Thursday 16 February 2012

வாழும் வள்ளுவர் கலைஞர் அவர்களுக்கு நான் எழுதும் கடிதம் பாகம் 2

                  பினங்களை பார்த்து பழகிய மனங்களாய் ஒவ்வொரு தமிழனையும் ஆக்கிய பெருமை மிக்க உடல் உள்ளவரை கடல்கொள்ளாத ஆசையாய் தன் மகனை முதல்வராக்க வேண்டும் என்ற பதவி எனும் பஞ்சடைத்த காதினால் இன்று மொத்த தமிழினமும் பேச மருத்து நெஞ்சடைத்து ஊமையாய் நிற்கின்ற இந்த வேளையில் எந்த நூற்றாண்டுக்கும் உங்களால் நானும் எம் தமிழ்சாதியும் துரோகியாகிப்போன பட்டத்தேதாடு இன்றுவரை தன் வசீகர பேச்சாலும் பொய்மை கவிநடையாளும் மதி மயக்கி கல்லில் நார் உரித்தாலும் வலிக்காமல் உரிக்கின்ற கலையை கற்ற வாழும் வள்ளுவரே துக்கம் நிறைந்த விழிகள் ததும்பிய கண்ணீரோடு எனது அடுத்த மடல்,,

            மிகப்பெரிய சாதனையாக இந்த தமிழினத்திற்காக செம்மொழி மாநாடு என்று ஏதோ ஒன்றை நடத்தி எதையோ பெற்றுவிட்டதைப்போல காட்டிக்கொள்ளும்  இன மொழி காவலரே  உங்கள் குடும்பத்தார்கள் இன்றுவரை சன் பிக்சர்ஸ் என்றும் ரெட்செயனட் என்று தனது படப்பிடிப்பு நிறுவனங்களுக்கு சீரும் சிறப்புமாக நடத்திக்கொண்டிருப்பதை  உங்களின் நல விரும்பிகள் உங்களின் மனசாட்சி என்று சொல்லிக்கொள்ளும்  ஈழ இறுதிப்போரின்போது வீதிக்கு வந்து போராடாமல் ஈழத்தமிழர்களை கொன்று புதைத்ததைப்போல் தனது பேனாவையும் மனசாட்சியையும் புதைத்த கவிஞர்கள் என்று சொல்லிக்கொள்ளும் வாலி,  கவிப்பேரரசு வைரமுத்து,   பா, விஜய் போன்ற இன்னும் பல துதிபாடும் புலவர்கள் விளக்கம் தருவார்களேயானால் நிச்சயம் புரியும் இந்த கேனக்கிருக்கனுக்கு உங்களின் தமிழார்வம்

         நீங்கள் தன்னை கடலிலே தூக்கிப்போட்டாலும் தமிழருக்காக கட்டுமரமாக மிதக்க வேண்டாம் ஈழத்திற்காக தன்னையே எரித்து எங்களுக்குள் அனையா நெருப்பை கொட்டிவிட்டு சென்ற முத்துக்குமாருக்காக சட்டசபையில் ஒரு இறங்கள் தீர்மானம் நிறைவேற்றிட திராணியற்ற தமிழின தலைவராக இருந்து இனி யாருக்குத்தான் என்ன பெருமை சொல்லுங்கள் பார்ப்போம்

            கடிதம் கண்ட கழக நெஞ்சினர் உங்கள் மீது கனிவு கொண்டதினால் குடும்பமே மத்திய மாநில அரசுகளின் அங்கம் வகிக்கும் அற்புதங்கள் நிகழ்ந்து
 
             திருவாருரில் இருந்து திருட்டு ரெயில் ஏரி சென்னை வந்ததினால் சொற்பமாய் துவங்கிய வாழ்வு தமிழென்றும் தமிழனென்றும் சொல்லக்கண்டதாலே இன்று சொர்க்கமாய் மாறியதால் இன்று
 
வங்கிக் கணக்கில் வைப்பு நிதியாக கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் 4 கணக்குகள் உள்ளன. இதில் 5 கோடியே 13 லட்சத்து 49 ஆயிரத்து 152 ரூபாய். அடையாறு கரூர் வைசியா வங்கியில் 13 லட்சத்து 74 ஆயிரத்து 664 ரூபாய்.

கர்நாடகா வங்கியில் 39 லட்சத்து 62 ஆயிரத்து 995 ரூபாய். ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் 10 ஆயிரத்து 958 ரூபாய். சென்னை மகாலிங்கபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 11 ஆயிரத்து 135 ரூபாய்.
கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் 11 லட்சத்து 39 ஆயிரத்து 441 ரூபாய். ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் 13 லட்சத்து 15 ஆயிரத்து 180 ரூபாய் என, மொத்தம் 5 கோடியே 91 லட்சத்து 63 ஆயிரத்து 5,256 ரூபாய். 22 பைசா வங்கிக்கணக்கில் பணம் வைத்துள்ளீர்கள்

