Friday 2 March 2012

மாணவர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் கல்வி நிறுவனங்களும் வங்கி அதிகாரிகளும் அரசியல்வாதிகளும்

             தானும் தன் குடும்ப வளர்ச்சிக்காக தன் இனத்தின் மீதும், தமிழ்மொழியின் மீதும் எவ்வித அக்கரையும் இல்லாத நிலைக்கு நம்மை தள்ளிவிட்ட பல அயோக்கிய அரசியல்வாதிகளினால்  எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என  பல்லாயிரம் ஆண்டுக்கு மேலாக வீர முழக்கம் இட்ட ஒரு இனம் இன்று முற்றிலுமாக துரோகிகளால் அழிக்கப்பட் நிலையில்

          தனது தொன்மை வாய்ந்த இலக்கண இலக்கிய மரபுகளை தனக்கு மட்டுமே உரியது என கொண்டுள்ள கலப்புக்கள் அற்ற தூய மொழியாக மங்காத புகழோடு  பல்லாயிரம் கல்வெட்டுக்களை வரலாற்று சான்றுகளாக இன்றும் கொண்டு சிறந்து விளங்குகின்ற தனது தாய்மொழியாகிய தமிழ் மொழியை மட்டும் இன்றும்கூட கொஞ்ச கொஞ்சமாக இறந்தகாலத்திற்கு முடிசூடிட காத்திருக்கின்ற இத்தருனத்தில்.

                       அழகான கொஞ்சும் தமிழை அரவணைத்து வளர்ப்பது நம் தமிழர்களின் அனைவரின் கடமை..  என்ற உணர்வோடு எனக்கு சரிவர எழுத படிக்க தெரியாததினால் பல எழுத்துபிழைகளுடன்  எனது இந்த  பதிவு...


           தினசரி ஊழலால் பெருமை தேடிக்கொண்டிருக்கும் நம் பாரத தேசத்தில், வேகமாய் விடிந்து கொண்டிருக்கும் இந்த விஞ்ஞான உலகத்திற்கு ஒப்பாய் பல மாணவர்களும் ஒரு வெளிச்சத்தைக் கொண்டுவந்துவிடுவோம் என்ற தன்னம்பிக்கையில்

              மாண்ட பின்பும் மனிதன்  பிரயோஜனமற்றுப் போவார்கள் என்பதை மறந்து இன்றுவரை சுய சிந்தனை அற்ற முட்டாள்களாய்  மனித வாழ்க்கையை அலட்சியம் செய்த ஏமாளியாய் பல மாணவர்களை ஆக்கிய பெருமை யாரைசேரும் என என்னிடம் கேட்டால் நான் சொல்லுவேன் பல ஆசிரியர்களையும் அரசியல்வாதிகளையும் சேருமென ஒற்றைவரியில்,, ஆம்
                 
           நேற்றைய செய்தித்தாளில் 9வது படிக்கும் 15 வயது  மாணவன் தனது சட்டை முன்பகுதியில் பீர் பாட்டிலை மறைத்து சைக்கிளில் சென்றபோது அது குழுங்கி வெடித்ததினால் உயிர் பறிபோகும் சோகம் நேர்ந்தது. அதற்கு காரணம் ஆசிரியர்களா? அல்லது உயிர்காக்கும் மருத்துகளையெல்லாம் தனியார் வசம் கொடுத்துவிட்டு உயிரை எடுக்கின்ற மதுவை தரமான முறையில் தயாரித்து தங்குதடையின்றி இரவு 11 மணிவரை  கொடுத்துக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளா?  என குழம்பியபோது எனக்கும் ஒரு குவாட்டர் அடிக்க ஆசை வந்துவிட்டது.

          பள்ளி மாணவன் கத்தியால் குத்தி ஆசிரியர் படுகொலை நிகழ்த்தியபோது ஆசிரியர் இனமே பொங்கி எழுந்தது, கண்டன பேரணியோடு கண்ணீர் தழுவியது.
    
