலாம் அவர்களே

     ஆறுகோடி ரூபாயில் பாலம் கட்டுவதற்கு  அரசு டென்டர்  என்றால்  வெறும் 6 மூட்டை சிமெண்ட்டை வைத்தே  பாலம் கட்டும் நம் திறமைமிக்க  ஊழல்மிகுந்த நம் பாரத தேசத்தில்  அதுவும் நம் தமிழகத்தில் அனுக்கழிவுகளை ஏறக்குறைய 10,000  ஆண்டுகள் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்.  அதற்கு ஏதேனும் உத்திரவாதம் அளிக்க முடியுமா?
நக்கிற நாய்க்குச் செக்கென்ன
 சிவலிங்கமென்ன? என மக்களை வழிநடத்துகின்ற மத்திய மந்திரி செய்த ஊழலினால் காமன்வெல்த்து போட்டியின்போது கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது இப்படி ஊழலில் திறமை மிக்க உள்ளவர்களை நம்பி எப்படி அனுக்கழிவை பாதுகாப்பது   சொல்லுங்கள் நீங்கள்
* சொல்லிக் கொடுத்த புத்தியும்
கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்? பார்ப்போம்
  
         ஒரு டீ ஸ்பூன் புளுட்டோனியம் 300 கோடிபேருக்கு புற்றுநேயை உருவாக்க வள்ளது அப்படி என்றால் வருடத்திற்கு 1000 கிலோ புளுட்டோனியத்தால் என்னவெல்லாம் நடக்கும் நீங்களே கற்பனை செய்து பாருங்கள் திரு, கலாம் அவர்களே
 
      ஐ,நா, உறுப்பு நாடுகள்192 நாடுகள் மட்டுமே அனு உலை வைத்திருக்கும் நிலையில் வளர்ச்சியடைந்த ஜெர்மனி போன்ற நாடுகள் அனு உலை உருவாக்கத்தை முற்றிலுமாக தடுத்திருக்கும் நிலையில் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் அமைப்பதற்கு காரணம் என்ன?

        ஆந்திரா மாநிலம் நாகார்சுனாசாகர் மற்றும் கேரளா மாநிலம் பூதான்கெட்டு பகுதியில் நிறுவப்பட உத்தேசித்திருந்த இந்த கூடங்குள அனு உலை அந்த மாநிலத்தில் இருக்கும் ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பால் இடமாறி கூடங்குளத்தில் அமைக்கிறார்கள் அப்படி என்றால்
இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்
அந்த கதையாய்
    தமிழன் என்றால் கேனக்கிருக்கனா? அல்லது ஈனப்பிறவி இழிச்சவாயன் என்பதாலா?
      2011 சூலை மாதம் ரஸ்யா பிரதமர் மெத்தவதே ரஸ்யா சுற்றுச்சுழல் அறிவியல் அறிஞர்கள் ஆய்வு செய்து தந்த அறிக்கையில் தற்போது கூடங்குளத்தில் நிறுவப்படும் விவி,இ,ஆர் 1000 அனு உலையில் 31 குறைபாடுகள் உள்ளதை சுட்டிகாட்டியுள்ளார்கள் அதைப்பற்றி  உங்களால் விளக்கமாக தமிழக மக்களுக்கு சொல்ல முடியுமா

     கூடங்குளத்தில் மிகப்பெரிய கொதிகளன்களின்மூலம் கடலில் 1300 டிகிரி பாரன்கீட்டுக்குமேல் வெப்பத்துடன் கடலில் கலப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பு ஏற்படுமா ஏற்படாதா?

      இதுபோல், கல்பாக்கத்தில் பாதுகாப்பு, ஒத்திகை  நடைபெற்றபோது அங்கிருந்த இரண்டு பஸ் இயங்கவில்லை. அதோடு வாக்கி டாக்கியும் செயல்படவில்லை. கல்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை அணு மின் நிலையத்தில் 16 கி.மி சுற்றளவில் சுமார் 70 கிராமங்கள் உள்ளன. சுற்றுவட்டார ஜனத்தொகை சுமார் 1 லட்சமாகும். அணு உலை விபத்து நேர்ந்தால் இவ்வளவு மக்களையும் பாதுகாப்பான பகுதிக்கு இடப்பெயர்வு செய்ய சரியான சாலை வசதியோ வாகன வசதியோ இதுவரை ஏற்பாடு செய்யப்படவில்லை. என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா
    மருத்துவ அவசர தயாரிப்பு நிலை மிகவும் மோசமாக உள்ளதும். கல்பாக்கத்தைச் சுற்றி 16 கி.மி. தொலைவில் மூன்று ஆரம்ப சுகாதார மையங்களே உள்ளதும் இவற்றில் மருத்துவர்களும் செலிவியர்களும்  பாதிபேர் இல்லையென இங்கு இருக்கின்ற அறவேக்காடு யுவராஜ் போன்றவர்களுக்கு தெரியுமா தெரியாதா
    கல்பாக்கத்தில்அணுக்கதிரினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு முதலுதவி செய்வதற்கான போதிய பயிற்சி ஒருவருக்காவது இருக்கிறதா  மருந்துகள் போதிய அளவு  உள்ளதா பாமர தமிழ்சாதியின் மேல் அக்கறை இல்லாத அம்மா ஜெ நீண்ட நாள் நலமுடன் வாழ தீச்சட்டி ஏந்திடும் நம் பெருமைமிக்க ஆளும் கட்சி மந்திரி எம், எல்,யேவுக்கு தெரியும் சொல்லுங்கள் பார்ப்போம்

     இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தொடர்பாக அம்பலப்பட்ட ஊழலை  வெளியிட்ட போது  உங்கள்மீதும் பலகோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக பலபேருக்கு சந்தேகம் வந்துள்ளது உங்களுக்கு தெரியுமா கலாம் அவர்களே

    அணு உலைகளோடு வாழ்வது என்பது மடியில் அணுகுண்டைக் கட்டிக்கொண்டு இருப்பதற்கு நிகரானது என்று

    அணுசக்தி துறையின் முன்னாள் தலைவர் திரு கோபாலகிருஷ்ணன் நம் நாட்டில் உள்ள அணுசக்தி உலைகளில் பலவிதமான பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக 1995-ம் ஆண்டு ஓர் அறிக்கையில் கூறினார். இதனை அடிப்படையாகக் கொண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. தெரியுமா தெரியாதா

     1966–ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த அணுசக்தி சட்டம் (Atomic Energy Act, 1962) அணுஉலை காரணமாக உண்டாகும் சுற்றுச்சுழல் பாதிப்பு, அதனை தடுக்கும் முகாந்திரம், இழப்பீடு என எதைப்பற்றியும் பேசவில்லை. ஆனால் அணுசக்தி தொடர்பான அனைத்தும் இரகசியமானது என்றும் இச்சட்டத்தை மீறுவோர் மீது தண்டிக்க வகை செய்யும் கடும் தண்டனைப் பிரிவுகளை கொண்டுள்ளது இச்சட்டம்.

    கடந்த 2004-ம் ஆண்டு கல்பாக்கம் அணு உலையை சுனாமி தாக்கியபோது அணு உலை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே உடனடியாக அணு உலை அருகாமையில் இருந்து வெளியேற்றப்பட்டனரே தவிர சுற்றுபுறப் பகுதியில் வாழும் பொதுமக்களைப் பற்றி யாரும் கவலை கொள்ளவில்லை.  என்பது எத்தனைபேருக்குத்தெரியும்



(i) கல்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை அணு மின் நிலையத்தில் 16 கி.மி சுற்றளவில் சுமார் 70 கிராமங்கள் உள்ளன. சுற்றுவட்டார ஜனத்தொகை சுமார் 1 லட்சமாகும். அணு உலை விபத்து நேர்ந்தால் இவ்வளவு மக்களையும் பாதுகாப்பான பகுதிக்கு இடப்பெயர்வு செய்ய சரியான சாலை வசதியோ வாகன வசதியோ இதுவரை ஏற்பாடு செய்யப்படவில்லை.


    அடுத்து மருத்துவ அவசர தயாரிப்பு நிலை மிகவும் மோசமாக உள்ளது. கல்பாக்கத்தைச் சுற்றி 16 கி.மி. தொலைவில் மூன்று ஆரம்ப சுகாதார மையங்களே உள்ளன. இவற்றில் சொற்ப எண்ணிக்கையில் மருத்துவர்களும் செலிவியர்களும் உள்ளனர். இவர்களுக்கு அணுக்கதிரினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு முதலுதவி செய்வதற்கான போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை. மேலும் முதலுதவிக்கான மருந்துகள் போதிய அளவு இங்கு உள்ளதா என்பதும் மிகப் பெரிய கேள்வியே. அணுக்கதிர் பாதிப்புகளை கண்டறியக் கூடிய கருவிகளும் இங்கு இல்லை.

   இந்த 2012 ஆம் ஆண்டு தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கும் மின் உற்பத்தி நிலையங்களின் விவரங்களை பாருங்கள்.