அஞ்சுகம் பதிப்பகம் என்கிற பங்குதாரர் நிறுவனத்தில் 50 சதம் பங்குகள் 78,330 ரூபாய். இந்த நிறுவனத்திற்கு சென்னை, 180/93, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் சொந்தான கட்டடம் மற்றும் நிலம். கோபாலபுரம் 15-4வது குறுக்குத்தெருவில் அஞ்சுகம் அம்மாள் அறக்கட்டளைக்கு செட்டில்மென்ட் செய்யப்பட்ட 6 ஆயிரத்து 162 சதுர அடி மனை மற்றும் அதில் உள்ள கட்டடம். அறக்கட்டளை சொத்து ஆயுட் காலம் அனுபவ பாத்தியம் உள்ளது. தஞ்சை மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் (சர்வே எண் 29, 30/2, 31/2ஏ) 14.30 ஏக்கர் நிலம். இதற்கான மதிப்பு 4 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 855 ரூபாய். இதன் மூலம் அவரது பெயரில் 10 கோடியே 84 லட்சத்து 20 ஆயிரத்து 380 ரூபாய். அவருக்கு திரைப்படம் எடுக்க மும்பையில் மோசர்பேரிடம் 10 லட்சம் ரூபாய் முன்பணம் வாங்கிய வகையில் கடன் உள்ளது என தெரிவித்துள்ளார். வருமான வரி 37 லட்சத்து 34 ஆயிரத்து 20 ரூபாய் கட்டியுள்ளீர்கள்

அசையும் சொத்து மதிப்பில், மனைவி தயாளு பெயரில் கலைஞர் "டிவி' நிறுவனத்தின் பங்குதாரர் என்ற வகையில், 6 கோடி ரூபாய் உட்பட 15 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரத்து 363 ரூபாய். அசையா சொத்துகள் 5 லட்சத்து 22 ஆயிரத்து 635 ரூபாய். இது தற்போதைய நடப்பு சந்தையின் தோராய மதிப்பாக 5 லட்சத்து 51 ஆயிரம் என குறிப்பிடப்பிட்டுள்ளீர்கள்

துணைவியார் ராசாத்தி பெயரில் அசையும் சொத்துகள் 20 கோடியே 62 லட்சத்து 61 ஆயிரத்து 924 ரூபாய். அசையா சொத்துகள் 3 கோடியே 8 லட்சத்து 35 ஆயிரத்து 318 ரூபாய். இதற்கு தற்போதைய நடப்பு சந்தையின் தோராய மதிப்பு 3 கோடியே 14 லட்சத்து 38 ஆயிரத்து 628 ரூபாய்

ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா இப்பவே கண்ணே கட்டுதே


            சமீபத்தில் பிரஸ் மீட்டிங் ஒன்றில் நிருபர் ஒருவர் உங்களிடம் கேள்விகேட்டார் உங்கள் மகள் தீகார் சிறையில் இருப்பதைபற்றி உங்கள் கருத்து என்ன என்று அதற்கு உங்களின் பதில் உங்களக்கு ஒரு அக்கா, தங்கை அல்லது மகள் இருந்தால் எப்படி வருந்துவீர்களோ அதுபோலத்தான் எனக்கும் என்று பதில் அளித்தீர்கள் நல்ல வேளை அப்படியெரு எனக்கொரு அக்கா இல்லை அப்படி இருந்திருந்தால் நிச்சயம் அவள் கொரவளையை கடித்து துப்பியிருப்பேன் நான்,,,
 
என்னத்தை சொல்லி என்ன ஆகப்போகுது

கடலில் மூழ்கினாலும் 
காக்கை அன்னமாகாது

ஆதால் ஒரு வீரனை எவ்வாறு வாழ்த்த தெரியனுமோ அதைவிட
ஒரு துரோகியை நூறு மடங்கு தூற்ற வேண்டுமாம் 

அந்த பணியை  செய்துகொண்டே இருப்பான் இந்த கேனக்கிறுக்கன்,

தொன்மையின் மொழி அழகில் விளைந்த எம்
தொப்புள்கொடி உறவு
மரணத்தைத் தழுவி மீண்டும் சிங்கள நாயே
மரண தன்டனை தர உமக்கு எங்கள்
தம்பி தலைமையிலே எமது தம்பிகள் திரள்வாரடா
நம்பு உன் தலைமைய திருகுவாராடா
என்று கவிமுழக்கமிட்ட கவிஞனின் கூற்றுப்படி தமிழீழம் பிறக்கும்

வரலாறு எப்பொழுதும் நேர்கோட்டில் செல்வதில்லை என்பதை உணர்ந்து
தேசம் கடந்து எம் தலைவர் வாழ்கிறார் என்ற பெருமையோடு நான்,,,

3 comments:

  1. வாழும் வள்ளுவரா? இவரா? சுயநலத்தின் மொத்த உருவம்,தமிழினத்தை அழித்தவன்,பதவிக்காக ..... தின்பவன்

    ReplyDelete
  2. நல்ல பதிவு தோழரே தொடரட்டும் உங்கள் பணி................. வருகைதாருங்கள் சிந்திக்கவும் இணையத்திற்கு. உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

    ReplyDelete
  3. நல்லா நச்சுனு இருக்கு சிகா, லெனின் ... உங்களுக்காக ஒரு விருது இதோ.. http://sadharanamanaval.blogspot.in/2012/02/blog-post_20.html

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..