தமிழகத்தில் மின்சாரம் இல்லா சூழலில் குடிக்க தண்ணீர் இல்லாத இந்த நேரத்தில் அரசு தயாரிக்கும் மதுபான தொழிற்சாலைக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கின்ற தமிழக முதல்வர் செயலலிதா இருக்கும் திசையை நோக்கி வணங்கிவிட்டு என் கிருக்கலான பதிவை எழுதுகிறேன் இதோ.....
நிலை மாறும் உலகில் மாறாமல் இருப்பது பதிவு எழுதுகின்ற உள்ளங்களும், எண்ணங்கள் மட்டும்தான் என்பதற்கு எடுத்துக்காட்டாக
கம்பளிப்பூச்சியாய் கூட்டுக்குள் குறுகி இருந்த பலரை இன்று பலதரப்பட்ட நட்புகளை உறவாக்கிக்கொண்டு தனது எழுத்தின் பயனமாக உலகை சுற்றிவரும் அழகிய வண்ணத்துப்பூச்சிகளாய்! மாறிவிட்டார்கள் நம் வலைப்பதிவர்கள் என்றால் அது மிகையல்ல
உறவுகளே
சொல்லும் போதே நா கூசுதே..
ஈழத்தில் எம் உறவுகளும், சகோதரிகளும் நிர்வாணப்படுத்தும்போது மத்திய அரசில் அங்கம் வைத்துக்கொண்டு கொலைகார காங்கிரஸ் கையை பிடித்துக்கொண்டு, வாயை பொத்திக்கொண்டு
வேர்களுக்கு சுடுதண்ணி ஊற்றிவிட்டு இப்போது
விளைச்சல்மீது அக்கரை கொள்வதுபோல்
நடிக்கின்ற
கருணாநிதி, தெருமாவளவன், ராமதாசு, சுப.வீ, அடிமைமணி போன்றோர் நடிப்புகளை கண்டு நெஞ்சுக்குள் எரிகின்ற வயித்தெரிச்சலை பதிவாக கொட்டுவதற்கு ஏற்ற இடம் இந்த பதிவு அல்ல
தனது இலக்கிய கவிதையாலும், எழுத்து நடை திறமையாளும் கவிதைகளை மட்டுமல்ல வாழ்வில் நாம் சந்திக்கின்ற அன்றாடப் பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை பெற்றவர்கள் நம் பதிவர்கள் என்பதில் நான் எல்லையில்லா மகிழ்வு காண்கிறேன்
மனிதனின் பலவேறு மனங்களை ஒன்றாக இணைப்பது மட்டுமல்ல நம் மனதிற்குள் எவ்வளவு துன்பச் சுவடுகள் மறைந்திருந்தாலும் நாம் பதிவு எழுதி அதற்கு மறுப்புகளும், பாராட்டுதலும் பெருகின்றபோது இன்பத்தின் உச்சதிற்கு சென்றுவிடலாம் அப்படி ஒரு சந்தோசம் நம் பதிவர்களின் பதிவை படிக்கும்போது
அநியாயத்தை கண்டு பொறுக்கவே முடியாமல் மன உளைச்சலோடு அரசியல்வாதிகளின் மீது ஒருவித வயித்தெரிச்சலை கொட்டி பல இளைஞர்களின் நெஞ்சங்களில் அனல்தீயை கக்கும் அளவிற்கு தீயை பற்ற வைக்கும் தீக்குச்சித்தான் நம் பதிவர்கள் எழுத்து என நினைக்கும்போது நெஞ்சு உண்மையில் நெகிழ்கிறது,,,
. ஊழலலோடு வாழ பழகிகொண்ட மக்களாய் நம்மை பழக்கப்படுத்தியது மட்டுமல்ல அரசியல்வாதிகள் அதிகாரிகள் அனைவரும் கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருப்பதால் லஞ்சத்தால் இந்தியா மிக மோசமாக கெட்டு உலக அரங்கில் ஊழலால் மிக கேவலமாக தலைநிமிர்கிறது இந்தியா இதைப்பற்றிய அக்கரை பல பாமர மக்களிடம் கொண்டு செல்கின்ற பதிவர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை சொல்லிக்கொண்டு,
இங்கு இந்தியாவில் கோவணம் கட்ட வக்கில்லாமல் லட்சக்கணக்கில் மக்கள் வறுமையில் சாகும்போது ஜனாதிபதி பிரதீபா பாட்டில் உலக நாடுகளை சுற்றிப் பார்த்து வந்த செலவு மட்டும் 250 கோடி செலவைபற்றியும்