எண்

திட்டம்

மின் உற்பத்தி அளவு

தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம்

பொருள் செலவு

(ரூபாய்)

மின் உற்பத்தி தொடக்க காலம்

1 வட சென்னை படி – 2 2 * 600 = 1200 MW 1200 MW 4650 கோடிகள் முதலாவது சனவரி 2012
இரண்டாவது பிப்ரவரி 2012
2 மேட்டூர் படி – 3 600 MW 600 MW 3106 கோடிகள் மார்ச் 2012
3 த.நா.மி.வா. – NTPC – வல்லூர் 3 * 500 = 1500 MW 1041 MW 8444 கோடிகள் முதலாவது டிசம்பர் 2011
இரண்டாவது மார்ச் 2012
மூன்றாவது அக்டோபர் 2012
4 த.நா.மி.வா. – NLC – தூத்துக்குடி 2 * 500 = 1000 MW 387 MW 4910 கோடிகள் நவம்பர் 2012
5 ஏழு சிறு நீர்மின் திட்டங்கள் 90 MW 90 MW 1556 கோடிகள் டிசம்பர் 2011 -
மார்ச் 2012
6 கூடங்குளம் அணுமின் நிலையம் 2 * 1000 = 2000 MW 925 MW நடுவண் அரசு மார்ச் 2012
7 கல்பாக்கம் விரிவாக்கம் 2 *250 = 500 MW 167 MW நடுவண் அரசு மார்ச் 2012
8 நெய்வேலி இரண்டாம் படி விரிவாக்கம் 2 *250 = 500 MW 230 MW நடுவண் அரசு முதலாவது ஆகஸ்டு 2011
இரண்டாவது சனவரி 2012

மொத்தம் 7390 MW 4640 MW

இந்த அட்டவணையின் படி 2012 ஆம் ஆண்டு முடிவிற்குள் தமிழகத்திற்கு 4640 மெகாவாட் மின்சாரம் புதிதாக கிடைக்கத் தொடங்கிவிடும். இதற்கும் மேலாக இந்த 2012 ஆம் ஆண்டு கீழ்கண்ட திட்டங்களைத் தொடங்க அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.

எண்

திட்டம்

தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம்

பொருள் செலவு

திட்டப் பணி தொடக்க காலம்

மின் உற்பத்தி தொடக்க காலம்

1 வட சென்னை படி – 2 800 MW 4800 கோடிகள் 2012 2015
2 வட சென்னை படி – 4 1600 MW 9600 கோடிகள் 2012 2016
3 உடன்குடி 1600 MW 9600 கோடிகள் 2012 2016
4 எண்ணூர் விரிவாக்கம் 600 MW 3600 கோடிகள் 2012 2015
5 குண்டா (Kundah Pumped Storage) 500 MW 1200 கோடிகள் 2012 2016

மொத்தம் 5100 MW 28800 கோடிகள்

இவையும் தவிர்த்து கீழ்கண்ட புதிய மின் உற்பத்தி திட்டப்பணிகளுக்கு அரசு அதிகாரிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

எண்

திட்டம்

தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம்

பொருள் செலவு

திட்டப் பணி தொடக்க காலம்

மின் உற்பத்தி தொடக்க காலம்

1 உடன்குடி – விரிவாக்கம் 800 MW 4800 கோடிகள் 2013 2016
2 உப்பூர் அனல் மின் நிலையம் 1600 MW 9600 கோடிகள் 2013 2016
3 எண்ணூர் – மாற்று திட்டம் 600 MW 3600 கோடிகள் 2012 2016
4 தூத்துக்குடி – படி 4 800 MW 4800 கோடிகள் 2012 2016

மொத்தம் 3800 MW 22800 கோடிகள்

இதுவும் போதாது என்று காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் 4000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை 18000 கோடி ரூபாய் செலவில் அமைத்திட தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சிறப்பு அமைப்பு ஒன்றைத் தொடங்கி இருக்கிறார்கள் (M/s. Coastal Tamil Nadu Power Limited). இத்திட்டத்திற்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் கருத்துக்கேட்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
காற்றாலை மின் உற்பத்தியிலும் தனியார் உதவியுடன் காற்றாலை மின்சாரத்தை மேலும் 10000  மெகாவாட் அதிகப்படுத்த  வாய்ப்பிருப்பதாக மின்சாரவாரிய அறிக்கை தெரிவிக்கிறது.


மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் திட்டங்களினால் வரும் சில ஆண்டுகளில் தமிழகத்திற்குக் கிடைக்க இருக்கின்ற மின்சாரம் 27540 மெகாவாட்.  இதில் கூடங்குளத்தில் இருந்து கிடைக்க இருப்பதென்னவோ 925 மெகாவாட் மட்டுமே


இன்னும் பல விவாதங்களுடன் பல விமர்சனங்களுடன்
பதவு போட இருக்கும் உங்கள் அன்பு
சிகா,லெனின் 90747357920
 

Tuesday 21 February 2012

அனுக்கழிவும் அப்துல்கலாமும் பாகம் 1

 அனுக்கழிவும் அப்துல்கலாமும் 1

ஏதோ அனுஉலை என்றால் சோத்துபானை என நினைத்தார்களோ என்னவோ எங்குபார்த்தாலும் கூடங்குளம் திறந்தால் நமக்கு வெளிச்சம் கிடைக்கும் என எங்கும் பேச கண்டதாலே இந்த பதிவு

சிலப்பதிகார வரிகள், ஒரு மலையையே கடல்
விழுங்கியிருப்பதைக் கூறுவது நாம் அறிந்ததுதானே?

சோழர் தலைநகரமாக ஒரு காலத்தில் விளங்கிய
பூம்புகார் கடலுக்குள் மூழ்கி முகவரி  தெரியுமா விஞ்ஞானிகளே?

மாமல்லபுரம் மூழ்கிக் கிடப்பதை இன்னும் நாம் தினசரி கண்டுகொண்டேதான் இருக்கின்றோம் என்பதை மறந்துவிடவேண்டாம்

கேரளத்திலே வஞ்சி மாநகரம் கடலில்
மூழ்கிப்  போனதை தெரிந்துகொள்ளுங்கள்?

1970களில் தனுசுகோடி கடலால் மூழ்கிப் போனதை
மறந்துவிட்டோமா?

               அனுவிஞ்ஞானிகள் என்று சொல்லிக்கொண்டு  ஸ்ரீஹரிகோட்டாவில் சூடம் கொளுத்தி ஏவுகணை பத்தவைக்கும் நம் பெருமைமிக்க கோமாளிகளுக்கு நிறைந்து வாழ்கின்ற புன்னிய பூமியில்

             சேதுகால்வாய் திட்டத்தை முடக்கும்போதும் ஈழத்தில் 2 லட்சம் தமிழ் உறவுகள் கொன்றொழிக்கும்போது தனது மாமியா வீட்டில் மல்லாக்க படுத்திருந்தாரோ என்னவோ அப்போது வாய் திறக்க வில்லை, இப்போது அப்துல் கலாம் கூடங்குளம் மின் நிலையத்துக்குள் இரவு 1.30க்கு நுழைந்து அதிகாலை 4 க்குள் ஆய்வு நடத்தி விட்டு, ‘கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது’ என்று 40 பக்க அறிக்கையை (வருவதற்கு முன்பே எழுதி வைத்து கொண்டுவந்ததை) கூடிய தகவலை எப்படி எழுதினீர்கள் என்பதை பார்க்கும்போது உண்மை புரிந்து விட்டது காங்கிரஸ் கட்சியின் கை கூலியென.

                 கூடங்குளம் பகுதி நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் பாதிக்கப்படாது என்று திருவாய் மலர்ந்த கலாம் அவர்களே , 2004இல் தமிழக அரசு புள்ளிவிவரப்படி நாகப்பட்டினத்தை  சுனாமி கோரவத்தால்  கன்னியாகுமரி  தாக்கிய சுனாமியால் மாண்டவர்களின் எண்ணிக்கை 808.  என்பது தெரியுமா?

            கூடங்குளம் மின் நிலயம் (சுமார் 42 அடி) உயரத்தில் இருப்பதால்,
சுனாமி போன்ற தாக்குதலால் சேதம் அடையாது என்று கூறும் கலாம் அவர்களே , சுனாமியின்போது குமரிமுனையில் திருவள்ளுவர் சிலையின் உயரத்துக்கு133 அடிக்கு  13.5 மீட்டர்  சுனாமி அலைகள் அலைகள் வீசியது   என்பதை தெரிந்துகொள்ளுங்கள் கலாம் அவர்களே.  நீங்கள் 133ஐ விட 42 பெரிது என்பது கண்டுபிடித்தமைக்கு விஞ்ஞானி என பட்டம் கொடுத்தது சரியே?