    இடமாறுதலில் முறைகேடு நடக்கிறதை கண்டித்தும் 5வது 6வது 7வது என சம்பள கமிசனை நடைமுறை படுத்து எனவும் மத்திய அரசு ஊழியருக்கு நிகரான சம்பளம் வழங்க வேண்டும் என பல போராட்டம் நடத்துகின்ற ஆசிரியர்கள்
   
     தமிழகத்தை தலைநிமிரச்செய்யப்போகும் இந்தம்மா ஜெ அடித்துவைத்த 100 கோடி புத்தகங்கள் மூளையில் முடக்கி போட்டுவைத்திருப்பதை பற்றியே, சமச்சீர்கல்விக்காக 150 நாட்களுக்குமேல் பள்ளியில் பாடம் நடத்தாமல் இருந்தபோதும் எத்தனை ஆசிரியர்கள்  வீதியில் இறங்கி போராடினார்கள், அல்லது கவலைபட்டார்களா?
     
     காரணம் அரசு வேலை பார்க்கும் அத்தனை ஊழியர்களின் மகன், மகளை நம்பியே காசுபார்க்கும் பல தனியார் பள்ளிகள்  இயங்குவதால்  அவர்களுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை.

        தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகள் 25 சதவீதம் சேர்க்கப்பட வேண்டும். அவர்களுக்கு இலவச கல்வி அளிக்கவேண்டும். அதற்கான கட்டணத்தை அரசு ஏற்க வேண்டும் என சட்டத்தில் உள்ளது அதை யாரும் இதுநாள்வரை எந்த பள்ளிகளிலும்  பின்பற்றுவதில்லை
 
        பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகள் 25 சதவீதம் அளிக்க வேண்டும் அதற்கு ஆதரவாகவோ அல்லது அதைப்பற்றிய ஒரு விழிப்புணர்வையோ எந்த ஆசிரியராவது பாமர தமிழ்சாதியிடம் கொண்டு சேர்க்கவில்லை ஆனால் விடைத்தாள் மதிப்பீடு ஊதியத்தை 3 மடங்காக உயர்த்த வேண்டும் என தெருவில் இறங்கி போராட்டம் மட்டும் செய்கின்றனர் ஒற்றுமையுடன் ஆசிரியர் கூட்டணி

    முளைக்காத தானியங்களைப்போல் சாக்கடை நாற்றத்தோடு கழிவுநீர் ஊற்றுகன் அருகே அடுத்த வேளை சோற்றுக்கு வழியின்றி  இளஞ்சிறார்களுக்கு பகலில் மட்டுமே கனவுகானச்சொன்ன நம்ம கலாம் அவர்களோ, அல்லது வேறு எந்த அரசியல்வாதிகளோ இதைப்பற்றி கவலைப்பட்டுள்ளனரா?

      குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பெற்றோருக்கோ அல்லது மாணவருக்கோ தேர்வு நடத்தக்கூடாது. இண்டர்வியூ நடத்தக்கூடாது. அவ்வாறு நடத்தினால் முதல் முறையாக தலைமை ஆசிரியருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் மீண்டும் அந்த தவறை செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.
இதைமட்டும் நடைமுறைபடுத்தினால் விதிக்கின்ற அபதாரத்தின்மூலம் வருடத்திற்கு பல ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துவிடும் தமிழக அரசுக்கு

      இப்போதெல்லாம் பழைய காலத்தைபோல் யாராவது ஒரு ஆசிரியராவது எதாவது பொதுத்தொண்டுக்கு செய்து வந்துள்ளார்களா?  என்பது காலத்தின்  உண்மைக்கு மட்டுமே வெளிச்சம்

             மாணவர்கள் வாழ்வில் தானும், தன் குடும்பமும் குறையேதும் இல்லாத நிறைவான வாழ்க்கை  தரக்கூடிய கல்வி  கற்றுக்கொடுக்ககூடிய ஆசிரியர்கள்  பலர் டாஸ் மாக் பார் ஏலம் எடுத்து நடத்திவருகிறார்கள் என்பது பலருக்கு தெரியாது இதுதான் கொடுமையிலும் கொடுமை
             