எந்த ஒரு அரசு அலுவலகம் சென்றாலும் அங்கே லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது என்ற பெருமையை உருவாக்கிய
ஆண்ட கருணாநிதியும்
ஆளுகின்ற செயலலிதா என்பது நாம் அனைவருக்கும் நன்கு தெரியும் இது நம் தமிழகத்துக்கும் ஏற்பட்டிருக்கும் தலைக்குனிவுதான்
ஆனால் இதை மாற்ற முயற்சிக்காமல் 100 ஆண்டுகளில் செய்ய முடியாததை 100 நாட்களில் செய்ததாக 25 கோடி விளம்பரம் செய்த முதல்வர் செயலலிதாவை பற்றியும் ஆளும் வர்க்கத்தின் அடாவடிதனத்தை நம் மக்களிடம் எழுத்தின்மூலம் எடுத்துச்சொல்லி ஓர் விளிப்புணர்வை ஏற்படுத்திகின்றவர்கள் நம் வலைப்பதிவர்கள்தான்
மழைக்காலதில்கூட மழை தராமல் இயற்கை நம்மை வஞ்சித்திருக்கும் இந்த வேளையில்,,,
சென்னையில் பதிவர்களால் சின்ன சின்ன
தூறல் போடும் சிந்தனை துளிகளால்
இன்றும் பலர் மனசில் பெருவெள்ளமாய்
கடல் கடந்து இதயத்தை தொட்டுவி்ட்ட நதிகளாய்
நம்மோடு மனம் மாறி பல கருத்துக்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள் உலகில் ஒட்டுமொத்த சமுதாய மனித இன வளரச்சியின் விடியலுக்காக எப்போதும் உறுதுணையாக திகழ்கின்ற நம் பதிவர்கள்
ஓராயிரம் கதை பேசி
ஒன்றாய் கூடி
ஓயாத நினைவலைகள் நெஞ்சில் பதிய உள்ளார்கள் நம் பதிவர்கள் ஆம்
பதிவர்களுக்கான சந்திப்பு திருவிழா வருகின்ற 26/8/2012 அன்று சென்னையில் கோலாகலமாக துவங்க உள்ளது,
இதில் யாரெல்லாம் வராங்க தெரிஞ்சிப்போமா?
வரும் ஞாயிறு 26.08.2012,அன்று சென்னையில் நடைபெறும் " தமிழ் வலப்பதிவர்கள் சந்திப்பு விழாவுக்கு .மின்னஞ்சல் மூலமாகவும் அலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு பதிவர் சந்திப்பிற்கு வருவதாக உறுதி அளித்த பதிவர்கள்,மூத்த பதிவர்கள் மற்றும் கவியரங்கில் கலந்து கொள்ள இசைந்தவர்கள் பட்டியல் கீழே ..
பதிவர் பெயர் விபரங்கள் :
38. ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
கேணக்கிருக்கன் லெனின்( கீரமங்கலம்)
73. தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
89. சைத அஜீஸ்,துபாய்
97. அகிலா (கோயம்புத்தூர்)
98. இரா.தெ.முத்து(திசைச்சொல்)
100. ஃபாருக் முகம்மது (எண்ணங்களுக்குள் நான் )
105. "AKKAPORU" Raja
106. Puratchi Mani
மூத்த பதிவர்கள்
கவியரங்கில் பங்குபெறுவோர்
4. ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
16. மணவை தேவாதிராஜன்
பதிவின் சிறப்பு குறித்தும்
ReplyDeleteபதிவர்களின் சிறப்பு குறித்தும்
விளக்கியவிதம் மனம் கவர்ந்தது
சந்திப்பில் தங்களைச் சந்திப்பதில
பெருமையாகக் கருதுகிறேன்
tha,ma 1
ReplyDeleteவாங்க சார் பழகலாம் :)
ReplyDeleteஇனிய சந்திப்பு
ReplyDeleteபதிவர் விழாவில்
வாழ்த்துக்கள்