             அணு உலை விபத்துக்கள் உலகம் முழுவதும்  இதுவரை ஆறே ஆறுதான் எனவும், இந்தியாவில் இதுவரை ஒன்றுகூட நடைபெறவில்லை என சொல்லும் கலாம் அவர்களே 1947இலிருந்து 2008 வரை உலகெங்கிலும் 76 விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 56 விபத்துகள் 1986இல் செர்நோபில் விபத்துக்குப் பிறகு நடந்தவை அனுவிஞ்ஞானியான உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிள்ளை காரணம் காங்கிரஸ் உங்கள் வாய்யை அடைத்ததினால் என்பது இந்த கேனக்கிருக்கனுக்குத் தெரியும்

     அது சரி நீங்கள் மட்டும் ஒரே இரவில் அதுவும் 1 மணக்கு உள்ளே சென்று விடியற்காலை 4 மணிக்குள் வெளியேவந்து  75 நாட்களுக்குமேல் உண்ணாவிரம் இருப்பவர்களை சந்துத்து விளக்கம் தராமல் செய்தி நிறுவனங்களுக்கு மட்டும் விளக்கம் அளித்தீர்கள் ஆனால் மறுநாள் தமிழக அரசுமூலம் நியமித்த அனு விஞ்ஞானிகள் ஒரே நாளில் ஆய்வு செய்திட முடியாது எனவும் குறைந்தது 7 நாட்கள் ஆகும் என அறிக்கை விட்டனர் அனு விஞ்ஞானிகள் அப்படியெனில் நீங்கள் அறிவாளியா அல்லது யார் முட்டாள் என்பதை தமிழக மக்களுக்கு சொல்லுங்கள் பார்ப்போம்


             கூடங்குள தரகர் திரு கலாம் அவர்களே 4, மே 1987இல் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உலைத்தண்டு சிதைந்து 2 ஆண்டுகள் மூடல். செலவு 300 மில்லியன் டாலர். 10, செப். 1989தாராப்பூர் அயோடின் கசிவு  கதிர்வீச்சு 700 மடங்கு. செலவு 78 மில்லியன் டாலர்.  3, பிப். 1995 கோட்டா ராஜஸ்தான்  ஹீலியம்/கனநீர் கசிவு 2 ஆண்டு மூடல். செலவு 280 மில்லியன் டாலர். 22, அக். 2002  கல்பாக்கம்100 கிலோ சோடியம் (கதிர் வீச்சு) கசிவு. செலவு 30 மில்லியன் டாலர். (பொன்.ஏழுமலை, தினமணி, 24 நவ.) இவை இந்தியாவில் நடந்த சில விபத்துகள். இவற்றில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர்; இறந்தவர்கள் பலர். உண்டு என்பதை இந்த கேனக்கிருக்கன் சொல்லும் அளவிற்கு சிறந்த விஞ்ஞானி என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்

           செர்னோபில் விபத்தில் இறந்தவர்கள் வெறும் 57பேர் மட்டும்தான் எனப் புளுகுகிறார் கலாம். அவர்களே
 புற்றுநோய் வந்து 70,000 பேர் உயிரிழந்ததாகவும், இன்றும் பல்லாயிரம் பேர் அதன் பாதிப்பினால் புற்றுநோய்க்கு ஆளாகியிருப்பதாகவும் அமெரிக்காவின் நியுயார்க் அகாடமி ஆஃப் சயின்ஸ் கூறுகிறது.  என்பதை மறந்து விடவேண்டாம்

            ஃபுகுஷிமா விபத்துக்குப் பின் ரசியாவில் அணுஉலைகளைச் சோதித்த அந்நாட்டு விஞ்ஞானிகள், “நிலநடுக்கம், தீ,  வெள்ளத்தை எதிர்கொள்ளும் திறன்  உலைகளுக்கு இல்லவே இல்லை” என்று அந்நாட்டு அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர் அப்படி இருக்க
. கலாமோ கூடங்குளம் உலை 100 சதவீதம் பாதுகாப்பானது என கூறும்போது நீங்கள் மத்திய அரசிடம் 100 கோடி  வாங்கி சுருட்டி விட்டீர்களோ என பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா தெரியாதா


              அனுஉலையில் விபத்தே இல்லையென கூறும் கலாம் அவர்களே
விபத்து ஏற்பட்டல் எப்படி தப்பிப்பது என ஒத்திகை நிகழ்வு நடத்தி மிகுந்த சத்தத்துடன் ஊரே காலி செய்து ஓடும் அளவிற்கு பொதுமக்களை வாயில் வெள்ளை துணி கட்டிக்கொண்டு ஓட ஒத்திகை நிகழ்ச்சி நடத்தியது ஏன்?

விபத்து நடக்கவில்லை என்றால் விபத்து காப்பீடு திட்டம் அறிவித்தது ஏன்


             ஊழலில் உறைவிடமாக திகழும் நம் இந்தியாவில் கூடங்குளம் அனுஉலையில் கடந்த ஜூலை 14 அன்று கூடங்குளத்தில் . லெனின்கிராட் உலையில் ஐந்தடி கனமுள்ள கவசச் சுவர்களைக் கட்டும்போது கான்கிரீட் ஊற்றுகையில் இரும்புக் கம்பிச் சட்டங்கள் சிதைந்து நொறுங்கின. சுமார் 1200 டன் இரும்புக் கம்பிச் சட்டங்களையும் இப்போது அகற்றிவிட்டு புதிதாகக் கட்டவேண்டும்.ஊழலில்தான் இப்படி நடத்தது என்பது நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும்

           வளர்ந்த ஜெர்ம‌னி,சுவிட்ச‌ர்லாந்து, ஜ‌ப்பான் உள்ளிட்ட‌ ப‌ல‌ நாடுக‌ள் த‌த்த‌ம‌து அணு உலைக‌ளுக்கு மூடுவிழா நட‌த்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தியா ம‌ட்டும் அணு உலைக‌ளை தொட‌ங்குவ‌து ஏன்

          மகேந்திரகிரியில் உள்ள அணு திரவ திட்டம், நாங்குநேரியில் ஐ.என்.எஸ். நெல்லை கட்டபொம்மன் போன்ற கதிர் இயக்க அமைப்பு, கடந்த 10 ஆண்டுகள் வரை இந்த வட்டாரத்தில் உணரப்பட்ட நில அதிர்வுகள், பாறைக் குழம்புகளால் ஏற்பட்ட அதிர்ச்சி என்ற நிலையில் கூடங்குளத்தில் சின்ன ஆபத்து ஏற்பட்டாலும் கற்பனை செய்ய இயலாத, தாங்க முடியாத அழிவுகள் ஏற்படும் என்ற அறிக்கை தாக்கல் செய்ததை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்

           இந்திய அணுசக்தி கட்டுப்பாட்டுக் கழகமே அணுஉலையிலிருந்து 16 கி.மீ. தொலைவுக்குள் 10,000 மக்கள் உள்ள ஊர் இல்லாமல் இருக்கும் ஊரில்தான் அனு உலை அமைக்க வேண்டும் என  விதி உள்ளது, அப்படி இருக்க  இங்கோ இந்த எல்லைக்குள் உள்ள கூடங்குளத்தின் மக்கள் தொகை 11,029. பழவூரின் மக்கள் தொகையோ 15,811. லெவிஞ்சிபுரத்தின் மக்கள் தொகையோ 12,679. என்பதை தெரிந்துகொள்ளுங்கள்


              நீங்கள்  40 பக்கத்தில் அறிக்கை கொடுத்த அனுமின் நிலயத்தில் இதுவைர
இந்த அணுஉலைகளில் எவ்வளவு எரிபொருள் பயன்படுத்தப்படும்; அதிலிருந்து எவ்வளவு கதிரியக்க கழிவு வெளியாகும் என்பது போன்ற தகவல்கள்கூட  யாரிடமும் சொல்ல மறுப்பது ஏன்

இங்கு மாமியா குழம்பு வைத்தால் மறுமகள் சாப்பிடுவதில்லை
மறுமகள் குழம்பு வைத்தால் மாமியா குழம்பு சட்டியே தொடுவதில்லை
 என்ற கதையாய்
.
பல்லாயிரம் டன் கதிரியக்கக் கழிவை பல ஆயிரம் வருடங்கள் இங்கே எப்படி பாதுகாக்கப் போகிறார்கள் என்பது  குறித்து ஏதாவது உத்தேசம் உண்டா கலாம் அவர்களே

  தற்போது கல்பாக்கம் அணுஉலைகள் வெறும் 460 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்கின்ற போது  இரண்டிலும் இருந்து வெளியாகும் கழிவு நீரால் அப்பகுதி கடல் 10.3 டிகிரி வரை சூடாகிறது என்கிறது அரசு அறிவிக்கை அப்படி இருக்க கூடங்குளத்தில் .1000 மெகாவாட் திறனுடைய 6 உலைகள் அமைக்க இருக்கும் இந்த வேளையில் ஆனால், கடல் நீர் மட்டும் 7 டிகிரிதான் சூடாகும் என்கிறீர்கள் நீங்கள் எந்த பள்ளியில் படித்தீர்கள் சொல்லுங்கள் உங்கள் கணக்கு வாத்தியாரை பார்க்க வேண்டும்

தமிழன் உயிருக்கு உலை வைக்கும் கூடங்குளத்திற்கு ஆதராவாக கூசா தூக்கும் கலம் அவர்களே  பல்லாயிரம் கோடி செலவில் தோண்டப்படும் சேதுக்கால்வாய் கிடப்பில் போடப்பட்டுள்ளதை பற்றி எப்போதாவது வாய் திறந்தது உண்டா?

  முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களே  கடந்த வருடங்களில் உங்கள் கண்முன்னே
 கூடங்குளத்தில் கட்டப்பட்டு வந்த மின்னணு கட்டுப்பாட்டு கோபுரம்  இடிந்து விழுந்ததில் பலர் படுகாயமடைந்ததும்  அணு உலைக்கான கருவியொன்று கொண்டு வரப்பட்ட போது உயர் அழுத்த மின்கம்பி  இருவர் இறந்துவிட்டதும்  அண்மையில் நீங்கள் கூடங்குளத்திற்கு வந்தபோதுகூட, நீங்கள்  நின்ற இடத்திற்கு சில அடிகள் தொலைவில் இருந்த அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. குளிர்சாதனத்தை இயக்க கூரைக்கு மேல் பொறியாளர் ஏறியபோது இடிந்து விழுந்தது உண்மையில் நீங்களா  காப்பாற்றப் போகிறீர்கள்

  புறா திட்டம் என்ற பெயரில் கூடங்குளம் பகுதிக்கு நீங்கள் பத்து அம்சத் திட்டத்தில். “கூடங்குளத்தில் மருத்துவமனை, சாலை, தொழிற்சாலை, பள்ளி, விளையாட்டு மைதானம், 200 கோடிக்கு வளர்ச்சித் திட்டம் சிபாரிசு செய்திருப்பதை பார்க்கும்போது   இந்தியாவில் கேவலமான ஓட்டுக்கு விலை பேசிடுவதை போல  ஒரு பெண்ணின் மானத்தை விலை பேசுவதையும் விடக் கேவலமாக கீழ்த்தரமானது,   நீங்கள் நடத்து கொள்ளும் விதம் என நீங்கள் கனவு மட்டுமே காணச்சொன்ன இளைஞர்கள் பலர் நெஞ்சில் பதியம் போட்டு விட்டனர் என்பதை மறந்து விடவேண்டாம்

   5 4  எத்தனை என கூட்டத்தெரியாத எம் தமிழ்சாதியினர் கூடங்குளம் 30 ஆண்டுகளில் மூடிவிடவேண்டும் எனவும் அணுக்கழிவைப் பராமரிக்கும் செலவு  மிக மிக அதிகம் என்றும் அனுக்கழிவை பல ஆயிரம் ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும் எனவும் கழிவின் கதிர்வீச்சு 25,000 ஆண்டுகள் நீடிக்கும். அதனைப் பாதுகாக்க பல்லாயிரம் கோடி செலவு. ஆகும் ’.    என எத்தனை பேருக்குத் தெரியும் என உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்  பார்ப்போம்




      ஆபத்து இல்லா அணு உலையே அகிலத்தில் இல்லை. எனவே கூடங்குளத்தில் அபாயம் என்றால் அதன் பாதிப்பு வடக்கே மதுரை, தென்கோடியில் திருவனந்தபுரம், மேற்கே மலைத்தொடர், கிழக்கே வங்கக்கடல், இலங்கை என்று பாதிப்பு. வாழ்வா சாவா என்ற கேள்விக்குறியின் நிம்மதியற்ற நிலை. 150 கி.மீட்டர் சுற்றிப் புல், பூண்டு எல்லாம் அழிந்துவிடும்

           கூடங்குளம் உலையின் அணுக்கழிவுகள் ரசியாவுக்குக் கொண்டு செல்லப்படும் என்று முதலில் ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர், ஏன் பல்டி அடித்தார்கள் என சொல்லுங்கள் பார்ப்போம்

                நீங்கள் தமிழ்நாட்டில் பிறந்தமைக்காக பெருமைபட்ட நான் 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் ஏன் ஒரு அணுஉலை கூட அமைக்கவில்லை?” என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் இருக்கும் போது உங்களை எப்படி அனு விஞ்ஞானி ஏற்பது என இந்த கேனக்கிருக்கனுக்கு கேள்வியாய் பிறந்து கடைசியில் கேலியாய் முடிந்து போனது

.          1986 செர்னோபிலின் அணு உலை ஏற்படுத்திய பாதிப்புகள் எத்தகையவை என கூகிளில் லேசாக ஒரு தேடலை தொடங்கிவிட்டு வாய் சவுடால் விடும் நாரவாயன் நாரயணசாமி சிவகங்கை தொகுதியில் பிராடு தனம் செய்து ஜெயித்த ப, சிதம்பரம் ஈ,வீ,,கே எஸ் போன்றவர்களை கூடங்குளத்திற்கு அருகிலே குடியமர்த்திவிட்டு நீங்கள் நாளையே கூடங்குளத்தை திறங்கள் தமிழர்களாகிய நாங்கள் மிகவும் சந்தோசப்படுவோம் உண்மையில்
அல்லது
           அணு உலை பாதுகாப்பானதுதான் தொடர்ந்து கிளிப்பிள்ளை போல் கூறி வருகிற அதிமேதாவிகளே நீங்கள் ஏன் ஒரு அணு உலையைக் கூட தில்லியில் நிறுவவில்லை? இல்லையேல் அணு உலையை ஆதரித்துப் பேசுபவர்களை ஒரே இடத்தில் குடியமர்த்தி அங்கு ஒரு அணு உலையை நிறுவுங்கள். பார்ப்போம் உங்களின் இந்திய பற்றை
   

இன்று வரை கூடங்குளம் தொடர்பாக வெளிப்படையாக  பதிலளிக்காமல், “இந்தக் கேள்விகளையெல்லாம் உங்களுக்கு யார் தயாரித்துக் கொடுத்தார்கள்?” என நீங்கள் கேட்கும்போது  உண்மையில் நான் ஏன் இந்தியாவில் பிறந்தேன் என எனக்கே  வெக்கமாக இருக்கிறது

ஃபூகுஷிமாவை விபத்தின் எதிரொலியாக ஜெர்மனி, இத்தாலி, ஸ்வீடன் என பல நாடுகள் தங்களின் அணு உலைகளை மூட கெடு நிச்சயித்து விட்டபோது இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் ஏன் துவங்க வேண்டும்.

இருபத்தைந்து மற்றும் அதற்குக் குறைவான மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் சிறிய நீர்மின்நிலையங்கள், காற்றாலைகள் மற்றும் சூரிய ஒளி ஆகியவற்றின் மூலம் பெறப்படும் ஆற்றல்கள், உயிரி ஆற்றல்கள், நகர்ப்புற மற்றும் தொழிற்சாலை சார்ந்த திட மற்றம் திரவக் கழிவுகளிலிருந்து பெறப்படும் ஆற்றல் ஆகியவை புதிய மற்றும் புதுப்பித்தக்க ஆற்றல்கள் எனப்படுகின்றன. நமது நாட்டில் அவற்றிற்கான வாய்ப்புகளைப் பார்ப்போம்.

அரசியல்வாதிகளே, அறிவியல் அறிஞர்களே,
"எமது வாழ்க்கையையும் எமது சந்ததியையும்
காவு கொடுக்கக் கூடிய ஒரு அறிவியலை
எமது நிலத்திலே எங்கள் பணத்திலே
விதைக்கும் முன்னர், எம்மை
ஒரு வார்த்தையேனும் கேட்டீர்களா?"

"இது இன்னது இது இத்தன்மையது
என்று எங்களுக்குக் கல்வியூட்டியபின்
கட்டினீர்களா?"

சிறிய நீர்மின் நிலையங்கள்

மாபெரும் நீர்த்தேக்கங்களை உருவாக்கி மின்னுற்பத்தி செய்வதை விட ஆறுகளில் ஆங்காங்கே சிறு சிறு தடுப்பணைகளை உருவாக்குவதன் மூலம் குறைந்த செலவில் அதிக அளவு மின் உற்பத்தி செய்ய முடியும். இந்த வகையில் மட்டும் 15,000 மெகாவாட் மின்சாரம் அடுத்த ஆண்டிற்குள் நமக்குக் கூடுதலாகக் கிடைக்க வாய்ப்புள்ளது. இதில் அரசு கவனம் செலுத்தினால் நாடு முழுவதும் ஏராளமான சிறு சிறு தடுப்பணைகள் மூலம் ஏராளமான மின் ஆற்றல்களைப் பெற முடியும்.