      இப்போதெல்லாம் மனிதனாக பிறந்து வாழ்க்கையை நன்றாய் ருசித்து வாலிபப் பருவத்தை ஓட்டி முடிப்பதற்கு  தடையாய் இப்போதெல்லாம் வசதிபடைத்த எந்த தாய், தந்தையும் நாமக்கல், திருச்சங்கோடு போன்ற பள்ளியெனும் சிறையில் குறைந்தது 10 வருடம் அடைத்து படி, படி என கொடுமை படுத்துகின்ற அவலத்தை  என்னவென்று சொல்லுவது.

        கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி படிக்க வசதியில்லாமல் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திக்கொள்ளக்கூடாது என்பதை கருத்தில் கொண்டுதான்  கல்வி கடன் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது எல்லோருக்கும் அது கிடைப்பதில்லை அப்படி கிடைக்கவேண்டும் என்றால் நம் தழிழினத்தை கொன்றொழித்த காங்கிரஸ்காரன் உதவி , வேண்டும் அல்லது அரசியல்வாதிகளின் அனுசரனை வேண்டும்

      தான் ஒருவன் கல்வி கற்பதால் ஒரு சிறைசாலை மூடப்படுகிறது என்ற பழைய கதையை புறந்தள்ளும் விதமாக எதிர்காலத்தில் மாணவர்கள் பலர் கொலைசெய்டும்  எண்ணத்தை  உருவாக்கி சிறைச்சாலையை நிறைய திறந்திட வழிவகை செய்ய வேண்டாம் அரசியல்வாதிகளே ஆசிரியர்களே



        பல முறை கல்விக்கடனு்ககாக அலைந்தபோது இப்போது கல்விக்கடன் கிடையாது என திரும்ப திரும்ப முடிவை சொல்லுகிறார்கள் பேங்க் அதிகாரிகள்
முற்றும் முடிந்துபோன கதையாய் திமிராய் சொல்வதால்

     கோபம் முற்றிபோவதால்  கொலைகூட செய்யும் அளவிற்கு  தவறான பாதைக்கு பல மாணவர்களை எண்ணங்கள் மாறிவிடுகின்றன என்பதுதான் கொடுமை
    கல்விக்கடன் கிடைக்காததினால்
கைக்குட்டைதான் எனக்கு உதவியது என பல மாணவிகள் கண்ணீர்  துடைத்துக்கொண்டு போகும் பரிதாப நிலையை என்னவென்று சொல்லுவது இது யார் குற்றம்

    படித்துவிட்டு எதையோ தேடி எதையோ பெறுவதற்காக கவுரவத்திற்காக பல பெற்றோர்கள் பால்மாட்டை நம்பி விற்று பணம் கட்டி தன் பிள்ளைகளை பஸ்சுக்கு கூட கொடுத்துவிட காசில்லாம் அல்லல்பட்டு படிக்க வைக்கின்ற கொடுமை தமிழகத்தில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது

பல மாணவர்கள் தோல்வியின் சோகத்திலிருந்து விடுபட முயற்சி செய்து   தன்னோடு தன் எதிர்கால வாழ்வை  ஏமாற்றிய அரசியல் வாதிகள் நிறைந்து வாழுகின்ற போது தான் வாழும் வாழ்க்கை தேவையா என தன்னையே சாம்பலாக்கிகொண்டது எத்தனை ஆசிரியர்கள் மற்றும் கல்விக்கடன் கொடுக்க மறுக்கும் பேங்க் அதிகாரிகளுக்கு தெரியும்

    நம் பாமர தமிழ்சாதி பாதியில் சிந்திக்க மறந்துவிடும் காரணத்தால், அவ்வப்போது ப, சிதம்பரம் அள்ளிவிட்ட வார்த்தைகளில் சில

    2009-10-ம் ஆண்டில் இருந்து கல்விக் கடன் பெற்ற மாணவர்களிடம் வங்கிகள் வட்டி வசூல் செய்திருந்தால் அவை கடன் தொகையில் கழித்து வரவு வைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார் அதை எத்தனை பேங்க் அதிகாரிகளாவது பின்பற்றினார்களா?
(அல்லது)
    2009-10-ம் கல்வி ஆண்டு மற்றும் அதற்கு பிறகு கல்விக் கடன் பெற்ற மாணவர்கள், படிக்கும் காலத்தில் வட்டி செலுத்த தேவையில்லை. இது தொடர்பான உத்தரவுகள் அனைத்து மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன. இதை யார் இப்போது பின்பற்றுகிறார்கள் சொல்லுங்கள் பார்ப்போம்

            எந்த வங்கியேனும் 2009-10-ம் கல்வியாண்டு மற்றும் அதற்கு பிறகு வாங்கிய கடனுக்கு மாணவர்களிடம் வட்டி கேட்டால் அவர்கள் அருகில் உள்ள கனரா வங்கியை தொடர்பு கொள்ளலாம். அவர்கள்தான் இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வங்கிகளுக்கு தேவையான விளக்கத்தை கனரா வங்கியைச் சேர்ந்த அதிகாரிகள் அளிப்பார்கள் என சொன்னார்கள் யாரும் இதைப்பற்றி இன்றும் கருத்து கூறுவதில்லை

      அதே சமயத்தில் 2008-09-ம் கல்வியாண்டு மற்றும் அதற்கு முந்தைய கல்வி ஆண்டுகளில் கல்விக் கடன் பெற்றவர்கள் அனைவரும் வட்டி செலுத்த வேண்டும். இதில் எவ்விதத்தில் ஞாயம் சொல்லுங்கள்

              கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்பெக்ரம் வழக்கில் கரைபடிந்த சிதம்பரரம் கையினால் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. அதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில்  மாவட்டத்தில் மட்டும் 4369 பேருக்கு ரூ.37.79 கோடிக்கு கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது  வாங்கிய கல்விக்கடனக்கு அனைவரும் வட்டி கட்டிகொண்டுதான் வருகிறார்கள்

ஏதோ நம்மாள்  முடிந்ததொன்றை அழகாய் கல்வி அறிவின்மூலம் இந்த பூமி பந்தில்  மாற்றுவதற்காக
படிக்கின்ற பலமாணவர்கள்
நொந்து நூலாகி மனம் வெந்து
கந்தலாகி தன் எதிர்கால கடமை மறந்து,
துயரத்தில் மூழ்கிய தனக்காக கடன்வாங்கிய அம்மா அப்பாவை நினைத்து
எண்ணித் துணிக கருமம்... என்ற வள்ளுவன் சொல்லை மாற்றி கொலையும் செய்வார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள் அரசியல்வாதிகளே,  ஆசிரியர்களே

4 comments:

  1. // 2009-10-ம் கல்வி ஆண்டு மற்றும் அதற்கு பிறகு கல்விக் கடன் பெற்ற மாணவர்கள், படிக்கும் காலத்தில் வட்டி செலுத்த தேவையில்லை//
    இதை வங்கிகள் வசதியாக மறந்துவிட்டன. இதை அனைத்து வங்கிகளும் தாங்கள் அறிவிப்பு பலகையில் வெளியிட்டு மேற்கூறிய ஆண்டிலிருந்து வங்கிக் கடனைப் பெற்றவர்களுக்கு இந்த அறிவிப்பு கடிதத்தை வீட்டிற்கு அனுப்பி வைக்கலாம். தபால் செலவுக்கு வேண்டுமானால் அந்தந்த மாணவனுடைய வங்கி கணக்கில் இருக்கும் தொகையினை கழித்துக்கொள்ளட்டும்.

    ReplyDelete
  2. பொதுவாகவே நமது கல்விமுறையே வாழ்கைக்கு உதவாத கல்விமுறைதான்..

    ReplyDelete
  3. நல்ல அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழரே..

    ReplyDelete
  4. கத்தி கத்தி நம் தொண்டை தான் வறண்டு போகுது.

    மேலே இருக்கும் பாப்பா செம க்யூட்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..