காற்றாலைகள்

                காற்றாலைகள் மூலம் தற்போது 14,158 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. காற்றாலைகள் மூலம் 65,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இத்தகைய வாய்ப்பு இருந்தபோதும் அரசு அதற்குப் போதிய ஊக்கம் அளிப்பதில்லை. மின் உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து பயன்பாட்டு இடத்திற்கு மின்சாரத்தை எடுத்துச் செல்வதற்கான உள்கட்டுமானங்களைப் போதிய அளவுக்கு அரசு உருவாக்கித் தருவதில்லை.அதனால் காற்றாலை மூலம் பெறப்படும் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலை உள்ளது.

நகர்ப்புற மற்றும் தொழிற்சாலை சார்ந்த கழிவுகள்

                 நமது நாட்டில் தற்போது ஆண்டு ஒன்றுக்கு நகர்ப்புறங்களிளிருந்தும் தொழிற்சாலைகலிளிருந்தும் 4.2 கோடி டன்கள் திடக்கழிவும் 600 கோடி கன மீட்டர் திரவக்கழிவும் உருவாகிறது. இவற்றை எரிபொருளாகக் கொண்டு மின்சாரம் தயாரிக்க முடியும். தற்போது நமது நாட்டில் ஆறு இடங்களில் மட்டுமே கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.அதன் மூலம் 19.05 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாடெங்கும் கழிவுகளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால் இன்னும் ஏராளமான மின்சாரத்தைப் பெறமுடியும்.

               இத்திட்டத்தின் மூலம் மின்சாரத்தைப் பெறுவதோடு மட்டும் அல்லாமல் நாட்டின் பெரும் பிரச்சினையாக இருக்கும் மாசு பிரச்சினையை ஒழித்து விடலாம். நதிகள் நாசமடைவதைத் தடுத்துவிடலாம். மேலும் அதிலிருந்து கிடைக்கும் நீர்மப் பொருட்கலவை(Slurry) நிலத்தை வளப்படுத்துவதற்கு நல்ல உரமாகப் பயன்படும். உரங்களின் இறக்குமதிக்காக நாம் ஆண்டு தோறும் செலவிடும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள அந்நியச் செலாவணி மிச்சமாகும்.

சூரிய வெப்ப ஆற்றல்

          சூரிய வெப்பத்திலிருந்து நாம் வற்றாத ஆற்றலைப் பெறமுடியும்.ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதியில் 20,18,110 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள பாலைவனம் உள்ளது. அதில் வெறும் 15,000 சதுர கிலோமீட்டர் பரப்பிலிருந்தே 3,00,000 மெகாவாட் மின்சாரத்தை சூரிய வெப்பத்திலிருந்து பெறமுடியும். ஆனால் 2013-க்குள் 20,000 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

சரியாகத் திட்டமிட்டால் இந்தியாவில் உள்ள பெரும்பகுதியான கிராமங்களின் மின் தேவையை சூரிய வெப்பத்திலிருந்தே நிறைவு செய்து கொள்ளமுடியும்.

உயிரி ஆற்றல்(Bio-energy)

          இன்றும் நமது மக்களில் எழுபது விழுக்காட்டினர் உயிரி ஆற்றலைச் சார்ந்துதான் உள்ளனர். மொத்த ஆற்றல்களில் முப்பத்திரண்டு விழுக்காடு உயிரி ஆற்றலாகத்தான் உள்ளது. ஆண்டுதோறும் 500 கோடி மெகாவாட் உயிரி ஆற்றலிலிருந்து பெறப்படுகிறது. அதன் மூலம் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு ஒரு கோடி மனித வேலை நாட்கள் உருவாக்கப்படுகின்றன. இத்தகைய உள்ளுறை ஆற்றலைக் கொண்டுள்ளது உயிரி ஆற்றல்.

           வனங்களிலிருந்தும் வேளாண்மையிலிருந்தும் தாவரக்கழிவுகளாக நமக்கு ஆண்டு ஒன்றுக்கு ஐம்பது கோடி டன்கள் கிடைக்கின்றன. இவற்றிலிருந்து நம்மால் மின்சாரம் தயாரிக்க முடியும். இந்தியாவில் உள்ள 550 சர்க்கரை ஆலைகளிலும் கிடைக்கும் சர்க்கரை உற்பத்திக் கழிவுப்பொருட்களிலிருந்து மின் உற்பத்தி செய்ய முடியும். மேலும் சர்க்கரை ஆலைக் கழிவுகளிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்யப்படுவதன் மூலம் நமது ஆற்றலின் உற்பத்தியைப் பன்மடங்கு அதிகப்படுத்தலாம். உயிரி ஆற்றல் காற்றில் கார்பன்-டை ஆக்சைடின் அளவை அதிகப்படுத்தாது. சுற்றுச் சூழலைக் கெடுக்கவும் செய்யாது.

             இவ்வாறு சுற்றுச்சூழலைக் கெடுக்காத, வற்றாத ஆற்றலுக்கு உரிய மூலாதாரங்களைத் திட்டமிட்ட வழியில் பயன்படுத்துவதன் மூலம் நமது மின் தேவையை நிறைவு செய்ய முடியும். தீங்கு இல்லாத வகையில் மின் உற்பத்தி செய்ய முடியும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். நமது நகரங்களையும் நதிகளையும் மாசுகளால் நாசமடைவதிலிருந்து பாதுகாக்க முடியும் .இதற்குத் தேவை நாட்டு மக்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்டுள்ள அரசு.

கூடங்குளம் தொடர்பாக இன்னும் படுமோசமாக வாழ்த்திட
ஆதரத்தோடு உங்களிடம் விரைவில் வளம் வருவேன்

இந்த கேனக்கிருக்கனை திட்டுவதாக இருந்தால் பெயர்:
 சிகா, லெனின் கீரமங்கலம் 9047357920


Monday 20 February 2012

அணு உலைக்கு எதிராகப் போராடும் கூடங்குளம் - இடிந்தகரை மக்களுக்கு எதிராக அவதூறுப் பிரச்சாரம் செய்வதையும், மிரட்டுவதையும் மத்திய அரசு உடனே நிறுத்த வேண்டும்!

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் - இடிந்தகரையில் அமைந்துள்ள அணு உலையை மூட வேண்டுமெனக் கோரி கடந்த 1988லிருந்து போராடி வரும் அப்பகுதி மக்கள் கடந்த மூன்று மாதங்களாக போராட்டங்களை தீவிரப்படுத்தி தொடர் உண்ணாவிரதம், சாலை மறியல், அணு உலை முற்றுகை என வீரியத்தோடு போராட்டத்தில் முன்னேறி வருகின்றனர். மக்களின் நியாயமான கோரிக்கையை நேர்மையாகப் பரிசீலிக்க மறுக்கும் மத்திய அரசு போராட்டத்தை ஒடுக்குவதற்கு பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளில் அணு உலைகள் தொடர்பான பொய்களைப் பிரச்சாரம் செய்வது, போராட்டக் குழுவில் பிளவை உண்டாக்குவது, மதரீதியாக மக்களிடையே பிளவை ஏற்படுத்துவது, வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என அவதூறு செய்வது எனப் பல தவறான முயற்சிகளைச் செய்து வருகிறது.

இதற்கு ஆதரவாக கைக்கூலி எதிர்போராட்டக்காரக் குழுவினர், மக்கள் ஆதரவின்றி வாய்ச்சவடால் அடித்து வருகின்றனர். காங்கிரசு, பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ்., அப்துல் கலாம், துக்ளக் சோ, சுப்பிரமணியசாமி, சேதுராமன், கிருஷ்ணசாமி போன்றோர் இதற்கு துணை நிற்கின்றனர். கூடுதலாக போராட்டக் குழுவினர் மீது 66 வழக்குகள், தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும், முப்படை பாதுகாப்பு என மிரட்டுகிறார்கள்.

1. மக்களின் மின்சாரத் தேவைக்காக அணுஉலை என்பது பொய். நேர்மையான சமூக நோக்குடைய இந்திய விஞ்ஞானிகளின் கருத்துப்படி மக்களையும், சுற்றுச் சுழலையும் பாதிக்காத நமது நாட்டில் அதிகம் கிடைக்கக் கூடிய சூரியஒளி மூலம் போதுமான மின்சாரம் தயாரிக்க முடியும். இதே போல் காற்று, நீர், கடல்அலை என சுயசார்பு மின் திட்டங்களை உருவாக்கலாம்.

2. அணு உலைகள் கட்டுவதென்பது பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் அமெரிக்க, ரசிய, ஐரோப்பிய நாடுகளின் அரசுகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பல லட்சம் கோடி மக்கள் வரிப்பணத்தை இந்திய அரசு தாரை வார்ப்பதாகும்.

3. இந்திய அணுசக்தித் துறை 1970ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை 2000மாவது ஆண்டில் அணு உலைகள் மூலம் 43,500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியுமென்றது. ஆனால் 2010 ஆம் ஆண்டில் கூட 2720 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போதும் 1970ல் சொன்னது போன்ற தவறான தகவல்களை இந்திய அணு சக்தித்துறை பரப்புகிறது.

4. வெளிநாடுகளில் வாங்கப்படும் யுரேனியத்தைச் சார்ந்தே இந்திய அணுஉலைகள் செயல்படும் என்ற நிலையில் 2008ல் போடப்பட்ட இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தப்படி 36 அணுஉலைகள் அமைக்கப்பட்:டு, மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால் மின்சாரத்தின் விலையும், பெட்ரோல் விலை போல உயரும். மின்சாரத்திற்கு வெளிநாடுகளைச் சார்ந்து இருக்க வேண்டியது வரும். நாட்டின் சுயசார்பு அழியும்.

5. இயற்கைச் சீற்றங்கள் தவிர சாதாரணமாக மனிதத் தவறினால் அணுஉலை விபத்து ஏற்பட்டால் கூட தமிழகத்தின் தென்பகுதி அழியும் அபாயம் உள்ளது.

6. ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி போன்ற நாடுகள் அணு உலையை மூட முடிவெடுத்துள்ளனர். மேற்குவங்கம், கேரள மக்கள் அணு உலைகளை தங்கள் மாநிலத்தில் அமைக்கவிடாமல் தடுத்துள்ளனர். உச்சநீதிமன்றம் சுகாதாரமாக வாழும் உரிமை மக்களின் அடிப்படை உரிமை. என அங்கீகரித்துள்ள நிலையில் தமிழக மக்களுக்கும் அரசியல் சட்டப்படி அணு உலையை மூடக் கோரும் உரிமை உண்டு. இடிந்தகரையில் பெண்களும், குழந்தைகளும், முதியோரும் வெயில், மழை பாராது தொடர்ந்து போராடி வருவது பொழுதுபோக்குக்கு அல்ல. போபால் விபத்து போல அணு உலையால் தங்கள் வாழ்க்கை அழிக்கப்படும் எனக் கருதி மக்கள் போராடுகிறார்கள்.

7. அணு உலை கழிவுகளைப் பாதுகாப்பதற்கு வளர்ச்சி அடைந்த நாடுகளே திணறிவரும் நிலையில் இந்திய அரசு பெரும் பொருட் செலவில் அணுக் கழிவுகளை பாதுகாக்கும் செலவையும் அணுமின் உற்பத்தியோடு சேர்த்தால் யூனிட்டுக்கு மின் கட்டணம் ரூ.25ஃ- வரும். பொதுமக்கள் தான் இத்தொகையை செலுத்த வேண்டி வரும். அணு உலை கழிவுகளை பாதுகாக்கும் செலவுகளை அணுமின் உற்பத்தி செலவுடன் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

8. சமூகப் பொருளாதார வளர்ச்சியடைந்தவர்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் ஒரு செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டால் கூட அதற்கு எதிராக மேல் தட்டு வர்க்கத்தினர் போராடும் சூழலில் அணுமின் கதிரியக்க பேராபத்தின் நடுவே வாழும் உழைக்கும் மக்கள் தங்கள் நியாயமான எதிர்ப்பை காட்டுவதைக் கூட வெளிநாட்டு சதி, மத அமைப்புகளின் பணம் எனக் கொச்சைப்படுத்துவது ஜனநாயக ரீதியில் போராடும் மக்களை இழிவுபடுத்துவதாகும். போராடுவது மக்களின் அடிப்படை உரிமை

Thursday 16 February 2012

வாழும் வள்ளுவர் கலைஞர் அவர்களுக்கு நான் எழுதும் கடிதம் பாகம் 2

                  பினங்களை பார்த்து பழகிய மனங்களாய் ஒவ்வொரு தமிழனையும் ஆக்கிய பெருமை மிக்க உடல் உள்ளவரை கடல்கொள்ளாத ஆசையாய் தன் மகனை முதல்வராக்க வேண்டும் என்ற பதவி எனும் பஞ்சடைத்த காதினால் இன்று மொத்த தமிழினமும் பேச மருத்து நெஞ்சடைத்து ஊமையாய் நிற்கின்ற இந்த வேளையில் எந்த நூற்றாண்டுக்கும் உங்களால் நானும் எம் தமிழ்சாதியும் துரோகியாகிப்போன பட்டத்தேதாடு இன்றுவரை தன் வசீகர பேச்சாலும் பொய்மை கவிநடையாளும் மதி மயக்கி கல்லில் நார் உரித்தாலும் வலிக்காமல் உரிக்கின்ற கலையை கற்ற வாழும் வள்ளுவரே துக்கம் நிறைந்த விழிகள் ததும்பிய கண்ணீரோடு எனது அடுத்த மடல்,,

            மிகப்பெரிய சாதனையாக இந்த தமிழினத்திற்காக செம்மொழி மாநாடு என்று ஏதோ ஒன்றை நடத்தி எதையோ பெற்றுவிட்டதைப்போல காட்டிக்கொள்ளும்  இன மொழி காவலரே  உங்கள் குடும்பத்தார்கள் இன்றுவரை சன் பிக்சர்ஸ் என்றும் ரெட்செயனட் என்று தனது படப்பிடிப்பு நிறுவனங்களுக்கு சீரும் சிறப்புமாக நடத்திக்கொண்டிருப்பதை  உங்களின் நல விரும்பிகள் உங்களின் மனசாட்சி என்று சொல்லிக்கொள்ளும்  ஈழ இறுதிப்போரின்போது வீதிக்கு வந்து போராடாமல் ஈழத்தமிழர்களை கொன்று புதைத்ததைப்போல் தனது பேனாவையும் மனசாட்சியையும் புதைத்த கவிஞர்கள் என்று சொல்லிக்கொள்ளும் வாலி,  கவிப்பேரரசு வைரமுத்து,   பா, விஜய் போன்ற இன்னும் பல துதிபாடும் புலவர்கள் விளக்கம் தருவார்களேயானால் நிச்சயம் புரியும் இந்த கேனக்கிருக்கனுக்கு உங்களின் தமிழார்வம்

         நீங்கள் தன்னை கடலிலே தூக்கிப்போட்டாலும் தமிழருக்காக கட்டுமரமாக மிதக்க வேண்டாம் ஈழத்திற்காக தன்னையே எரித்து எங்களுக்குள் அனையா நெருப்பை கொட்டிவிட்டு சென்ற முத்துக்குமாருக்காக சட்டசபையில் ஒரு இறங்கள் தீர்மானம் நிறைவேற்றிட திராணியற்ற தமிழின தலைவராக இருந்து இனி யாருக்குத்தான் என்ன பெருமை சொல்லுங்கள் பார்ப்போம்

            கடிதம் கண்ட கழக நெஞ்சினர் உங்கள் மீது கனிவு கொண்டதினால் குடும்பமே மத்திய மாநில அரசுகளின் அங்கம் வகிக்கும் அற்புதங்கள் நிகழ்ந்து
 
             திருவாருரில் இருந்து திருட்டு ரெயில் ஏரி சென்னை வந்ததினால் சொற்பமாய் துவங்கிய வாழ்வு தமிழென்றும் தமிழனென்றும் சொல்லக்கண்டதாலே இன்று சொர்க்கமாய் மாறியதால் இன்று
 
வங்கிக் கணக்கில் வைப்பு நிதியாக கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் 4 கணக்குகள் உள்ளன. இதில் 5 கோடியே 13 லட்சத்து 49 ஆயிரத்து 152 ரூபாய். அடையாறு கரூர் வைசியா வங்கியில் 13 லட்சத்து 74 ஆயிரத்து 664 ரூபாய்.

கர்நாடகா வங்கியில் 39 லட்சத்து 62 ஆயிரத்து 995 ரூபாய். ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் 10 ஆயிரத்து 958 ரூபாய். சென்னை மகாலிங்கபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 11 ஆயிரத்து 135 ரூபாய்.
கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் 11 லட்சத்து 39 ஆயிரத்து 441 ரூபாய். ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் 13 லட்சத்து 15 ஆயிரத்து 180 ரூபாய் என, மொத்தம் 5 கோடியே 91 லட்சத்து 63 ஆயிரத்து 5,256 ரூபாய். 22 பைசா வங்கிக்கணக்கில் பணம் வைத்துள்ளீர்கள்

அஞ்சுகம் பதிப்பகம் என்கிற பங்குதாரர் நிறுவனத்தில் 50 சதம் பங்குகள் 78,330 ரூபாய். இந்த நிறுவனத்திற்கு சென்னை, 180/93, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் சொந்தான கட்டடம் மற்றும் நிலம். கோபாலபுரம் 15-4வது குறுக்குத்தெருவில் அஞ்சுகம் அம்மாள் அறக்கட்டளைக்கு செட்டில்மென்ட் செய்யப்பட்ட 6 ஆயிரத்து 162 சதுர அடி மனை மற்றும் அதில் உள்ள கட்டடம். அறக்கட்டளை சொத்து ஆயுட் காலம் அனுபவ பாத்தியம் உள்ளது. தஞ்சை மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் (சர்வே எண் 29, 30/2, 31/2ஏ) 14.30 ஏக்கர் நிலம். இதற்கான மதிப்பு 4 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 855 ரூபாய். இதன் மூலம் அவரது பெயரில் 10 கோடியே 84 லட்சத்து 20 ஆயிரத்து 380 ரூபாய். அவருக்கு திரைப்படம் எடுக்க மும்பையில் மோசர்பேரிடம் 10 லட்சம் ரூபாய் முன்பணம் வாங்கிய வகையில் கடன் உள்ளது என தெரிவித்துள்ளார். வருமான வரி 37 லட்சத்து 34 ஆயிரத்து 20 ரூபாய் கட்டியுள்ளீர்கள்

அசையும் சொத்து மதிப்பில், மனைவி தயாளு பெயரில் கலைஞர் "டிவி' நிறுவனத்தின் பங்குதாரர் என்ற வகையில், 6 கோடி ரூபாய் உட்பட 15 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரத்து 363 ரூபாய். அசையா சொத்துகள் 5 லட்சத்து 22 ஆயிரத்து 635 ரூபாய். இது தற்போதைய நடப்பு சந்தையின் தோராய மதிப்பாக 5 லட்சத்து 51 ஆயிரம் என குறிப்பிடப்பிட்டுள்ளீர்கள்

துணைவியார் ராசாத்தி பெயரில் அசையும் சொத்துகள் 20 கோடியே 62 லட்சத்து 61 ஆயிரத்து 924 ரூபாய். அசையா சொத்துகள் 3 கோடியே 8 லட்சத்து 35 ஆயிரத்து 318 ரூபாய். இதற்கு தற்போதைய நடப்பு சந்தையின் தோராய மதிப்பு 3 கோடியே 14 லட்சத்து 38 ஆயிரத்து 628 ரூபாய்

ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா இப்பவே கண்ணே கட்டுதே


            சமீபத்தில் பிரஸ் மீட்டிங் ஒன்றில் நிருபர் ஒருவர் உங்களிடம் கேள்விகேட்டார் உங்கள் மகள் தீகார் சிறையில் இருப்பதைபற்றி உங்கள் கருத்து என்ன என்று அதற்கு உங்களின் பதில் உங்களக்கு ஒரு அக்கா, தங்கை அல்லது மகள் இருந்தால் எப்படி வருந்துவீர்களோ அதுபோலத்தான் எனக்கும் என்று பதில் அளித்தீர்கள் நல்ல வேளை அப்படியெரு எனக்கொரு அக்கா இல்லை அப்படி இருந்திருந்தால் நிச்சயம் அவள் கொரவளையை கடித்து துப்பியிருப்பேன் நான்,,,
 
என்னத்தை சொல்லி என்ன ஆகப்போகுது

கடலில் மூழ்கினாலும் 
காக்கை அன்னமாகாது

ஆதால் ஒரு வீரனை எவ்வாறு வாழ்த்த தெரியனுமோ அதைவிட
ஒரு துரோகியை நூறு மடங்கு தூற்ற வேண்டுமாம் 

அந்த பணியை  செய்துகொண்டே இருப்பான் இந்த கேனக்கிறுக்கன்,

தொன்மையின் மொழி அழகில் விளைந்த எம்
தொப்புள்கொடி உறவு
மரணத்தைத் தழுவி மீண்டும் சிங்கள நாயே
மரண தன்டனை தர உமக்கு எங்கள்
தம்பி தலைமையிலே எமது தம்பிகள் திரள்வாரடா
நம்பு உன் தலைமைய திருகுவாராடா
என்று கவிமுழக்கமிட்ட கவிஞனின் கூற்றுப்படி தமிழீழம் பிறக்கும்

வரலாறு எப்பொழுதும் நேர்கோட்டில் செல்வதில்லை என்பதை உணர்ந்து
தேசம் கடந்து எம் தலைவர் வாழ்கிறார் என்ற பெருமையோடு நான்,,,

Tuesday 7 February 2012

முத்தமிழ் வித்தகருக்கு மு, கலைஞர் அவர்களுக்கு நான் எழுதும் கடிதம் (பாகம் 1)

           தனது 14/வது வயதில் அரசியலில் நுழைந்து இன்றுவைர சக்கர நாற்காலியில் அரசியல் செய்து கிட்டத்தட்ட 2 லட்சம் தமிழர்கள் ஈழத்தில் படுகொலை நிகழ்ந்து இன்னும் இரத்த வாடை மறந்துபோகாத நிலையில் அதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த பாக்கியத்தை பெற முடிந்த நம் ஒப்பற்ற தமிழின தலைவரான முத்தமிழ் வித்தகருக்கு நான் எழுதும் கடிதம்,,,

வீட்டு பொஞ்சாதி வேம்பு
நாட்டு பொஞ்சாதி கரும்பு

   என நினைத்தீர்களோ என்னவே நீஙகள் மனைவியார் என்றும் துணைவியார் என்றும் தமிழகத்தை ஆட்சி செய்ய பல வாரிசுகள் உங்களுக்கு தேவைப்பட்டது எனக்கொன்றும் வியப்பாக தோன்றவில்லை, காரணம்

   அறுவடை காலத்தில் எலிக்குகூட 5 பொஞ்சாதி தேவைப்படுமாம்
அப்படி இருக்க ஐந்தமிழ் அறிஞரான உங்களுக்கு இருப்பது ஒன்றும் அதிசயமல்ல

                  இன்றைய என்னைப்போன்ற தலைமுறைக்கு தெரியாத விசயமாய் 1970 /ல் அன்றைய ஜவகரீட் என்ற செய்தித்தாள்களில் மருத்துவமனையில் ஒரு குழந்தை பிறந்துள்ளது, அதற்கு கனிமொழி என்றும் அப்பா பெயர்                                    மு, கருணாநிதி என மருத்துவ பதிவேட்டில் பெயர் கொடுத்துள்ளதாக அன்றைய நாளேட்டில் ஒரு பெட்டிச்செய்தி வெளியிட்டமைக்காக அன்றே மறுப்புச் செய்தி வெளியிட்டு கனிமொழி எனது மகள் இல்லை அது எனக்குப் பிறக்கவில்லை எனவும் அதுமட்டுமல்லாமல் அந்த செய்தித்தாள் நிறுவனத்தின் உரிமையாளர் திரு, என்,கே,டி சுப்பிரமணியம் அவர்கள்மீது வழக்குப்போட்டு கோர்ட்டு படியேறி தண்டனைகூட பெற்றுக்கொடுத்த கலைஞர் எங்கே

        இன்று டில்லிவரை சென்று 6மாத காலமாக  சோனியாவின் கரிசனையில் உங்கள் மகளை மீட்டெடுத்து  தாரை தப்பட்டை முழங்க வீதியெங்கும் வெடிமுழக்கத்துடன் வரும்பொழுது கற்பு கரசி கண்ணகியின்  சிலை நிறுவ பாடுபட்ட நெறிதவறா உங்களின் வாழ்க்கைபாதையை நினைத்து பெருமைப்பட்டவன் நான் எங்கே,,,

                     இன்றுவரை வாழ்வில் ஏணியாய் இருந்து ஏற்றிவிட்ட தமிழனைவிட சோனியா மேலென்று பதவிகளைத் தற்காத்துக்கொண்டு பகட்டாக உடன்பிறப்பு தன்பிறப்பு சூழ வாழும் ஒருவரை எப்படித் தமிழன் தமிழினத் தலைவன் என்று ஏற்பது என என்போன்ற கேனக்கிருக்கனுக்கு கேள்விகள் பிறந்து கடைசியில் கேலியாய் முடிந்துபோனது

                          தன் மொழியை இனத்தை முனைப்போடு காக்க வந்த நீங்கள் பதைபதைப்போடு தன் பிள்ளைகளை காக்கும் முயற்சியில் களத்தில் இறங்க வந்த விளைவு எந்த ஒரு தமிழனின் நலனுக்கும் உங்களால் பாதுகாப்புத் தரமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது, உங்கள் ஆட்சிகாலம் என்பது காலங்காலமாய் நினைத்துப்பார்தோமையானால் உங்கள் குடும்பம் நலன் சார்ந்தே இருக்குமென்பது கண்கூடு

             ஜந்தாம் முறையாக ஆட்சிப் பொறுப்பில் நீங்கள் இருந்திருந்தாலும்கூட ஏற்கனவே நான்குமுறை இருந்த கால கட்டத்தில் பிள்ளைத்தமிழை அறியனை ஏற்ற எந்த ஒரு அடித்தளத்தையும் நீங்கள் அமைக்கவில்லை ஆனால் உங்கள் பிள்ளைகளை அரியனைக்குத் தயார்படுத்தியதை முனைப்பு காட்டியதை 

தமிழருக்கு என்றால் கடிதம் எழுதுவதும்
தன் குடும்பத்திற்கு பதவி என்றால் டில்லி விரைவதும் உங்களின் கடந்த கால அரசியல் நிகழ்வுகள் சொல்லும்

      தான் நேசித்த மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் எத்தகைய உயர்ந்த உன்னதமான தியாகம் செய்யமுடியுமோ அந்த அற்புதமான அறப்பணியை செய்த தியாக தீபம் திலீபன் எங்கே

      உங்கள் மகள் தீகார் சிறையில் தனிமையில் இருக்கும்போது கண்ணீர்விட்டும் எங்கள் தொப்புள்கொடி உறவு மாண்டபோது மழை நி்ன்றாலும் தூவானம் நிற்கவில்லை என உயிர்பலியை கேவலப்படுத்தும் நிலைமைக்கு முதுமையோடு தள்ளப்பட்டு நாளொரு கவிதை பொழுதொரு அடுக்குப்பொய் பேசிடும்  முத்தமிழ் வித்தகர்  நீங்கள் எங்கே

         உங்கள் ஆட்சிகாலத்தி்ன் அவலக் காட்சிகளை மக்கள் மனதில் பதிந்துவிடாத வண்ணம் இலவச வண்ணத்தொலைக்காட்சி அறிவிப்புகளும் இடைக்கால மழைக்கால கடன் நிவாரணத் தள்ளுபடிகளும் எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் கவனம் எந்த வகையிலும் அரசின்மீது விழுந்துவிடாத வண்ணம் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தி குடிமகன்களின் தாழ்வு நிலைக்கு வழிகோலும் நிலைகளையெல்லாம்  மூடிமறைத்துவிட்டு குறிப்பாக தமிழகத்தில் ஆளுமைப் பொறுப்பில் தமிழரல்லாத ஒரு தனவான் ஆண்டுகொண்டிருந்த அவல நிலையை காணமுடிந்த பாக்கியத்தை பெற்றவர்களின் இந்த கேனக்கிருக்கனும் ஒருவன்

     மறைந்த த,கி, என்ற தா,கிருஸ்ணனின் கொலையில்கூட குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் தீர்ப்பு சொன்ன நீதிபதி தற்காப்பு கருதி நீதிபதி குரோர்பதி ஆகிவிட்டதாக உங்களைப்போல நானும் கொஞ்சம் கேள்விபட்டேன் இப்படிப்பட்ட நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்போது நாஞ்சில் கி, மனோகரன் சொன்னதுபோல் அது கருவின் குற்றமாகக்கூட இருக்கலாம்  நான் உண்மையில் நெஞ்சுக்கு நீதி கதை எழுதிய உங்களை நினைத்து பெருமை கொள்வோமாக,,,,


           மானமும் அறிவும் மனிதற்கு அழகு என்று தந்தை பெரியார் கருத்து சராசரி மனிதனா் பின்பற்றப்படாமல் போனாலும் மொழியின்பால் இனத்தின்பால் பற்றில்லாத ஒருவனை வெற்று ஆள் என்று ஒதிக்கிவிட வேண்டாமென்று சொன்ன பேரறிஞர் அண்ணா அவர்களின் கருத்திற்கு இணங்க நம் தமிழை இனத்தை காக்க வந்த காத்தவராயன் கரிகாற்சோழன் வாழும் வள்ளுவர் வாழ்ந்த அண்ணாவின் வாரிசு என்பவர் ஐந்தமிழ் அறிஞர் உலகமகாகவி என்றெல்லாம் உயர்த்தி உள்ளத்தில் குடியமர்த்தி அழகு பார்த்த அப்பாவி தமிழனின் தொப்புள்கொடி உறவுகளான ஈழம் வாழ் தங்கங்களை சிங்கள எச்சங்கள் நஞ்சை பாய்ச்சி நய வஞ்சகமாய் கொத்துக்குண்டுகளை போட்டுக் கொத்துக் கொத்தாய் கொலைசெய்தபோது கையோடு கைகோர்த்தும்  மை தீரும்வரை யுததம் முடியும்வரை கடிதங்கள் எழுதியும் தமிழக மக்கள் மத்தியில் முத்தமிழ் அறிஞரான நீங்கள் ஆடிய நாடகம் ஒருவழியாய் முடிந்துபோனது எம் சொந்தங்களி்ன் உயிர்பசியும்

           தேன்தமிழென்று பேசும் உங்களால் பேச்சு இழந்துபோன தமிழ்ச்சமூகம் உங்கள் ஆட்சியில் கேலித்தனமான போக்குகளைச் சுட்டிக்காட்டும் நிலை வந்தால் செம்மொழி மாநாடு நடத்தி ஈழப் படுகொலை நிகழ்வுகளை மூடிமறைக்கும்  முயற்சியை வெளிப்படுத்த முயன்றால் ஏவல்துறையை  ஏவிவிட்டு என்னைப்போன்ற இளைஞர்களை சிறையில் தள்ளுவதை சிறப்பான பணியாக சீராய்ந்த தமிழறிஞர் உங்கள் ஆட்சிகாலத்தில் சிறப்பாக செய்தீர்கள் உங்களோடு சேர்த்து விஞ்ஞான ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு ஞாஞ ஊதுகுழல் ஊதிக்கொண்டிருக்கும் திரு, சுப,வீ, திரு, அடிமைமணி (வீரமணி ஆகியோர்களுக்கு தெரியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் தமிழின தலைவருக்கு நான்,,,,,,

      உங்கள் உடல் உள்ளவரை கடல்கொள்ளாத ஆசையாய் தன் மகனை முதல்வராக்கவேண்டும் என்ற தனியாத ஆசையாய் இருக்கும் முன்னால் முதல்வரே உங்களின் பஞ்சடைத்த காதினால் இன்று மொத்த தமிழினமும் பேச மறுத்து நெஞ்சடைத்து ஊமையாய் நிற்பது உங்களுக்கு தெரியுமா?

        ஒரு காலத்தில் தனது வசீகர பேச்சால் முழக்கமிட்டு ஊர்கூட்டி பெருமையோடு கட்சிவளர்த்த சம்பத் போன்றோர்கள் வழிநடத்திய உங்கள் கட்சி இன்று கற்புக்கு புது இலக்கணமிட்ட குஸ்பு காமெடி நடிகர் வடிவேல் போன்ற தண்டங்களை வைத்துக்கொண்டு நீங்கள் கட்சி வளர்ப்பதை வேடிக்கை பார்த்திட இந்த கேனக்கிருக்கனுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதை எண்ணி மகிழ்கின்றேன்,,,

       அந்த அம்மா தங்கத் தாரகையோ அல்லது பித்தளை தாரகையே கொலைகாரன் ராஜபக்சேவை தண்டிக்க வேண்டுமென ஒண்டி ஆளா நின்னு சட்டமன்றத்தில் தீர்மானம்கூட போட்டுவிட்டது தன்னை கடலிலே தூக்கிப்போட்டாலும் கட்டுமறமாக மிதக்கும் தலைவரே இப்போது உங்களுக்கு இருக்கும் தமிழின தலைவர் என்ற நொண்டி பட்டத்தை   எங்கே கொண்டு புதைப்பீர்கள்  சொல்லுங்கள் பார்ப்போம்

       நான்தான் உங்கள் வீட்டு வேலைக்காரன் என வார்த்தையால் வசீகரித்து வாக்குகேட்டதி்ன் பாவத்திற்காக இன்று உங்கள் குடும்பமே ஒவ்வொரு சிறைச்சாலையாக கொள்ளைக்காரன் என்ற பட்டத்தோடு போகும்போது உண்மையில் உங்களுக்கு வாக்களித்த பாரம தமிழர்கள்மீது எனக்கும் கோபம்தான் வருகிறது

          84 வயதிலும் தன் குடும்பத்திற்கு முடிசூடிட காத்துக்கொண்டிருக்கும் முத்தமிழ் அறிஞரே தமிழர்களின் கவனத்தை திருப்பும் அளவிற்கு ஈழ விடுதலையோ அல்லது தமிழின அழிப்போ முக்கியமானதாக இருக்காது ஏனெனில் தமிழைக்காக்க தண்டவாளத்தில் தலைவைத்து படுத்ததாக சொன்ன காலத்தில் கூட கவியரசு கண்ணதாசன் சிறைக்குபேனாரே தவிற இந்த சிறுகுணத்தார் சிறைக்கு செல்லவில்லை என்பதை வயதி்ல் சிறியவனாக இருந்தாலும் நானும் எனது தாத்தா சொன்னதை அறிவேன்,,

         முத்தமிழ் அறிஞரே வாழும் வள்ளவரே உங்களை இன்னும் புகழந்து  எழுதிட இந்த கடிதத்தில் இடம் இல்லாததினால் நிச்சயம் அடுத்த கடிதத்தில் உங்கள் புகழ் தொடரும்

                                       இப்படிக்கு
தமிழனாய் உங்கள் ஆட்சிகாலத்தில் வாழ்ந்ததற்கு வெக்கப்படும் கேனக்கிருக்கன்